Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Email லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Email லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஆக., 2010

ஆகஸ்ட் 10, 2010

WEB MAIL / POP3 MAIL என்ன வேறுபாடு?



மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தை நிறூபித்து (log in) எமக்கு வந்திருக்கும் இமெயிலைப் பார்ப்பதும் புதிதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெயில் எனப்படும்.வெப் மெயிலை / அனுப்பும் பெறும் செயற்பாடு வழமையான ஒரு இணைய பக்கத்திலேயே (web page) நடைபெறும். உங்களுக்குப் புதிதாக வந்திருக்கும் மெயில்களையும் முன்னர் வந்த மெயில்களையும் இணையத்தில் இணைவதன்மூலம் மட்டுமே (online) பார்வையிட முடியும்., இணைய இணைப்பின்றி (offline) மெயில்களைப் பார்வையிட முடியாது.

இலவச இமெயில் சேவை வழங்கும் நீறுவனங்கள் அனேகமாக வெப் மெயில் சேவையே வழங்குகின்றன. அதற்கு உதாரணமாக yahoo, Google போன்றவற்றைக் குறிப்பிடலாம் அனேகர் தங்கள் இமெயில் தொடர்பாடலுக்கு இந்த வெப் மெயிலையே பயன் படுத்துகின்றனர்மாறாக எமது இமெயில் கணக்கை நிர்வகிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் மூலம் மெயில் சேர்வரை அணுகி செய்திகளை அனுப்புவதும் பெறுவதும் பொப் மெயில் எனப்படும். Post Office Protocol என்பதன் சுருக்கமே POP. இது ஒரு தொடர்பாடல் (protocol) விதி முறையாகும். அதாவது இமெயில் ப்ரோக்ரம் அல்லது பொப் களையண்டுக்கும் (POP Client) மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவன சேர்வர் கணினிக்கும் (POP Server) இடையிலான ஒரு தொடர்பாடல் மொழி எனலாம்.
POP3 எனபதில் 3 என்பது அதன் பதிப்பிலக்கத்தைக் (version) குறிக்கிறது. தற்போது பயன் பாட்டிலுள்ள POP3 விதிமுறை பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் அது சில மாற்றங்களுக்குள்ளானது, அதன் பிறகே POP3 விதி முறை நிர்ணயிக்கப்படுகிறது.

பொப் மெயிலில் இமெயில் அனுப்ப பெற உதவும் மென்பொருளை இமெயில் க்ளையன்ட் (e-mail client அல்லது POP client) எனப்படுகிறது. Outlook, Outlook Express, Eudora, Thunderbird என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.இமெயில் க்ளையன்ட் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு இமெயில் கணக்கு மட்டுமன்றி ஒன்றிற்கு மேற்பட்ட இமெயில் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும். அதன் மூலம் எமது அனைத்து இமெயில் கணக்குகளுக்கும் வந்து சேரும் இமெயில்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். அத்தோடு மின்னஞ்சல்களை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து விட்டு நாம் விரும்பிய நேரத்தில் படிக்க முடிவதுடன் அனுப்புகின்ற மெயிலை அழகாக format செய்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்தையும் குறைத் திடலாம். இது போன்ற பல வசதிகளைப் பொப் மெயில் தருகிறது.

மெயில்களை அனுப்புவதற்கென மற்றுமொரு ப்ரொட்டோகோல் பயன்படுகிறது., அதனை SMTP (Simple Mail Transfer Protocol) எனப்படும்.. மெயிலை அனுப்பும் SMTP க்லையண்டுக்கும் மெயிலை அனுப்பும் SMTP சேர்வருக்கும் இடையிலான தொடர்பாடல் விதிமுறைகளைக் இது கொண்டுள்ளது பொதுவாக இரண்டு ப்ரொட்டகோல்களிலும் SMTP (server) சேர்வர் ஆகவும் POP3 சேர்வர் ஆகவும் ஒரே கணினியே தொழிற்படுகிறது. , ஒரு பொப் க்ணக்கை உருவாக்குவதற்கு இமெயில்களை சேமித்து வைக்கும் சேர்வர் கணினியின் (POP3 சேர்வர்) பெயர், மெயில்களை அனுப்ப பெற உதவு சேர்வர் கணினியின் பெயர் (SMTP சேர்வர்) மெயில் சேர்வர் நிறுவனத்தால் உங்கள் கணக்கிற்கென வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் என்பன அவசியம்

பொப் மெயில் போன்று மற்றுமொரு இமெயில் சேவையே IMAP (Internet Message Access Protocol) எனப்படுகிறது. இது பொப் மெயிலை விட அதிக வசதியைத் தருகிறது. இதனையும் பொப் மெயில்களை நிர்வகிக்கும் ப்ரோக்ரம் கொண்டே நிர்வகிக்கலாம். இது எமக்கு வந்து சேர்ந்திருக்கும் மெயில்களை அனைத்தையும் நமது கணினிக்கு டவுன்லோட் செய்து விடாமால் அதன் தலைப்புகளை மட்டும் பார்வையிட்டு தேவையான மெயில்களை மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைத் தருகிறது. IMAP சேவையில் அனைத்து மெயில்களும் சேர்வரிலேயே தங்குகின்றன. அதனால் வெப் மெயில் போன்றே இணையம் ஊடாக எங்கிருந்தும் அணுகலாம்.

எப்போதும் ஒரே கணினியிலிருந்து மாத்திரம் மெயில்களை அணுகுவதாயின் பொப் மெயில்கள் சிறந்தது. மாறாக உங்கள் மெயில்களை பல்வெறு இடங்களிலிருந்து அணுக வேண்டுமயின் IMAP சிறந்தது எனலாம். .உங்கள் கணினியில் டேட்டா இழப்புகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு வந்து சேர்ந்த இமெயில்களை இழக்க வேண்டியேற்படாது. ஏனெனில் உங்கள் மெயில் சேர்வரில் அவை பாதுகாப்பாக இருக்கும்.

6 நவ., 2009

நவம்பர் 06, 2009

யாஹூ மெயிலை ஜிமெயில் கணக்கிற்கு இம்போர்ட் செய்வது எப்படி?


நீங்கள் Yahoo மற்றும் Gmail கணக்கு வைத்திருந்து, இனிமேல் Gmail லிலேயே தொடரலாம் என்ற முடிவிற்கு வந்தால், உங்கள் Yahoo கணக்கிலுள்ள தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல்களை ஜிமெயில் கணக்கிற்கு எப்படி இம்போர்ட் செய்வது?

உங்கள் பயனர் பெயரும், கடவுச் சொல்லும் கொடுத்து ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். ஜிமெயில் திரையில் வலது மேல் மூலையிலுள்ள Settings லிங்கை கிளிக் செய்யுங்கள்.



Accounts and Import என்ற டேபை கிளிக் செய்து, Import mail and contacts பட்டனை அழுத்துங்கள். இனி வரும் திரையில் உங்கள் Yahoo மெயில் ஐடி கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள்.



தொடரும் அடுத்த திரையில், உங்கள் யாஹூ கணக்கின் கடவுச் சொல்லை கொடுத்து Continue பட்டனை கிளிக் செய்யுங்கள். 



அடுத்த திரையில் இம்போர்ட் செய்யவேண்டியவற்றை தேர்வு செய்யவும். ஒருமுறை சரி பார்த்தப்பின்னர், Start Import பட்டனை கிளிக் செய்யவும்.



 அடுத்த இறுதி திரையில் OK பட்டனை கிளிக் செய்யவும்.




அவ்வளவுதான்! நாம் இம்போர்ட் செய்யும் மெயில்களின் அளவைப் பொறுத்து இம்போர்ட் செய்யும் நேரம் மாறுபடும்.

யாஹூ மின்னஞ்சல் கணக்கை முழுவதுமாக அழிப்பது எப்படி என்பதைப்பற்றி கீழே தரப்பட்டுள்ள நண்பரின் வலைப்பக்கத்தைப் பார்க்கவும்.

Yahoo மின்னஞ்சல் முகவரியினை(Email ID) எவ்வாறு நிரந்தரமாக அழிப்பது?

29 அக்., 2009

அக்டோபர் 29, 2009

இறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்!

என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி கடிதம் எழுத முடியும்? யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. நீங்கள் இறந்த பிறகு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்த இமெயில் கடிதங்கள் உடனே துப்பாக்கி முனையில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல நீங்கள் யாருக்கு எழுதினீர்களோ அவர்களுக்குச் செல்லும். இந்த தளத்தினை http://www.farawayfish.com என்ற முகவரியில் காணலாம். முதலில் இதற்கான கட்டாயம் அல்லது சூழ்நிலை என்ன என்று பார்ப்போம்.

நாம் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதுவும் எதிர்பாராத தருணத்தில். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பல விஷயங்களை நம் மனதில் வைத்திருப்போம். பேங்க் அக்கவுண்ட், லாக்கரில் இருக்கும் பணம், டாகுமெண்ட் மற்றும் நகை, பணம் கொடுத்து இன்னும் பதியாமல் இருக்கும் நிலம் மற்றும் வீடு, யாரை எல்லாம் நம்பக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை, யாரை அவர்கள் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற இவை எல்லாம் உயிருடன் இருக்கையில் கொட்டித் தீர்த்துவிட முடியாது. ஆனால் திடீரென மரணம் சம்பவித்தால் என்ன செய்திட முடியும்? உயில் எழுதினால் தெரிந்துவிடாதா? யாரையாவது நம்பி எழுதி வைத்து இறந்தால் அவர் நம்பிக்கை மோசம் செய்துவிடமாட்டாரா? இந்த பதட்டத்திற்குத்தான் நமக்கு உதவிட வந்துள்ளது மேலே சொன்ன முகவரியில் உள்ள தளம். இந்த தளத்திற்குச் சென்றால் நம்மைக் கவரும் ஓர் இடம் – நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் உயிர் வாழ்வீர்கள் என்று ஒரு கணக்குப் போட்டு சொல்லும் இடம் தான். உங்கள் பெயர், வயது, ஆண் மற்றும் பெண் போன்ற விபரங்களைக் கேட்ட பின் நீங்கள் புகை பிடிக்கிறீர்களா? மது குடிக்கிறீர்களா? உங்கள் எடை மற்றும் உயரம் என்ன என்று கேட்டு இத்தனை ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழலாம் என்று ஹேஷ்யமாக ஒரு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆண்டுக் கணக்கை அடுத்து அதனை எத்தனை நொடிகள் என்றும் ஒரு கடிகாரக் கணக்கு மாதிரி காட்டுகிறது. இதில் நம் மரணத்திற்கு விதித்த காலம் நொடிகளில் குறைவதைக் காண மனதிற்குப் பக் என்கிறது.


சரி, முக்கிய விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அதனைக் கிளிக் செய்தால் இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் உங்களின் எண்ணங்களைப் பதிந்து வைக்கலாம். உங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். அவை நீங்கள் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு அறிவிக்கும் வகையில் ஓர் இணைய தளமாகக் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு இவை இணைய வெளியில் இருக்கும்.


அடுத்ததாக நீங்கள் யாருக்கெல்லாம் உங்கள் செய்தியை, எண்ணங்களை, அறிவுரையை, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அறிவுறுத்த வேண்டுமோ அவர்களின் இமெயிலுக்கு அதனை செய்தியாக கடிதம் எழுதி வைக்கலாம். இவை உங்களுக்கென ஒதுக்கப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மட்டும் இதனை எடிட் செய்து மாற்றலாம்; புதிய செய்திகளை தகவல்களை இணைக்கலாம். இத்தனை மெயில்களை இதுவரை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள் என்று விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படும்.


சரி, இந்த செய்திகள் நீங்கள் இறந்த பின்னர் எப்படி மற்றவர்களுக்கு அனுப்பப்படும்? முதலில் செய்திகளை அமைக்க எப்படி இடம் ஒதுக்கப்படும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிந்தால் நீங்கள் தரும் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்தால் அந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படும். இங்கு தான் நீங்கள் எழுதும் எண்ணங்களும் தகவல்களும் மற்றும் அமைத்திடும் இமெயில் செய்திகளும் பாதுகாக்கப்படும். பாடல்களைப் பதிந்து வைக்கலாம்; வீடியோ காட்சிகளையும் இதில் பதியலாம்.


அடுத்ததாக யார் இந்த இமெயில் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையான மூன்று பேர் குறித்த தகவல்களையும் இமெயில் முகவரிகளையும் அனுப்ப வேண்டும். இவர்களை இன்பார்மர்கள் என இந்த தளம் அழைக்கிறது. இவர்கள் தான் நீங்கள் இறந்தவுடன் இந்த தளத்திற்கு செய்தி அனுப்புபவர்கள். இவர்களுக்கு இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் பாஸ்வேர்ட் ஒன்றையும் பாதுகாப்பான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். உங்களின் உயிர் நண்பர்களாக, உறவினர்களாக இவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் நீங்கள் இறந்தவுடன் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதுதான். உடனே இந்த தளம் மூன்று பேருக்கும் தகவல் அனுப்பி நீங்கள் இறந்ததை உறுதி செய்யும். ஏன், உங்கள் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும். 12 வகையான சோதனை 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீங்கள் எழுதி வைத்த தகவல்கள் அடங்கிய தளம் உலகிற்கு காட்டப்படும். நீங்கள் எழுதி வைத்த இமெயில்கள் (இலவச சேவையில் 25 பேருக்கு அனுப்பலாம்) சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். இத்தனை நிலைகள் இருந்தாலும் அனைத்துமே நாம் மேற்கொள்ளும் வகையில் எளிமையானதாக உள்ளன. இறந்த பிறகு இறவாப் புகழ் பெற இந்த தளத்தை அணுகலாம். உங்களின் இறுதி செய்திகள் உற்றவர்களுக்கு உங்களுக்குப் பின் சென்று சேர இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாக இதனைப் பயன்படுத்த எண்ணினால் ஓர் ஆண்டுக்கு மட்டுமே முடியும். அதாவது பதிந்து ஓர் ஆண்டில் நீங்கள் இறந்துவிட்டால் இலவசமாக செயல்படுத்தப்படும். அதற்கும் மேலான காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


இதன் சிறப்புகளைப் பார்ப்போம்: நீங்கள் அமைத்திடும் செய்திகள் மற்றும் இமெயில்களை உங்களைத் தவிர யாரும், இன்பார்மர்கள் உட்பட, பார்க்கவோ படிக்கவோ எடிட் செய்திட முடியாது. இறப்பதற்கு முன் தானாக இவை அனுப்பப்பட்டுவிடுமா? நிச்சயம் 100% இல்லை. பல வகையான சோதனை மேற்கொண்ட பின்னர், இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்திகள் அனுப்பப்படும். உங்கள் இன்பார்மார்கள் மூன்று பேரும் இணைந்து தவறு செய்தால் தான் பிரச்சினை ஏற்படும். அப்போதும் இந்த தளம் சில ரகசிய சோதனைகளை மேற்கொள்ளும். இன்பார்மர்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து தளத்திற்கு அறிவியுங்கள். இவர்களை மாற்ற வேண்டும் என இடையே எண்ணினால் மாற்றலாம். தள நிர்வாகிகள் இவர்களுடன் பேசி இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுவார்கள்.

இலவச சேவை எனில் உங்கள் தளம் மரணத்திற்குப் பின் ஓராண்டும் கட்டண சேவை எனில் 9 ஆண்டுகளும் இருக்கும். உங்கள் நண்பர்கள் யாரேனும் தொடர்ந்து பணம் செலுத்தினால் இணையத்தில் தொடர்ந்து உங்கள் தளம் இடம் பெறும். நீங்கள் சேவ் செய்து வைத்த பைல்களின் பார்மட்டுகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்தால் தளம் அவற்றை அப்டேட் செய்திடும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஒப்புதல் பற்றுச் சீட்டினை இந்த தளம் வழங்கிடும். எனவே பணத்திற்குப் பாதகமில்லை.

இன்பார்மர்களிடம் நான்கு முறை இமெயில் மூலம் பல வழிகளில் கேட்கப் பட்ட பின்னரே உங்கள் கடிதங்களை அனுப்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் இமெயிலுக்கும் பல முறை இமெயில் அனுப்பப்பட்டு மரணம் உறுதி செய்யப் படும். சற்று கூடுதலாக கட்டணம் செலுத் தினால் எஸ்.எம்.எஸ். மூலமும் மரணம் உறுதி செய்யப்படும். உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் பின் எண் மறந்து போனால் தளத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை அறிவிக்கப்படும்.




28 அக்., 2009

அக்டோபர் 28, 2009

ஸ்பாம் (SPAM) என்றால் என்ன?

உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.

நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.

‏‏இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

வர்த்தக நோக்கில் வரும் ‏ ‏ இந்த ஸ்பாம் மெயில்கள்,
• எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
• நம்ப முடியாத விலைக் கழிவுட பொருட்கள்
• ‏இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம்
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

சில வேளை ‏ந்த ஸ்பாம் மெயில்கள் உங்களுக்கு வழமையாக வரும் ஒரு தனிப்பட்ட மெயில் போ‎‎‎ன்ற தோற்றத்துடன் அல்லது தலைப்புட‎ன் வந்தும் உங்களைத் திசை திருப்பக் கூடும்.

ஸ்பாம் உண்மையில் எமக்குப் பிரச்சினைதானா?

கணினி வைரஸ் போல் ஸ்பாம் அஞ்சல்கள் உங்கள் கனினியி‎ன்; செயற்பாட்டையோ அல்லது டேட்டாவையோ பாதிப்பதில்லை. எனினும் உங்கள் வியாபார நடவடிக்கைகளைப் பாதிப்பதோடு நேர விரயத்தையும் பண விரயத்தையும் கூட உண்டாக்குகிறது.

நீங்கள் தினமும் நூற்றுக் கணக்கான ‏,மெயில்களை வாடிக்கையாளர் களிடமிருந்து பெருகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ‏இவற்றுள் எவை ஸ்பாம் மெயில் என்பதைக் கண்டு பிடித்து அழிப்பதில் உங்களது அல்லது உங்கள் அலுவலக ஊழியரது நேரம் வீணாக விரயமாக்கப் படுகிறது. (மிக அரிதாக ‏ மி‎ன்னஞ்சல் பெறுபவர்கள் வே‎ண்டுமானால் ஸ்பாம்களைப் பார்த்து சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.)

சில வேளை எது ஸ்பாம் எனக் கண்டறிய முடியாமல் உங்களுக்கு வந்த ஒரு முக்கிய ‏மெயிலையும் கூட தவறுதலாக நீங்கள் அழித்து விட வாய்ப்புண்டு.

எமக்கு முன்பின் அறியாத ஒரு நபர் எமது கம்பியூட்டரை தனது கட்டுப் பாட்டி‎ன் கீழ் கொண்டு வருவதோடு எமது கணினியிலிருந்தே, ஸ்பாம் அ‎ஞ்சல்களை வேறு நபர்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ‏ இதனால் யரோ ஒருவர் செய்யும் தவறுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

ஏ‎ன் ஸ்பாம் அஞ்சல்கள் அனுப்புகிறார்கள்?

‏ஸ்பாம் ஒரு வகை விளம்பர உத்தி எனக் கூடக் கூறலாம். மிகக் மிகக் குறைந்த செலவில் ஆ‏யிரக்கணக்கான மெயில்களை ‏ ஒரே தடவையில் அனுப்பி விடுகிறார்கள் ஸபாமர்கள். ‏இவர்கள் அனுப்பும் ‏மெயில்கள் கிடைக்கப் பெறும் பத்தாயிரம் பேரில் ஒரே ஒருவர் மட்டும் ஒரு பொருளை ‏இவர்களிடமிருந்து கொள்வனவு செய்து விட்டால் அல்லது சேவையைப் பெற்று விட்டால் போதும். அதன் மூலம் அந்த ஸ்பாமர் ,இலாபமடைந்து விடுகிறார்.

ஸ்பாம் அஞ்சலைத் தவிர்ப்பது எப்படி?

1. ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மெ‎‎‎‎‎ன்பொருளை நிறுவிக் கொள்ளுங்கள். ‏இதன் மூலம் ஸ்பாம் அஞ்சல்களை ஓரளவுக்குக் குறைத்து விடலாம். அத்துட‎ன் ஸ்பாம் பில்டரில் எவை எவை ஸ்பாம் என நாமே மு‎ன் கூட்டியே காட்டி விட்டால் மீ‎ண்டும் மீ‎ண்டும் அதே ஸ்பாம் வருவதைத் தடுக்கலாம்.

2. உங்களுக்கு வரும் ,மெயில் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுங்கள். சில வேளை அந்த ‏ஸ்பாம் மெயிலுடன் வைரசும் சேர்ந்திருக்கக் கூடும். அதனைத் திறந்து பார்க்க உங்கள் கணினி வைரஸ் தாக்கத்திற்குள்ளாகலாம்.

3. ஸ்பாம் அஞ்சலுக்கு ஒரு போதும் பதில் அளிக்கவோ அல்லது அதனோடு வரும் லிங்கில் க்ளிக் செய்யவோ வேண்டாம். அவ்வாறு பதிலளிப்பது சரியான ஒரு முகவரிக்கே நாம் மெயில் அனுப்பியுள்ளோம் எd;பதை ஸ்பாமருக்கு உணர்த்தி விடும்.

4. ஸ்பாம் ‏அஞ்சலில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களையோ சேவையையோ பெற்று விடாதீர்கள். ‏இது மேலும் மேலும் ஸ்பாம் அஞ்சலைப் பெற வழி வகுப்பதோடு மாத்திரமி‎d;றி உமது ‏‏ஈ-மெயில் முகவரி ஏனைய ஸ்பாமர்களி‎ன் கையிலும் சேர வாய்ப்புள்ளது.

5. சில ‏ இணைய தளங்களில் படிவங்களை நிரப்பும்போது “மேலதிக விவரங்களைப் பெற” ஒரு check box ஐ தெரிவு செய்யவோ அல்லது நீக்கவோ வேண்டியிருக்கும். அதனைத் தெரிவு செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

6. இமெயில் அனுப்பும் ப்ரோக்ரம்களில் (Mail Client) உங்களது ‏மெயிலைத் திறந்து பார்க்காமலேயே அதன்‎‎‎ உள்ளடக்கத்தைக் காட்டும் (preview) வசதியுள்ளது. ‏ இவ்வாறு preview ல் பார்க்கும் போதே ஸ்பாமர்கள் தா‎ங்கள் அனுப்பிய ஸ்பாம் உரியவரைச் செ‎‎‎ன்றடைந்து விட்டதை உறுதி செய்து கொள்வார்கள். அவ்வாறு Preview ல் காட்ட வைக்காமல் அதன் தலைப்பை மட்டுமே பார்த்து நம்பகமான ‏மெயிலை மட்டும் திறவுங்கள்.

7. ஒரே ‏மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் , இ‏டத்தில் முகவரிகளை டைப் செய்யுங்கள். இந்த Bcc பகுதியில் டைப் செய்யும் ‏மெயில் முகவரிகள் நீங்கள் யார் யாருக்கு‎ ‏ இந்த இமெயில் அனுப்பியுள்ளீர்கள் எ‎ன்பதை மறைத்து விடும். மாறாக To பகுதியில் டைப் செய்தால் நீங்கள் டைப் செய்யும் முகவரிகள் அனைத்தும் ஸ்பாமர்களை அடையும்.

8. உங்கள் ‏மி‎ன்னஞ்சல் முகவரிகளை‎ நம்பிக்கையானவர்களிடம்‎ மட் டுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. இணைய தளங்கள் மற்றும் நியூஸ் க்ரூப் போன்றவற்றைப் பார்வையிடும் போதும் ‏‏‏‏ இணைய அரட்டையில் ஈடுபடும் போதும் ‏இமெயில் முகவரிகளை வழங்க நேரிடும் போது மி‎ன்னஞ்சல் முகவரிகளில் பய‎ன்படுத்தப்படும் “ @ “ எனும் குறியீட்டுக்குப் பதிலாக AT என டைப் செய்யுங்கள். ‏இந்த “ @ “ குறியீட்டைக் கொண்டே ஸ்பாமர்கள் ‏ பயன்படுத்தும் ப்ரோக்ரம்கள் இது ஒரு மின்னஞ்சல் முகவரியென கண்டறிந்து கொள்ளும்.

10. எப்போதும் ஒரே‏ ‏இமெயில் முகவரியை மட்டும் பய‎ன் படுத்தாமால் ஒ‎ன்றுக்கு மேற்பட்ட முகவரிகளை பயன்ப‎டுத்துங்கள். உதாரணமாக அலுவலக தேவைக்கென ஒ‎ரு ‏‏இமெயில் முகவரி, தனிப்பட்ட தேவைக் கென ஒன்று மற்றும்‏,இணைய தளங்களில் வரும் படிவங்களை நிரப்பும் தேவைக்கென வேறொ‎‎‎‎‎ன்றும் என வெவ்வேறாக வைத்துக் கொள்ளுங் கள். ஸ்பாமர்களிடமிருந்து ஓரளவுக்குத் தப்பிக் கொள்ளலாம்.
அக்டோபர் 28, 2009

இமெயில் தவறுகளைத் தவிர்க்க ஒரு செட்டிங்

தினந்தோறும் இமெயில்களை அனுப்பும் நாம் அடிக்கடி இந்த தவறினைச் செய்திருக்கிறோம். ஒருவருக்கு எழுதிய கடிதத்தினைத் தவறாக மற்றொரு நபருக்கு அனுப்பியிருக்கிறோம். கோபமாக எழுதிய கடிதத்தினைச் சரியான நபருக்கு அனுப்பி விட்டுப் பின் மனம் வருந்தியிருக்கிறோம்.

பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதும் என் நண்பர் ஒருவர் அனுப்ப வேண்டிய பத்திரிக்கைக்குப் பதிலாக வேறு ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டார். வெகுநாட்களுக்குப் பின்னரே தவறு உணரப்பட்டுச் சரி செய்யப்பட்டது.

இதற்குக் காரணம் இமெயில் மெசேஜ் எழுதுவது மிக எளிது. பேப்பரோ, பேனாவோ தேவையில்லை. சிஸ்டத்தில் அமைத்துவிடலாம். மேலும் அனுப்ப முகவரி எழுத வேண்டியதில்லை. கவர் தேவையில்லை.

ஸ்டாம்ப் தேவையில்லை. போஸ்ட் பாக்ஸ் இருக்குமிடம் அல்லது கூரியர் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. ஏன் எல்லாருக்கும் தெரிந்த இந்த தகவல்களை அடுக்குகிறேன் என்றால் இந்தக் காலத்தில் நாம் மனதை மாற்றிக் கொண்டால் அந்தக் கடிதத்தை எந்நேரமும் நிறுத்திவிடலாம்.

ஆனால் இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் எல்லாம் அப்படிப்பட்ட கால அவகாசத்தினைத் தராது. சென்ட் பட்டனை அழுத்தியசில நொடிகளில் உங்கள் கடிதம் சம்பந்தப்பட்டவரின் மெயில் பாக்ஸை அடைந்துவிடும்.


ஏன், இந்த இமெயில் புரோகிராம்களும் சற்றுக் காக்கவைத்து பின் அனுப்பினால் என்ன? என்ற எண்ணம் தோன்றுகிறதா? தாராளமாகச் செய்திடலாம். அதற்கான செட்டிங்ஸ் மட்டும் செட் செய்திட வேண்டும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் இதனை மேற்கொள்ளும் வழியினைப் பார்க்கலாம்.

1. Tools மெனுவில் Options செலக்ட் செய்திடவும்.

2. அடுத்து Mail Set up டேப்பினைத் தட்டித் திறக்கவும்.

3. Send / Receive ஆப்ஷனில் அதன் மீது கிளிக் செய்திடவும்.

4. பின் All Accounts செக்ஷனில் Include this Group in Send / Receive என்பதில் செக் செய்து இருப்பதனை எடுத்துவிடவும்.

5. பின் Close அழுத்தி OK அழுத்தி வெளியே வரவும்.

அனைத்து அக்கவுண்ட்களையும் சென்ட்/ரிசீவ் ஆப்ஷனிலிருந்து எடுத்துவிட்டிருப்பதால் ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும்போதும் பெற முயற்சிக்கையிலும் சென்ட் / ரிசீவ் பட்டனை அழுத்த வேண்டும்.


இவ்வாறு நீங்கள் எழுதும் ஒவ்வொரு கடிதமும் உங்கள் முயற்சியில் தான் செல்லும். இது ஜஸ்ட் லைக் தட் சென்ட் பட்டனை அழுத்தும் வேலை இல்லை. சிறிது நேரம் ஆகும் என்பதால் நாம் முகவரியை மீண்டும் சரியா எனப் பார்க்கலாம்.


கோபத்தில் எழுதிய கடிதத்தினை மீண்டும் சரி செய்து நாகரிகமானதாக மாற்றலாம். கடிதத்தில் உள்ள டெக்ஸ்ட்டில் உள்ள சிறிய தவறுகளைத் திருத்தலாம். அழகு படுத்தலாம். மொத்தத்தில் அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கலாம்
அக்டோபர் 28, 2009

இ-மெயில் தவறுகளை அறிய


நாம் இ-மெயில் அனுப்பும் போது அதில் உள்ள பிழைகளை
நீக்கிவிட்டு மெயில் அனுப்புவோம். ஆனால் என்ன என்ன
பிழைகள் செய்தோம். அதை நீக்கி என்ன வார்த்தை சேர்த்தோம்
என இந்த தளம் மூலம் அறியலாம்.

அலுவலக உபயோகம் தவிர சொந்த உபயோகத்திற்கு
-நண்பர்களுக்கு - காதலிக்கு - மனைவிக்கு - என
இ-மெயில் அனுப்பும் போது இதை பயன் படுத்தலாம்.

உதாரணத்திற்கு

அழகான ராட்சஸியே....என தட்டச்சு செய்துவிட்டு
அதை டிலிட் செய்துவிட்டு அதில்
அழகான அன்னமே....என மாற்றுகின்றோம் என வைத்துக்
கொள்ளுவோம் ...இந்த தளத்தில் இது இரண்டுமே
டிஸ்பிளே ஆகும்.வித்தியாசத்தை விரும்புகின்றவர்கள்
இதை முயற்சிசெய்து பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.





இதில் உங்கள்பெயர், இ-மெயில் முகவரி, அதைப்போல் பெறுபவர் முகவரி
அளித்து செய்தியை தவறுதலாகவும், சரியாகவும்தட்டச்சு செய்யுங்கள்.

இறுதியில் Sent கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


நாம் தட்டச்சு செய்ததை அப்படியே பதிவு செய்து அவர்களுக்கு
லிங்க் அனுப்பி விடுவார்கள். அவர்கள் அந்த லிங்க் கிளிக்
செய்ததும் அவர்களுக்கு நாம் தட்டச்சு செய்த தகவலும் -
திருத்திய தகவலும் டிஸ்பிளே ஆகும்.
அனுப்பிய இ-மெயில் தகவல் அப்படியே படிக்கலாம்.
ஆனால் நாம் சொல்லவிரும்பிய தகவல் - சொல்லிய
தகவல் இவற்றை படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூடும்.
சும்மா ஜாலிக்காக பயன்படுத்திப்பாருங்களேன்.

இன்றைய போட்டோஷாப் பதிவிற்கானPSD படம்:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த படத்திற்கான லிங்க் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.


தீபாவளிக்கான ஸ்பேஷல் போனஸ் இது:-

இதில் உள்ள பட்டாசுக்களை யார் வேண்டுமானாலும்
வெடிக்கலாம். எப்போதும் தீர்ந்து போகாது. தீ காயம் ஏற்படும்
என்கின்ற பயம் இல்லை. தைரியமாக குழுந்தைகளை
வெடிக்க சொல்லிவிட்டு நாம் வேறு வேலைகளை பார்க்கலாம்.

இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து
கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.



இதில் விதவிதமான பட்டாசுக்கள் இருக்கும். வேண்டியதை
கொளுத்த கிளிக் செய்யுங்கள்.

வெடித்து சிதறுவதை கண்டு களியுங்கள்.

பட்டாசுக்களை மொத்தமாக வாங்க இங்கு கிளிக்-1, ,கிளிக்-2, செய்யுங்கள்.