Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 டிச., 2010

டிசம்பர் 29, 2010

அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப் கணினி விடயம்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்.



உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

1 டிச., 2010

டிசம்பர் 01, 2010

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010



மனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட அம்சமாகும்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த பாலியல் நோய் இருந்து வந்தாலும் ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை என்பதும் ஒரு விசித்திரம். அவன் உலகில் தோன்றிய காலம் தொடக்கம் இறைவனால் பல வகையான அறிவுரைகள் காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன. இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமிய சமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையான நோயும் ஒன்றாகும்.

மேலும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனை ஒழிப்பது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அதனைக் குறைக்க முடியும் என்பது தான் கண்டு கொண்ட உண்மையாகும்.

மனிதனினால் தீர்க்கப்படாத பிரச்சினையில்  இந் நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின் அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால் அவனால் இதனை சரியான முறையில் அடையாளம் கண்டு அதற்கான மருந்தினை வழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கே பாரிய சவாலாக விளங்குகின்றது.

உலகெங்கும் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும் டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ் தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை இந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளை எடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு இவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது. 2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  
செப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 25 வீதம்  குறைந்துள்ளதாக எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான ஐ.நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.

எயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.

ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

HIV/AIDS  பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்
·         இந் நோய் (மனித பெற்ற நீர்ப்பீடண குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடண குறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)
·         HIV தொற்று ஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றலாம்.
·         மருந்துகளினால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்த முடியாது
·         நீங்கள் HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து  உங்களையும் காப்பற்றலாம்.
எவ்வாறு கடத்தப்படுகிறது
·         பாதுகாப்பற்ற ஊடுருவும் வகையிலான உடலுறவு
·         குருதியேற்றலின் போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்பு மாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப் பொருள்களைப் பெறல்.
·         தோற்றடைந்த ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனைய உபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.
·         HIV தொற்றடைந்த தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,

HIV/AIDS  பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது
·         கட்டித்தழுவுதல்.
·         முத்தமிடல்.
·         கை குலுக்குதல்.
·         உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.
·         நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.
·         ஒரே தடாகத்தில் நீந்துதல்.
·         மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.
இதனை எவ்வாறு தவிர்க்கலாம்
·         பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்.
·         பாலுறவில் ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.
·         ஆணுறைகளை சரியாகப் பயன்படுத்துதல்
·         பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.



7 நவ., 2010

நவம்பர் 07, 2010

எதனை கூடுதலாக பயன்படுத்துகிறார்கள்

இன்று உலகில் பல்வேறு பட்டவர்கள் கணினியை பயன்படுத்துகிறார்கள், பல தேவைகளுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் எல்லோரும் ஒரே விதமான தேவைகள் உடையவர்கள் அல்ல என்பது இதில் அறிந்திருக்க வேண்டிய விடயமுமாகும். 



சிலர் தொழிலுக்குப் பயன்படுத்துவார்கள், சிலர் அறிவுக்குப் பயன்படுத்துகிறார்கள், சிலர் வருமானத்தை பெருக்கிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள் அத்துடன் வித்தியாசமான மென்பொருள்களையும் இவர்கள் நாளாந்தம் பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாவற்றிக்கும் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  மேலும் பொதுவான விடயமாக நான் தரப்போவது உலகில் இன்று அதிகமாக எந்த விதமான மென்பொருள்கள், சமூக இணைத்தளங்கள் மற்றும் ஏனைய தளங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றது என ஆராய்வோம்.

 இவை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.
இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்
உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்
அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்

அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.

26 அக்., 2010

அக்டோபர் 26, 2010

2012 ஆம் ஆண்டில் தாக்க இருக்கும் சூரியச் சூறாவளி

100மில்லியனஹைட்ரஜனகுண்டுகளினசக்தி கொண்மிகப்பெரிசூரியப்புயலஒன்று 2012ஆமஆண்டஏற்படுமஎன்றுமஇதனாலபூமியிலபலத்சேதங்களஏற்படுமஎன்றுமவிஞ்ஞானிகளதெரிவித்துள்ளனர்.

நாடுகளினமின்சாவினியோஅமைப்புகளுமதகவலதொடர்பஅமைப்புகளுமபலத்சேதமடையுமஎன்றவிஞ்ஞானிகளகூறியுள்ளனர்.

விமானபபோக்குவரத்து, மின்னணுசசாதஅமைப்புகள், கப்பலபோக்குவரத்திற்கஉதவுமஉபகரணங்களமுக்கியமாசெயற்கைககோள்களவேலசெய்யாது.

நாசாவினசூரியப்பௌதீகபபிரிவவிஞ்ஞானி டாக்டரஃபிஷரஇதபற்றிககூறுகையில் 100 ஆண்டுகளிலஅசாதாரசக்தி கொண்இந்சூரியப்புயலமுதனமுதலாகததாக்கவுள்ளது. இதனாலபெரிஅளவுக்கமின்வினியோகததடைகளும், தகவல்தொடர்பசிக்னல்களஇழக்கப்படும். என்றஎச்சரித்துள்ளார்.

சூரியப்புயலதாக்குகையிலசூரியனினவெப்அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையுமகடந்தவிடும்.

இந்சூப்பரசூரிசூறாவளி இடி இடிப்பதபோன்றநிகழும். பூமியினகாந்தப்புலங்களநம்பி இயங்குமநமததகவல்தொழிலநுட்உலகமபெரிதுமபாதிக்கப்படுமஅபாயமஉள்ளது.

இந்வகஅதிசக்தி சூரியப்புயல் 2012 ஆமஆண்டிலஅல்லதநிச்சயமாக 2013ஆமஆண்டிலஏற்படுமஎன்பதஉறுதி ஆனாலவிளைவுகளபற்றி இன்னமுமஆய்வுகளநடைபெற்றவருகின்றன.

இந்தசசூரியப்புயலாலஏற்படுமசூரிஎரிதழல்களபூமியினகாந்தபபுலத்தபாதிக்கும். ஆனாலஇதமிகமிகவேகமாநடக்கும், ஒரஇடி இடிப்பதபோன்நேரத்திலஅனைத்துமநடந்தமுடிந்தவிடுமஎன்கிறாரநாசவிஞ்ஞானி பிஷர்.

இதனாலஏற்படுமமின்வினியோஅமைப்புகளசேஉள்ளிட்பிசேதங்களசீரசெய்மிகப்பெரிஅளவிலபணமசெலவழியுமஎன்பதோடநீண்காலமபிடிக்குமஎன்பதுமஉண்மை.

சூரியசுழற்சியில் 24ஆமகட்டத்தஅதஎட்டுவதாலஇந்நிகழ்வதவிர்க்முடியாததஎன்கின்றனரவிஞ்ஞானிகள்.

இந்தககண்டுபிடிப்புகளஆஸ்ட்ரேலியனசயன்ஸஎன்பத்திரிக்கையிலவெளியாகியுள்ளது.

Resource 
webdunia.com

15 அக்., 2010

அக்டோபர் 15, 2010

அதிசயம்! ஆச்சரியம்!! சிலியில் ஆனால் உண்மை

உலகில் மனிதனுடைய பல்வேறு முயற்சிகளுக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளன. அவன் நாளாந்தம் நம்ப முடியாத பல்வேறுபட்ட விடயங்களை நிகழ்த்தி வருகின்றான் அவனது நடவடிக்கைகள் எங்களால் நம்வே முடியாமல் உள்ளது. இந்த வகையிலும் சிலி நாட்டில் நடந்த சம்பவம் யாரும் நம்பமுடியாத மனிதனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். 
தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாடு தெரியாமல் இல்லை ஏனெனில் பல தமிழ் பேசும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள் அத்துடன் இந்த நாட்டில் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் அந்த நாட்டின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த சின்ன நாட்டில் அடிக்கடி பல பல விநோனதமான சம்பவங்கள் நடப்பது இயல்பு தான்.

நிலக்கறி அகழ்வு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வரமுடியாமல் அங்கே தவித்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை இலாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார்கள் என்பது கேட்கே எங்களால் நம்ப முடியாமல் இருக்கிறது.

69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை  துளை குழாய் உறை மூலம் வெளியே கொண்டு வந்துந்துள்ளனர்

010.08.10 ஆம் நாள் 700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.

2010.10.13 ஆம் திகதி சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.

இலங்கையைப் போன்ற நாட்டில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் விடயம் வெளியே கசிவதற்கு முன்பாகவே உள்ளே சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது அழிக்கப்பட்டிருப்பார்கள்.

2010.10.14 ஆம் திகதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்நாட்டு அதிபர் செபஸ்டின் தனது குடிமக்கள் மீது வைத்திருக்கும் அன்பு, மனிதாபிமானம் இலங்கை போன்ற நாடுகளில் பற்றாக்குறைவாக இருப்பது தான் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.









மேலும், 2010.10.14 சர்வதேச நேரம் அதிகாலை 02.05 மணிக்கு உள்ளூர் நேரம் இரவு மணி 21.05 க்கு 31 வது தொழிலாளி வெளியே கொண்டு வரப்பட்டார். உள்ளூர் நேரம் 21.56 மணிக்கு இறுதியாக இருந்த 33 வது சுரங்கத் தொழிலாளியான லுஸ் உர்ஷாவும் வெளிக் கொணரப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

இவ்வாறு அதிசயக்கும் வகையில் இந்த தொழிலாளர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு உயர் காக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கேட்கும் போது நமக்கு நிச்சயமாக சந்தோஷமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

13 அக்., 2010

அக்டோபர் 13, 2010

சுயமாக ஓடும் கார் கண்டுபிடிப்பு

சாரதியில்லாமல் சுயமாக ஓடக்கூடிய காரினை அமெரிக்காவின் கலிபோனியா மாணிலத்தில் கூக்குள் நிறுவனத்தின் சொப்வெயார் பொறியிலாளரான செமஸ்டின் கண்டுபிடித்துள்ளனர் அத்துடன் அதனை ஓடவைத்தும் பரீசோதனை செய்தும் பார்த்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
காரின் மேல்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள வீடியோக்கமரா, ராடர் கருவி, சுற்றவரச் செல்லுகின்ற வாகனங்களின் துாரத்தினை அளவிடக்கூடிய லேசர் கருவிகள் என்பன இவற்றில் பொருத்தப்பட்டிருந்தன. இருந்தும் இது ஒரு பரிசார்த்த நடவடிக்கையாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை பலவகையான போக்குவரத்து நெரிசலிலும் (அமெரிக்காவின் சன்பரான்ஸின்) ஓடக்கூடிய வகையில் இந்த கார் பரிட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது. 

இந்தச் சோதனையின் போது எந்தவிதமான விபத்துக்களும் இல்லாமேலே ஓடியிருக்கின்றன. ஆனால் ஓரு தடவை மாத்திரமே இந்தக் காருக்குப்பின்னால் வந்த கார் இதனுடன் மோதியிருக்கிறது. 

இத்திட்டத்தின் பிரதான நோக்கம் போக்குவரத்து பாதுகாப்பு முக்கியமே தவிரே வேறு எந்த நோக்கமும் எங்களிடமில்லை என இந்த பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.  இந்த கார் ஓடுவதற்கான போக்குவரத்தி வரைபடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டன, மற்றும் இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு வருடத்தில் 12லட்சம் பேர் வாகன விபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது வெற்றியடைந்தால் இந்த விபத்தின் அளவு குறைவடையும் எனவும் ஆர்வீடம் கூறுகின்றனர்.

மேலும் இது வெற்றியளித்தால் பல வகையான நன்மைகளை நாங்களும் பெற்றுக்கொள்ள முடியும். 

நன்றி BBC



10 அக்., 2010

அக்டோபர் 10, 2010

இலங்கையில் உலக கின்னஸ் தேனீர் சாதனை!

உலகில் பல்வேறுபட்ட நாடுகளில் பல சாதனைகளை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில்  மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல சாதனைகளை நிகழ்த்தி வந்த காலம் மாறி இப்போது அதுவும் கின்னஸ் சாதனை புரிய முன்வந்துள்ளது என்பதையிட்டு நானும் ஒரு இலங்கையன் என்ற வகையில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறேன்.

உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னனில் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். 

 எனவே தான் ஒரு இராட்ச தேனீர் கோப்பையை உருவாக்கி அதில் 4000 லீற்றர் தேனீரை நிரப்பி இந்த கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு இலங்கையர் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். 

இது இலங்கையில்  தலைநகர் கொழும்பில் ஏற்படுத்தப்பட்து  இந்த தேனீர் சாதனையில் ...............

தண்ணீர் - 4000 லீற்றர்
தேயிலை - 65 கிலோகிறாம் 
சீனி  125 கிலோகிறாம் 
வீவா பவுடர் - 850 கிலோகிறாம் 

 மேற்காட்டிய பொருட்களின் இணைப்புடன் இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. 

  இந்த சாதனையை 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி  அமெரிக்க, கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையம் நிகழ்த்தியிருந்தது இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.


   இதனை செய்வதற்காக விசேடமாக 10 அடி உயரமும் 8 அடி அங்குலமும் கொண்ட கோப்பை உருவாக்கப்பட்டிருந்தது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களினால் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டது. தேநீரைச் சூடாக வைத்திருக்க, மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

பலர் இங்கு வந்து இந்த தேனீரை குடித்து அவர்களும் இந்த சாதைனை பெறுமையை தட்டிச் சென்றனர்.
 
   கிளாக்சோஸ் மித் கிளையின் என்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  இந்த நிறுவனத்தின் வீவா பவுடரை விளம்பரம் செய்கின்ற  JWTea நிறுவனத்தினர் இந்த இராட்சத கோப்பை தேனீர் சாதனையை நிகழ்த்திருக்கின்றனர். 

  இது உலோகத்தினால் உருவாக்கப்பட்ட கோப்பையாகும் 4500லீற்றர் கொள்ளவு கொண்ட இந்த இராட்சத கோப்பையில் 4000 லீற்றரளவில் தேனீர் உற்றி இந்த கின்னஸ் சாதனை புரியப்பட்டது. 

   கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது. 

மேலும் இங்கே கிளிக் பண்ணுங்க..........
நன்றி



6 அக்., 2010

அக்டோபர் 06, 2010

World Teacher's Day - 2010

   இன்று இலங்கையில்  உள்ள பல லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் குழாம் தங்களுடைய ஆசிரியர் தினத்தை அவர்களின் பாடசாலைகளில் மிக விமர்சியாகக் கொண்டாடுகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. 

  ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமான UNESCO னால் ஒவ்வொரு வருடமும் ஓக்டோபர் - 5ஆந் திகதியன்று உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் அது நாட்டுக்கு நாடு வேறுபட்டு மற்றும் மாறுபட்டுக் காணப்படுவது இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும்.


மேலும், இதற்கான அடிப்படையாக கல்வி தத்துவவியலாளரான இந்தியாவைச் சேர்ந்த ராதாகிறிஷ்னன் அவர்களின் கொள்கை தழுவியதாக அமைந்து உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்தும் இலங்கை போன்ற நாடுகளில் இது 1994ஆம் ஆண்டு  ஓக்டோபர் - 6 பிரகடணப்படுத்தப்பட்டு மிக சிறப்பாக கொண்டாப்படுவது யாவரும் அறிந்த விடயமாகும். அன்றிலிருந்து தான் இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் தொழில் தொடர்பான நம்பிக்கை ஏற்படுத்துமுகமாக அன்று ஆட்சிக்கு வந்த இலங்கை முன்னால் ஜனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையாரினால் அவர்களின் பதவிக்கான பிரமாணங்கள் அமுல்படுத்தப்பட்டது என்பது மற்றுமொரு முக்கியமான விடயமாகும். 

தமிழில் சொல்லப்படுகின்றது. ”மாத, பிதா, குரு தெய்வம்” இங்கு குறிப்பிடப்படும் இந்த தமிழ் பழமொழி மனிதன் உலகில் தோன்றிய காலம் தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒரு மரபாகும். தன்னுடைய தாய், தகப்பனுக்கு அடுத்தாக இந்த குருவை நாங்கள் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று இது குறிப்பிடுகின்றது. 
மற்றும் ”குருவில்லாத வித்தை குழ் வித்தை” என்பார்கள் அதாவது நாங்கள் யாராவது ஆசானின் துணையில்லாமல் கற்றும் எந்த வகையான கல்வியும் வெறும் பெறுமதியற்றது என்பது இதன் பொருளாகும். 

எங்களுடைய நாடுகள் அன்னியர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் ஆசிரியர்களை மாணவர்கள் கடவுளாக நினைத்து அவர்களை வணங்கி அதன் பின்னர் அந்த மாணவர்களுக்கு குருக்கல் கல்வியை போதித்தார்கள் என்பது வரலாறுகள் கூறுகின்றன. 

அப்போது காணப்பட்ட ஆசிரியர் மையக்கல்வியின் ஊடாக அந்த ஆசிரியர்கள் மேலாக மதிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்த உண்மையாகும். 

மேலும், இன்றைய ஆசிரியர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை பல ஆசிரியர்களின் மன ஆதங்கத்தை நாங்கள் காணும் போது அவதானிக்க முடிகின்றது. அதாவது இன்றைய கல்வி முறை பிள்ளை மையக்கல்வியாக காணப்படுவதால் மாணவர்கள் ஆசிரியரை மதிப்பதும். கௌரவப்படுத்துவம் குறைவடைந்து வந்து கொண்டிருக்கின்றது எனலாம். இன்று உலகில் பல சிறுவர்கள் தொடர்பாக பல சட்டங்கள் இறுக்கமாக காணப்படுவதால் அவர்கனை திருத்தி சரியான பாதையில் கொண்டு செல்வது என்பது முயற்கொம்பாக காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுதல் பொருத்தமாகும். 

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் சிறுவர் சாஸனத்தில் கையொப்பத்தை இட்டு அவர்களுக்கான சட்டவாக்கத்தின் இறுக்கமான கடிவாளத்தின் விளைவாக ஆசிரியர் மாணவர் உறவில் காணப்படும் புனிதத்தன்மை சிதைக்கப்பட்டுள்ளது என்பது பல இன்றை ஆசிரியர்களின் மன உளைச்சலாகும்.
பல அறிவு மூர்ப்புக்களை அடைந்து சென்றாலும் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்து ஒரு நாட்டுக்கு சிறந்த மற்றும் பெறுமதி மிக்க சொத்தாக ஒப்படைக்கும் பொறுப்பு ஆசிரியரிடம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சிறந்த வொரு சமூகத்தின் தோற்றப்பட்க்கு ஆசிரியரின் பங்கு அளப்பெரியதாகும் என்பதில் யாரும் சந்தேகம் கிடையாது. 

எனவே இன்றைய இந்த ஆசிரியர் தினத்தில் நாமும் எமது மாணவர்களும் சிறந்த அறிவைப் பெற்று வளமான ஒரு வாழ்வியல் கூறுகளை படைப்போமாக என கேட்டு விடைபெறுகிறேன்.


ஆக்கம் 
அ.ம.தாஹா நழீம் - 
இலங்கை -2010.10.06



1 அக்., 2010

அக்டோபர் 01, 2010

Universal Child Day - 2010

 உலக சிறுவர் தினமானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் – 20 ல் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினாலும், இலங்கையில் அது ஓக்டோபர் – 01ம் திகதி நினைவுபடுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் இந்த தினத்தை தங்களுக்கு பொருத்தமான தினங்களில் கொண்டாடுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.


மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா பிரகரனத்தின் பிரகாரம் இது அமுல்படுத்தப்படுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலகில் லட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும்  வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் சுதந்திரமாகவும் வாழ்வை இயல்பாகவே அனுபவிக்க வேண்டியவர்களாகவும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற உரிமை உள்ளவர்களாக இருந்தும் அவை அனைத்தும் மறுக்கப்பட்டு அல்லது இல்லாது ஒழிக்கப்பட்டு வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் அiனாதைகளாக அல்லது ஆதரவற்றவர்களாக பிச்சைப் பாத்திரங்களுடன் அல்லலுறும் துன்பியலைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் உலகளாவிய ரீதியில் இலட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுத கலாச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டு புத்தகம் தூக்கும் கைகளில் துப்பாக்கிகளுடன் சிறுவர் படைகளாக மாற்றப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அந்த வகையில்தான் இலங்கையில் கடந்த 3 தசாப்த காலமாக தொடருகின்ற அகோர யத்தத்தின் சுவாலையில் லட்சக்கணக்கான சிறுவர்கள் தமது வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக அபத்த வாழ்வில் சிக்குண்டு  இருக்கின்றார்கள். ஆயிரக் கணக்கான சிறுவர்கள் யுத்தத்தின் கோரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.  சொந்த நாட்டுப் படைகளின் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் உயிரிழந்த, தமது அவயவங்களை இழந்த குழந்தைகள் ஏராளம். தவிரவும் யுத்தத்தினால் தாய் தந்தை உறவினர்கள் சுற்றத்தார் என்போரை இழந்து சிறுவர் காப்பகங்களின் பாராமரிப்பில் உள்ள சிறுவர்கள் ஏராளம். இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமியின் கொடூரமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புக்கும் அநாதரவானமைக்கும் காரணமாகியிருக்கின்றன.

வடக்கில் குறிப்பாக வன்னியில் தற்போது தொடர்கின்ற யுத்தத்தால் 40,000 சிறார்கள் இடம்யெர்ந்து இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள தெரிவிக்கின்றன. 35,000 க்கும் மேற்பட்ட சிறார்களின் பாடசாலைக் கல்வி முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது போன்றே கிழக்கிலும் கடந்த இரண்டு வருடங்களாக அகதி வாழ்க்கை வாழ்கின்ற அல்லது மீள் குடியமர்த்தப்படாத 5500 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ளடங்கும் சிறார்கள் பல்வேறு சமூக கலாசார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இதேவேளை யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உள ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய அபாயம் நிலவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ச்சியான யுத்தம், இடம்பெயர்வு போன்ற காரணிகளினால் சிறுவர்கள் பாரியளவில் மன உளைச்சலுக்கு உட்படக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள். நல்லூரில் அண்மையில் நடைபெற்ற ஓவிய மற்றும் கைப்பணிக் கண்காட்சியொன்றின் படைப்புக்கள் மூலம் அந்த சிறுவர்களது பாதிக்கப்பட்ட மனோ நிலை வெளிப்படடதாக பார்வையிட்டவர்கள் தெரிவித்திருந்தனர். நல்லூரைச் சேர்ந்த அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறித்த கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. அரசாங்கப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் அதிர்வு பாலர் மனதில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.



22 செப்., 2010

செப்டம்பர் 22, 2010

பணம் சம்பாதிக்க வழியா! இல்லை? வாருங்கள் இங்கு!

இன்றைய காலகட்டத்தில் மனிதனின் பல்வேறு தேவைகளின் பொருட்டு ”திரை கடல் ஓடியும் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறான்” . அவனுடைய இளமைப்பருவத்தில் பெற்றோரின் கவனிப்பில் இருந்து மற்றும் குடும்ப நிலைமைகளிலும் பலர் உழைக்க வேண்டும், உழைக்க வேண்டும் வேண்டும் என்று  ஊரை இரண்டாக்கும் உங்களும் இல்லையாமலும் இல்லை!

நான் உழைத்தவற்றை தங்களால் சரியாக அனுபவிக்கவும் தெரியாதவர்களும் இந்த உலகில் தான் இருக்கிறார்கள். பணம், பணம் அது எங்கே இருக்கு என்று ஓடி ஓடி அழுத்தவர்களும் இருக்கிறார்கள், பணத்திற்காக கொள்ளை, கொலை, மோசடி எவ்வாறான பல்வேறு மக்களை கவர்ந்து இழுத்து பணம் இல்லை என்றால் வாழ்க்கையில் வசந்தம் இல்லை என்றும் அலைந்து திரியும் நபர்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே எமது முன்னோர் பாடி வைச்சிருக்கான் நமக்கு பணத்திற்காக அலைந்து திரியும் பெற்றோர். தங்களுடைய பிள்ளைகளை சரியான முறையில் கவனிக்காமல் அது கெட்ட நடத்தைகள் என்று பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கேள்விப்படும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. 

என்னைப் பொறுத்த மட்டில் அந்தப் பணம் அளவோடு இருப்பது சிறந்ததும் அத்துடன் அதனை தேடிய அந்த நபர் அனுபவிப்பதும் தான் அதனை விட மேலும் சிறந்தது. 

நானும் நீண்ட நாட்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியும் முடியும் என்று கூவித்திரிகிறார்கள் எங்கே அது என்று அலையும் போது என்னுடைய கண்களுக்கு பட்ட ஒரு தளத்தினை உங்களுக்குத் தரப் போகிறேன். 

உங்களுக்கும் திறமையிருந்தால் நீங்களும் உங்களுடைய டெலிபோன் பிள், தன்னீர் பிள், பொக்கட் மணி என பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் மற்றும் நீங்கள் இணையத்தில் இணைந்து ரசிக்கக்கூடிய பல்வேறுபட்ட விடயங்களுக்கு அவர்கள் டொலர் கணக்கில் கேட்பார்கள் நாங்கள் இதனை வழங்கி எங்களுடைய தேவையைப் போக்கலாமே.



ஏன் இன்னும் சிந்திக்கிறீர்கள் இங்கு கீழே  கிளிக் பண்ணி பாருங்கள்
Banner  1










பின்னர் எனக்கு உங்கள் விமரசனத்தை கூறுங்கள் 

9 செப்., 2010

செப்டம்பர் 09, 2010

நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் 2010.09.10

அஸ்ஸலாமு அலைக்கும்!
கடந்த 30 நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து இன்று அதற்கான பரிசுப் பொருளான ஈதுல் முபாறக் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் நண்பர்கள் அனைவருக்கும் இன்றை தினம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

நோன்பும் அது தொடர்பான மான்புகளும் பற்றி உங்களுக்கு சிறிய வியடங்களை முன்வைத்து ஒரு சில நிமிடங்கள் நான் பங்கு கொள்ள ஆசைப்படுகிறேன்.

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.


மேலே குறிப்பிட்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்பி நான் இத்துடன் முடிவுக்கு கொண்டு வருகின்றேன்
வஸ்ஸலாம்.

8 செப்., 2010

செப்டம்பர் 08, 2010

இலங்கையில் நடக்கப்போவது என்ன? ஜனநாயகமா? /சர்வதிகாரமா?

30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்ததின் போது எந்த விதமான தீர்வு திட்டத்தையும் முன் வைக்காத சிங்களத் தலைமை. அதற்காக அவர்கள் கூறிய காரணங்கள் பெருபாண்மை பலத்துடன் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லை என்பது. இன்று இலங்கையில் சார்வதிகார ஆட்சியை பெருகூட்டும் முயற்சிக்கு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கும் துரஷ்டமான நிலைமைகள் காணப்படும் சூழ்நிலையில் சிறுபாண்மை மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டே கொண்டு இருக்கும் தவிர ஒரு காலமும் அவர்களுக்கு விமோசனம் கிடைக்காது.



இன்று இலங்கை அரசினால் பாராளுமன்றத்தில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் ஒரு அதிகார வெறிகொண்டு அராஜகத்துடன் ஆளத்துடிக்கும் ஒரு சர்திகார தலைமைக்கு இன்னும் சாதகமான நேரத்தினை எதிர்கட்சி உறுப்பினர்கள்இ மற்றும் சிறுபான்மையினரும் உரமூட்டும் அதிசயம் தான் என்ன?



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் இன்று தனது உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் கடந்த சில வார காலமாகவே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம்18 ஆவது அரசி யலமைப்பு திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இலகுவாக வெற்றிகொள்வோம் என்று ஒருபுறம் சூளுரைத்துள்ள அதேவேளைஇ அதற்கு தமது பலமான எதிர்ப்பினை வெளிப்படுத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில்இ அரசியல் அமைப்பின் 18 ஆவது திருத்தம் அரசியல் அமைப்புக்கு அமைவாகவே கொண்டுவரப்படுவதாகவும் எனவே சர்வஜனவாக்கெடுப்பு நடத்ததேவையில்லை என்றும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.



அரசாங்கம் கொண்டுவரும் இத்திருத்தம் தொடர்பில் தனது நியாயப்பாட்டை எடுத்துக் கூறிவருகின்றது. அதாவதுஇ உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐ.தே.க. ஏலவே ஆதரவு தெவித்திருந்தது. அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் இணக்கம் தெவித்திருந்தது. எனவேஇ இது திடீரென கொண்டுவரப்பட்ட விடயமல்ல. 18 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் சர்வாதிகாரி போன்று எதேச்சாதிகாரம் கொண்டு நடப்பதை தவிர்ப்பதுடன் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டியவராக நடப்பார்.



அது மாத்திரமன்றிஇ ஜனாதிபதி பதவியை இரண்டு தடவை வகித்த ஒருவர் மூன்றாவது தடவை அப்பதவியை வகிக்க வேண்டுமென மக்கள் விரும்பினால்இ அரசியலமைப்பு அதற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் அது நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைந்து விடும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



இதேவேளைஇ உறுதிமொழிகளும் மக்கள் ஆணையும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்இ நிறைவேற்று அதிகாரத்தை நீடித்துக்கொள்ளும் அதிகாரங்களை அதிகத்துக் கொள்வதற்குமான தார்மீக உரிமை ஜனாதிபதிக்கோ அவரது அரசாங்கத்துக்கோ கிடை யாது. தவறான அரசியலமைப்பு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் திருத்தத்திற்கு எதிராகவே வாக்களிக்கும். இதற்கான தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெவித்துள்ளார்.



அத்துடன்இ அரசினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அரசியல் திருத்த யோசனை பாராளு மன்றத்தையே அகௌரவப்படுத்துகின்றது. உத்தேச திருத்தச் சட்டத்தின் மூலம் சகல அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொள்வதற்கே ஜனாதிபதி முயற்சிக்கிறார் என்றும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.



இதேவேளைஇ அரசாங்கம் கொண்டுவரும் திருத்தமானது இந்த நாட்டை படுகுழியில் தள்ளுவதற்கு வழிவகுக்கும் என ஐ.தே.க. மேலும் கண்டனம் தெவித்திருந்ததுடன்இ இன்றைய தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என கோக்கையையும் விடுத்திருந்தது.



இந்நிலையில்இ ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை வெகுவாகக் கண்டித்துள்ளார். அரசாங்கம் கொண்டுவர உள்ள 18 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் 17 ஆவது அரசியலமைப்பு திருத் தங்களை இல்லாதொழித்துள்ளதுடன்இ எதிர்காலத்தில் நாட்டில் நீதி நியாயம் எதனையும் எதிர்பார்க்க முடியாத நிலைமையை தோற்றுவித்துள்ளது. யுத்தத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியையும் அகௌரவப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.



இவற்றுக்கு மத்தியில் சிறுபான்மை அரசியல் கட்சிகள் இது தொடர்பான எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அரசுடன் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் அரசின் நடவடிக்கைகளுக்கு சாதகமான போக்கை கொண்டுள்ள அதேவேளைஇ அரசாங்கத்துடன் இணையும் நோக்கத்துடன் இருக்கும் கட்சிகள் இதற்கு சாதகமான அணு குறையை கடைப்பிடிக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த மட்டில் அரசின் உத்தேச திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் என அக்கட்சியின் உயர்பீடம் அண்மையில் தெவித்திருந்தது. இதற்கமைய அதன் எட்டு உறுப்பினர்களின் ஆதரவு அரசுக்குக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.



இவற்றுக்கு மத்தியில்இ 18 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெவித்திருக்கிறார். கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



18 ஆவது திருத்தமானதுஇ 17 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்திருப்பது மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அதிகாரப்பகிர்வு மற்றும் அரசியல் திருத்தத்தையும் இல்லாது செய்துள்ளது. எனவேஇ 13 ஆவது திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தவர்கள் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளதுடன்இ 18 ஆவது திருத்தம் குறித்து எமது கட்சியின் உயர் குழு விரிவாக ஆராய்ந்ததில் அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு சாதகமாக இல்லை. அனைத்தும் விரோதமாகவே இருக்கின்றன என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.



இவ்வாறானதோர் பின்னணியில் அரசாங்கம் 18 ஆவது திருத்தச் சட்டத்தை சபையில் நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பது அவசியமாகும். அந்த வகையில்இ எதிர்த்தரப்பிலிருந்து ஏலவே கட்சிதாவிய மற்றும் அர சுக்கு ஆதரவளிப்போர் என பத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.



தேர்தலில் அரசாங்கம் 144 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரபா கணேசனும்இதொழிலாளர் தேசிய ன்னணியின் திகாம்பரம் அரசுடன் இணைந்துகொண்ட நிலையில் ஆளுந்தரப்பின் பலம் 146 ஆக அதிகத்துள்ளது. இந்நிலையில்இ ஆளுந்தரப்பிலுள்ள இடதுசாகளான வாசுதேவ நாணயக்காரஇ திஸ்ஸ விதாரணஇ டியூ குணசேகர போன்றோர் இவ் யோசனைக்கு முழுமையான ஆதரவை தெவிக்காத போதிலும்இ அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.



மேலும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான எட்டுப் பேரும் ஐ.தே.க வின் கண்டி மாவட்ட எம்.பி. யான ஏ.ஆர்.எம்.ஏ. காதரும் அத்துடன் இவ் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐ.தே.க. விலுள்ள லக்ஷ்மன் செனவிரத்னஇ ஏர்ல் குணசேகரஇ மனுஷ நாண யக்காரஇ நில்வள விஜயசிங்க ஆகிய நால்வரும் இந்த திருத்ததுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.



எந்தவகையில் பார்த்தாலும் அரசாங்கம் தனது யோசனைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும் பலத்தைஇ அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட மற்றும் கட்சி மாறிய எதிர்க்கட்சி உறுப்பினர்க ளே வழங்கியுள்ளனர். அந்தவகையில் எதிர்க்கட்சிகள் மிகவும் பல வீனமான நிலையிலுள்ளன என்பது வெளிப்படையானது. இந்த நிலையில்இஅரசியலமைப்பு திருத்தம் உட்பட தனது திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல சாதகமான சூழ்நிலையையே அரசு கொண்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஓர் பதிவாக மட்டுமே இருக்கப் போகின்றன என்பது ஒருசாரான் கருத்தாகவுள்ளது.





எந்தவகையில் பார்த்தாலும் அரசாங்கம் தனது யோசனைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும் பலத்தைஇ அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட மற்றும் கட்சி மாறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களே வழங்கியுள்ளனர். அந்தவகையில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையிலுள்ளன என்பது வெளிப்படையானது.இந்த நிலையில்இஅரசியலமைப்பு திருத்தம் உட்பட தனது திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல சாதகமான சூழ்நிலையையே அரசு கொண்டுள்ளது. இவ்வாறானபின்னணியில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஓர் பதிவாக மட்டுமே இருக்கப் போகின்றன என்பது ஒருசாரான் கருத்தாகவுள்ளது.





நன்றி வீரகேசரி



4 செப்., 2010

செப்டம்பர் 04, 2010

சவுதியில் இலங்கை பணிப்பெண்ணுக்கு நடந்து என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் பல கற்பனைகளை உள்ளடக்கி தனது குடும்ப சொந்தங்களை இழந்து, எதிர்கால பல்வேறு தேவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நற்பாசையில் இன்று எமது சொந்தங்கள் அங்கு சென்று நல்ல வளத்துடன் வாழ்ந்தாலும், எங்களால் சொல்ல முடியாத துன்பங்களையும் தினம் தினம் சுமந்து கொண்டும் இருக்கிறார்கள்.

இவ்வாறு அந்த நாடுகளில் வேலைகளுக்காக சென்று அங்கு நடந்த உண்மைச் சம்பங்களை இங்கு விளக்கி ஒரு சிறந்த தெளிவினை எல்லோரும் பெறும் வகையில் இந்த கட்டுரை இங்கு வழங்கப்படுகின்றது. இதனை வழங்கிய வீரகேசரி பத்திரிகைக்கு முதல் நன்றிகள்.

அடிமை வியாபாரத்தையும் அது ஒழிக்கப் பட்டமையையும் நினைவுகூருகின்ற சர்வ தேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை யில் மனிதாபிமானம் உள்ளவர்களின் நெஞ் சங்களில் பெரும் நெருப்பைத் தூவிவிட்ட தும் தற்போது பேசும் விடயமாக விளங்குவதுமான ஆயவதிக்கு நேர்ந்த கொடுமையும் அன்றுதான் முதலில் தெரியவந்தமையும் எத்தகைய பொருத்தம் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. அன்றைய தினம் தான் ஆயவதி கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னரே இலங்கையர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிர்ச்சிகரமான தகவல்களை அறியத் தொடங்கினர்.

அடிமை முறை என்பது மனிதர்களை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து அல்லது அவர்ளை விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து பலவந்தமாக வேலையை வாங்கும் முறையாகும். இம் முறை வரலாற்றுக் காலம் முதல் பல நாடுகளில் வழக்கில் இருந்து வந்துள்ளது. இங்கு அடிமைகள் என்பவர்கள் மனிதநேயத்திற்கு அப்பாட்பட்டவர்களாகவே எஜமானர்களால் மிதிக்கப்பட்டனர்.
வேறு வகையில் கூறுமிடத்து உணர்வுகளை இழந்த சடப்பொருள்கள் என்ற வகை யிலேயே அடிமைகள் நோக்கப்பட்டனர்.

இந்த அடிமை வியாபார முறைமை 1870 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டதாக கூறினாலும் அதற்கு வீட்டுப்பணிப்பெண்களும் விதிவிலக்கல்ல. மத்திய கால மனிதனின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு சான்றுபகர்ந்த அடிமை முறைமையானது இன்றைய நவீன நாகரீக காலத்திலும், மனிதகுலத்தின் மனிதநேயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி நிற்கின்றது. ஆயவதிக்கு நேர்ந்த அவலங்களை நோக்கும் போது மனித குலம் மனிதத் தன்மை கொண்ட நாகரீக சமூகமாக இன்னம் மாறவில்லை என்ற உண்மை யையே உணர்த்தி நிற்கின்றன.

ஆயவதியின் அவலங்களை சவுதி அரேபிய தூதரகம் சந்தேகங்கொண்டு பார்க்கின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சவுதியின் றியாத் விமான நிலையத்திலும், கொழும்பு கட்டுநாயக்கவிலுள்ள விமான நிலையத்திலும் காணப்படும் உயர் தொழில்நுட்ப ஸ்கானர் இயந்திரங்களுக்கு ஆயவதிக்குள் இருந்த இரும்பாணிகள் அகப்படாமல் போன தெப்படி என்பதே அவர்களது சந்தேகமாக இருக்கின்றது என இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆயவதி இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை கடந்ததன் பின்னர் தான் உடலுக்குள் ஆணிகள் செலுத்தப்பட்டனவா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தூதரகத்தின் இந்த சிறுபிள்ளைத்தனமான கருத்தானது இலங்கை மக்களை மட்டுமல்லாது சர்வதேச சமூகத்தினரையும் வெறுப்படையவே செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ஏனெனில் கல்வி அறிவே இல்லாதவன் கூட தானே தனது உடலுக்குள் ஆணிகளை செலுத்திக் கொள்வதற்கு துணிவாரா?
என்பதே இங்கிருக்கின்ற அபாய கேள்வியா கும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் பணிப் பெண்களாக கடல் கடந்து செல்கின்றவர்கள் அங்கு அடிமைகளிலும் கேவலமாக நடத்தப்படுவது தொடர்பில் அவ்வப் போது வெளிவந்த, வெளிவருகின்ற தகவல்களில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் குடும்ப சூழலைக் கருத்திற் கொண்டு வேலை தேடிச் செல்லும் பணிப் பெண்கள் வயது வித்தியாசம் பாராது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவது மறைக்கப்பட்ட உண்மையாகவே இருந்து வருவது ஒருபுறமிருக்க உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொள்கின்ற சம்பவங்கள் கொடிய உள்ளம் படைத்த வக்கிரப்புத்தியுடைய தொழில் வழங்குனர்களால் அரங்கேற்றப்பட்டு வருவதும் தற்போது வெளிப்பட்டு வருகின்றது.

ஊடகங்களில் மாயாஜால வார்த்தைகளால் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகின்ற முகவர் நிலையங்கள் தமது கஜனாக்களை நிறைத்துக் கொள்ளும் நோக்கிலேயே செயற்படுகின்றன என்று கூறினால் அதில் தவறு இருக்க டியாது.

விளம்பரங்களினூடாக வறுமைக் கோட்டினுள் வாழ்கின்ற அப்பாவிப் பெண்களை மயக்குகின்ற மேற்படி முகவர் நிலைய அதிகாரிகள் தம்மை நம்பி வருகின்ற பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி தமது வலையில் சிக்கவைக்கின்றனர்.

இதன் பின்னர் தடால்புடலாக செயற்படுகின்ற இந்த கவரகங்கள் தம்மிடம் சிக் குகின்ற பெண்களை குறுகிய காலத்துக்குள்ளேயே விமானத்திலும் ஏற்றி விடுகின்றன. விமானத்தில் ஏற்றியதும் தமது கடமையை முடித்துக் கொள்கின்ற அதேவேளை, அடுத்தவரை விமானத்தில் ஏற்றுவதற்கான தேடலிலும் இறங்கி விடுகின்றனர்.

இந்த ஆயிரமாயிரம் கனவுகளுடனும் எண்ணற்ற அபிலாஷைகளுடனும் விமானத்தில் பறந்து குறித்த நாடுகளில் கால் பதிக்கின்ற இவ்வாறான அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்ற வெளிநாட்டுத் தொழில் வழங்குனர்களை வஞ்சக நெஞ்சம் கொண்ட மன நோயாளிகள் என்று வர்ணிப்பது தகுமானதே.

இந்த அர்த்தத்துக்கு அனைத்து தொழில் வழங்குனர்களும் சொந்தக்காரர்கள் என்று கூறி விடவும் முடியாது. இருப்பினும் அவ்வாறு அர்த்தம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஏனெனில் பணிப் பெண்கள் மீதான சித்திரவதைகள், கொடுமைகள், வக்கிரத்தன்மை, ஆணிகளையும் இரும்புக் கம்பிகளையும் உடலில் ஏற்றி இன்பம் காணும் அளவிலான இரக்கமில்லா இரும்பு குணம் படைத்தவர்களின் செயற்பாடுகள் இன்று உலகையே அதிர்ச்சி யில் ஆழ்த்தியிருக்கின்றது. 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கிண்ணியாவைச் சேர்ந்த 19 வயதேயான றிஸானா நபீக் சவூதி அரேபியாவின் உயர் நீதி மன்றத்தினால் சாகும் வரையிலான மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த யுவதி தனது பெற்றோர், சகோதரர்களின் நிலையறிந்து பல கனவுகளுடன் சென்ற போதிலும் விதி என்ற அரக்கன் றிஸானாவை விட்டு வைக்கவில்லை.

நான்கு மாதங்களே ஆன குழந்தையை கொலை செய்தார் என்பதுவே றிஸானா மீதான குற்றச்சாட்டாகும்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் ஒரு சாரான் நியாயத்தை மட்டுமே கவனத்திற் கொண்டு செயற்பட்டுள்ளது. மொழிப் புலமையில்லாத றிஸானாவின் நிலைமை அதோ கதி என்ற வகையில் அவர் சுமார் மூன்று வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

இது இவ்வாறிருக்க கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பல்வேறு கனவுகளை சுமந்த வண்ணம் சவூதி அரேபியாவின் தலைநகரான றியாத்தில் காலடி வைத்த மாத்தறை திஹகொடவைச் சேர்ந்த 49 வயதான எல்.. ஆயவதி என்ற ஏழைப் பெண் தனது கனவெல்லாம் நனவாகப் போவதாகவே நினைத்தார். அந்த கனவு கானல் நீராகிப் போன நிலையில் உடலில் கட்டுகளுடன் மாத்தறை கம்புறுபிட்டிய வைத்தியசாலையின் 10 ஆம் நம்பர் வார்ட்டில் ஒரு கட்டிலில் சோகங்களை மட்டும் சுமந்தபடி படுத்துக்கிடந்ததை அனைவரும் பார்த்துச் செல்வதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும் முணு முணுத்துக்குக் கொண்டனர்.

உள்ளங்கால் முதல் உச்சந்தலையில் வரை ஆணிகளையும் இரும்புக் கம்பிகளையும் அறைவது என்பது எத்தகைய மிருகத்தனம் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆயவதி என்ற அந்த பெண்மணியின் உடலில் முக்கியமாக நெற்றியில் இரண் டரை அங்குல ஆணியை அறையும்போது அவர் எவ்வாறான நிலையில் இருந்திருப்பார். புளுவாக துடித்திருக்க மாட்டாரா? இதனை சர்வதேச மனித உமை அமைப்பு இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின் றதா?

24 இரும்புத் துண்டுகளை 49 வயதான பெண்ணின் உடலில் இறக்குவது என்பது நாகரிகமே அறியாத காட்டுவாசிகளின் செயற்பாடாகக் கூட அமைந்திருக்க முடியாது ஆனாலும் அது நடந்துள்ளது.

சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட டாக்டர்கள் மூன்று மணி நேர பிரயத்தனத்துக்கு மத்தியில் 18 இரும்புத் துண்டுகளை அகற்றியுள்ளமை ஆயவதியின் உயிர் வாழும் நாட்களை சற்று அதிகத்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

மாத்தறையைச் சேர்ந்த ஆயவதிக்கு சவூதி அரேபியாவில் எமன் பிறந்திருக்கி றான் என்பது 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அன்று தான் ஆயவதியும் ஆணியும் என்ற நம்பத்தகாத உண்மை வெளிப்பட் டது.

றிஸானாவை கொலைக் குற்றவாளியாக சித்தித்து அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருக்கின்ற சவூதி அரேபிய நீதித்துறை, ஆயவதி சம்பந்தப்பட்ட விடயத்தில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பது இது வரையில் வெளிப்படுத்தப்படாத ஒன்றாக இருக்கின்றது.

அதாவது சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் அயல் நாட்டுக்காரரை ஆணியில் அறைந்து தாமத மரணத்தை அல்லது தாமதக் கொலையைப் புரிவாரென்றால் அதற்கு அந்நாட்டு நீதித்துறை இடமளிக்கின்றதா என்பது நியாயமான கேள்வியாகும்.

இது இவ்வாறிருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. ரஞ்சன் ராமனாயக்கவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது சவூதி அரேபியாவுக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்கள் யுவதிகள் சிலர் அங்கு தமக்கேற்பட்ட இழைக்கப்பட்ட அநீதிகளை பகிரங் கப்படுத்தியிருந்தனர்.

பணிப் பெண்களாக செல்வோர் வயது வித்தியாசம் பாராது பாலியல் சேஷ்டைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் அடி,உதை,தாங்க முடியாத தண்டனைகள், உணவு வழங்கப்படாமை ஆகிய சித்திரவதைகளுக்கு உள்ளாகு வோரை தூதரகங்களும் கைவிட்டு விடுவ தாக கூறியிருந்தனர்.

மேலும் எஜமானிகளின் பிடிக்குள் இருந்து தப்பி வருகின்றவர்களை ஓலய்யா என்ற முகாமுக்கு அனுப்பி வைப்பதாகவும் அங்கு நரக வேதனை அனுபவிக்க வேண்டியிருப்ப தாகவும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

தற்போது இலங்கையைச் சேர்ந்த சுமார் 18 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் தொழில்புரிந்து வருகின்றனர். இதில் 70 வீதமானோர் பெண்களாவர்.

கடந்த வருடத்தில் மாத்திரம் சவூதி அரேபியாவுக்கு 77 ஆயிரத்து 827 பேர் பணிப் பெண்களாக இலங்கையிலிருந்து சென் றுள்ளனர்.

இவர்களில் எத்தனை ஆயிரம் பேர் றிஸானாவைப் போலும் ஆயவதியைப் போலும் சிக்கித் தவிக்கின்றனர் என்பது மறைந்து கிடக்கும் உண்மையாக இருக்கின்றது.

பணிப் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்கின்ற எஜமானர்கள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக பாதிக்கப்படுகின்ற அபலைகள் மாடிகளில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்படுகின்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக மாத்திரமே அறி யக் கிடைக்கின்றது.

குடும்ப வறுமைக்காக வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் பணிப் பெண்களால் எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியினூடாக வருமானம் தேடித் தரப்படு கின்றது. இவ்வாறு நாட்டின் வருமானத்துக்குப் பங்காற்றும் இந்த அபலைப் பெண்களைப் பற்றி அரசாங்கத்தின் அக்கறையானது எந்தளவு ஆழமானது என்பது கேள்விக் குறியானதாகவே இருக்கின்றது. 24 ஆணிகளை உடலில் வாங்கிக் கொண்டு உயிருடன் வந்து சேர்ந்த ஆயவதி எதையெல்லாம் இழந்து நிற்கின்றாரோ, எவ்வாறெல்லாம் அவஸ்தைப்பட்டாரோ அதற்கெல்லாம் பரிகாரம் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தினதும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினதும் கடமையும் பொறுப்புமாகும்.

இந்த அவசியம் ஊடகங்களின் மூலம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையிலேயே வேறு வழியில்லாது தற்போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆயவதிக்கு ஏற்பட்ட கொடுமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்ப தற்கும் நட்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுப்ப தற்கும் அரசு முன்வந்தது.

அத்துடன் கொடுமைக்காரர்கள் தொடர்பில் சவூதி அரேபிய அரசு நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற இலங்கை அரசின் வேண்டுகோளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த கொடுமைக்காரர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவித்துள்ளன.

அது மட்டுமல்லாது இலங்கையிலிருந்து சென்றுள்ள பணிப் பெண்களின் நிலைமைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை ஆராய்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் குழு வொன்று சவூதி சென்றுள்ளது.

இது காலம் கடந்த ஞானம் என்கின்ற போதிலும் இதுவும் நீண்ட காலத்துக்கு பொருத்தமானதா என்பது கேள்விக்குறியானது என்றே கூற வேண்டும்.

அரசாங்கத்தின் இத்தகைய சூடான நடவ டிக்கையும் ஆயவதியின் சோகங்களும் வெளிநாடுகளில் பணிபுயும் பணிப் பெண்களுக்கு விடியலாக அமைய வேண்டும்.
இத்துடன் நின்றுவிடாது ஆயவதியின் எதிர்காலம் அவரது தொழிலில்லா கணவர், பிள்ளைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயக் கட மையாகும்.

மேலும் ஒரு சத்திர சிகிச்சையின் பிரகாரம் இன்னுமொரு ஆணி பின்னர் அகற்றப்பட் டது. இத்துடன் 19 ஆணிகளே அகற்றப்பட்ட ஆயவதியின் உடலில் மேலும் 5 ஆணிகள் அல்லது இரும்புத் துண்டுகள் இன்னும் இருக்கின்றன.

இவை அவரது உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தாத வகையில் நிம்மதிதான் என்றாலும் பொருத்தமற்ற பொருளொன்று உடலுக்குள் இருப்பது இயற்கைக்கு மாறானது என்பதால் பக்கவிளைவுகளை தடுக்க முடியாது என்பது மறுக்க டியாத உண்மையாகும். இந்நிலையிலேயே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து தனது வீட் டுக்குத் திரும்பியுள்ளார்.

இது இவ்வாறிருக்க உள்நாட்டிலும் கூட இவ்வாறான கொடுமைகள் அரங்கேறியிருப் பதை நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலைநகர் கொழும்பில் மலையகத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வாவியொன்றில் வீசப்பட்டி ருந்தமை உலகறிந்த உண்மையாகும்.

ஆடம்பர வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு செல்பவர்களுக்கு மத்தியில் குடும்ப சுமையை இறக்கி வைக்க நினைக்கும் அபலைப் பெண்களின் அல்லது யுவதிகளின் சிறுமிகளின் வாழ்க்கை இவ்வாறு முடிவானது வேதனையானது. வர் ணிக்க டியாத கொடுமையும் ஆகும்.

இறைவனிடத்தில் அச்சம் கொள்கின்ற எவராலும் இத்தகைய கொடுமைகளை செய்யடியாது. அவ்வாறு செய்பவர்கள் காட்டுவா சிகளுக்கு ஒப்பானவர்கள்.

இவர்கள் சட்டத்தில் இருந்து தப்பித்தாலும் இறைவனிடத்தில் தப்பிப்பது அது. எனினும் அரசியலமைப்பைத் திருத்தியமைக்கின்ற இன்றைய சந்தர்ப்பத்தில் மேற் போன்ற விடயங்களில் புதிய சட்ட விதிகளை உள்வாங்கி அதனை நடைறைப்டுத்துவது எதிர்காலத்துக்கு பொருத்தமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அதில் வெளிநாடு செல்வோர், தொழில் வழங்குனர், தொழிலுக்காக அனுப்புகின்ற தரப்பு மற்றும் உறவினர்களுடனான தொடர்பாடல்கள் போன்ற விடயங்களில் சட்ட ரிதியிலான மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

வயதை மாற்றி முகத்தை மாற்றி ஏன் ஆள் அடையாளத்தையே முற்றாக மாற்றி பல பொய்களை கூறி விமானநிலையம் உட்பட பல இடங்களில் தேவையானால் அரச அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களை அனுப்புகின்ற மோசடிக் கும்பல்களுக்கு அங்கிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை இங்கு அனுப்புவதொன்றும் பெரியவிடயமல்ல என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

அந்த வகையில் சவுதி அரேபிய தூதரகம் தெவித்துள்ளது போன்ற இந்த சந்தேகங்கள் ஒருபுறமிருக்க எமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தளர்வு கண்டு விடக்கூடாது என்பதே இங்கு சுட்டிக் காட்டப்படுகின்ற க்கிய விடயமாகும்.