Education

it is contains as Exam, Scholarship, paper, semester, primary, Grade 5, NIE, Tamil, Environment, English, Mathematics, Grade -1, Grade 2, Model, Results, Marks

Full Width CSS

LightBlog

Breaking

Cell Phone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cell Phone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜூலை, 2010

ஜூலை 26, 2010

Extend Mobile Phone Battery Life

Extend Mobile Phone Battery Life


1.Turn-off wireless connection like Wi-Fi if you are not using them. Most of the people leave Wi-Fi on even in the areas where there is no Wi-Fi network.

2.Nowadays third generation phones are making their presence in the market. Mobile devices like iPhone 3G, Blackberry and other models have a 3G feature that is useful for fast browsing experience. Turn off 3G feature if you do not use it or if there is no 3G service. You can still browse internet using the GPRS and EDGE services with your phone.

3.Vibrating alert is another big power hungry feature in the mobile phone. Using vibrating alert is good when you are in meetings or in a library, otherwise you can turn off vibrating alert. Moreover, there is no need of keypad tones and you can reduce ringing volume of the phone if you are not working in a sound polluted environment.

4.Your mobile phone display also uses lot of power to illuminate. Reduce screen brightness to the lowest level possible where you can see things on the screen clearly. Moreover, all the phones have this time out feature: set the display light out time to low values such that the display will turn off quickly after your use.

5.Keep your phone screen as simple as possible, using screensavers and animated wallpapers may look pretty but you must remember that they use up the battery power to stay running. If you want your battery to last longer, then you can turn off screensavers and stick to a simple wallpaper.

6.In most of the smart phones, you can load number of applications and utilize them. Terminate applications as soon as you finished working on them. Pressing end key does not terminate the application, they still remain running in the background using up the battery power. You can see all the background applications running on your phone by long pressing the menu key and terminate all the applications that you do not need.

7.Games are other power hungry applications, they use lot of power and most of the games do not allow the screen to dim or turn off. Play games less to save more on the battery. Even listening to songs and radio on the phone also uses lot of power. So think before you start playing games or listening to songs if you are on low battery.

8.If your phone supports automatic updates of emails or browser then change the update intervals let us say every 1 hour or so to save more on the battery power. Try using few email accounts and disable automatic update feature if you do not really need it.

9.Network coverage in another important factor that comes into picture when speaking about battery power. If your phone is in weak network coverage area or in no network area then switch off your phone or keep it in the flight mode to save on the battery. In the less or no network area phone uses lot of battery power to stay connected or to establish a connection with the network.

10.Turn off BlueTooth when you are not using it. Most of the people ignore to turn off BlueTooth even if they are not using any BlueTooth devices.

11.Recharge your battery every now and then to ensure that all the electrons in the battery move freely. Modern Lithium-ion batteries work well even if you recharge them before they discharge completely but it is good habit to recharge it after three fourth of the battery is discharged. This will not only improve battery’s performance but also improves its lifespan.

12.Avoid over heating of the battery to prevent damage to the mobile phone and to the battery. Keep your phone away from the direct Sun heat and any other radiations. Your phone battery works fine in the temperature range of 10 – 35 C.

5 ஜூலை, 2010

ஜூலை 05, 2010

இனிமேல் மொபைல் போனுக்கு சார்ஜ்சரை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை

மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.
படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சூரிய ஒளியில் இயங்கும் புளு எர்த் என்னும் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. கைக்கமாக உள்ள இந்த போனின் பின்பகுதியில் உள்ள வெப்பத்தகடு மூலம் சூரிய ஒளியை கிரகித்து அதன் மூலம் சார்ஜ் செய்யப்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனின் வெளிப்புறப்பகுதி மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலின் பொருட்களால் ஆனது. இந்தியாவிற்கு இந்த போன் எப்போது வரும் என்று தெரியவில்லை.
மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 மே, 2010

மே 02, 2010

‘கை’ வைத்தால் போதும் சார்ஜ் ஆகும் செல்பேசி!

செல்போன்களில் வசதிக் குறைவாகத் தோன்றுவது பேட்டரியின் சார்ஜ் பிரச்சினைதான். மனம்விரும்பிய வசதிகள் நிறைய இருப்பதால் அதிகமான நேரம் செல்போனில் செலவழிக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி சார்ஜ் தீர்ந்து போகும். பிறகு சார்ஜ் போட வேண்டும். சார்ஜ் இல்லாமல் சுவிட்ச்ஆப் ஆகிப்போனால் அந்த நேரத்தில் வரும் முக்கியமான அழைப்புகளையும் ஏற்க முடியாமல் சிரமப்பட நேரிடும்.
இதுமாதிரியான சிக்கலைத் தவிர்க்கவும், எளிமையான முறையில் சார்ஜ் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த புதுமை மொபைல். இதில் சார்ஜ் தீர்ந்துபோனால் அதில் உள்ள துளையில் விரலை நுழைத்து செல்போனை சில சுற்றுகள் சுற்றினால் போதும் தற்காலிகமாக பேசும் அளவுக்கு சார்ஜ் ஆகும். உங்கள் வேகத்துக்கு ஏற்றபடி கூடுதல் அளவு சார்ஜும் செய்து கொள்ளலாம். பிறகு வழக்கமான முறையிலும் சார்ஜ் செய்ய முடியும். விரலை பயன்படுத்துவதை விரும்பாதவர்களுக்கு அதற்கென தனி குச்சி ஒன்று தரப்படும். அதில்வைத்து செல்போனை சுழற்றினாலும் சார்ஜ் ஆகும்.
வேகமாகப் பரவும் அதிநவீன மொபைல் இது. எண்களை அழுத்தாமலே, தொடுவதை உணர்ந்தே செயல்படுவதால் ஆறாம் அறிவுடைய மொபைல் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிக்ஸ்த் சென்ஸ் வசதியை நாம் பயன்படுத்த விரும்பினால் நமது உள்ளங்கையில் எண்கள் ஒளிவடிவில் விழும்படி செய்து கொள்ளலாம். பிறகு அந்த எண்களை தொடுவதன் மூலமே செல்போனை இயக்க முடியும். இந்த மாதிரி மொபைல்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

27 டிச., 2009

டிசம்பர் 27, 2009

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து  அவரின் எண்ணுக்கே call  செய்யும் Hacking

உங்கள் நண்பர் அவருடைய எண்ணில்  இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .


இதுவும் மிகவும் எளிய வழிதான் .

முதலில்
http://www.mobivox.com 
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும்   mobile number  ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் .  மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை  நிரப்புங்கள்

அதில்


 அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த  இணையதளம் சென்று



உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்

பிறகு call button அழுத்துங்கள்  உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்)  call செல்லும் அவர் பார்க்கும் போது  mobile  அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து  அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து  உங்களுக்கு அழைப்புவரும் .

அதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான்  தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம்   ..  

ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு  இதனால் வந்துவிடக்கூடாது ,  இதனை தவறாக பயன்படுத்தினால்           Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்  என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .

இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை  இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் .   அனைத்து நாடுகளிலும்  இந்த
 வசதி உண்டு.

கூல் ஹாக்கிங்   டிப்ஸ் உங்களுக்காக....

6 டிச., 2009

டிசம்பர் 06, 2009

மொபைல் போன் வைரஸ்

lankasri.com கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது. முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.

மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும்

மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது. கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது. பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன.

இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன. இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும். இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை.

2004 ஆம் ஆண்டில் Cabir A என்ற வைரஸ் முதல் முதலாகத் தலை காட்டியது. புளுடூத் வழி பரவிய இந்த வைரஸ் பெரும்பாலும் எந்தவித பாதிப்பையும் தான் பரவிய மொபைல் போன்களில் காட்டவில்லை. மால்வேர் புரோகிராம்களைத் தயாரிக்கும் ஒரு சிலர் இது போல் மொபைல் போன்களுக்கும் வைரஸ்களை அனுப்ப முடியும் என்று காட்டுவதற்காகவே இதனைத் தயாரித்தனர்.

ஜனவரி 2005ல், Commwarrior வைரஸ் மிகப் பெரிய அளவில் பரவியது. புளுடூத் மூலமாக ஸ்கேண்டிநேவியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் அனைத்து மொபைல் போன்களுக்கும் பரவியது. ஏதேனும் ஒரு மொபைல் போனில் இந்த வைரஸ் அமர்ந்தவுடன் அருகில் உள்ள புளுடூத் இயக்கப்பட்ட அனைத்து போன்களையும் இது தேடி ஒட்டிக் கொள்கிறது. மேலும் உங்கள் அட்ரஸ் லிஸ்ட்டில் உள்ள அனைத்து எண்களுக்கும் மெசேஜ் அனுப்பி அதன் மூலமும் பரவுகிறது.இதுவரை வந்த மொபைல் வைரஸ்களில் இதுதான் இரு வழிகளில் பரவி அதிக சேதம் விளைவிக்கும் வைரஸாக உருவெடுத்துள்ளது.

பாதுகாத்துக் கொள்வது எப்படி?

எப்படி கம்ப்யூட்டர்களை அவற்றின் வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதே போல மொபைல் போன்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எப்போதும் ஒரு செய்தியைத் தாங்கி வரும் பைலையோ, புளுடூத் மூலம் வரும் பைலையோ, அதனை அனுப்பியவர், அல்லது புறப்பட்ட எண் நமக்குத் தெரியாத எண்ணாக, பழக்கம் இல்லா எண்ணாக இருந்தால், அந்த பைலைத் திறக்கக் கூடாது. நம் அவசரத்தில் இதனை எப்போதும் கவனமாகக் கொள்ள வேண்டும். அதிக முன்னெச்சரிக்கை யாக உள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டு, வைரஸ் பைல்களைத் திறந்துவிடும் நிகழ்ச்சிகள் நிறைய நடக்கின்றன.

புளுடூத் செயல்பாட்டினை மறைத்தே வைக்கவும். இயக்க வேண்டாம். அதனை "hidden" என்ற வகையிலேயே வைக்கவும். இதனால் மற்ற மொபைல் போன்களின் புளுடூத் வலையில் இது சிக்காது. இந்த செட்டிங்ஸை புளுடூத் ஆப்ஷன் திரையில் நீங்கள் காணலாம்.
செக்யூரிட்டி அப்டேட் பைல்களை, உங்கள் சிஸ்டம் பைல்களுக்கேற்ப, நிறுவனங்கள் அனுப்புகின்றன. இந்த பேட்ச் பைல்கள், வைரஸ் கொண்ட பைல்கள் எப்படிப்பட்ட பைல் பெயர்களில் வருகின்றன என்று பட்டியல் தருகின்றன. இவற்றைத் தெரிந்து வைத்து, அத்தகைய பைல்களைத் தவிர்க்கவும். FSecure, McAfee, Symantec ஆகியவற்றின் இணைய தளங்களுக்குச் சென்றால் இந்த பைல்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் சில தளங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிந்து வைத்தால், இவை மொபைல் வைரஸ் மற்றும் பிற தகவல்களைத் தொடர்ந்து அனுப்புகின்றன.

பல நிறுவனங்கள் மொபைல் போன் பாதுகாப்பிற்கென செக்யூரிட்டி சாப்ட் வேர்களைத் தயாரித்து வழங்குகின்றன. பெரும்பாலானவை இலவசங்களே. சில கூடுதல் வசதிகளுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்கின்றன. இவை வைரஸ்களை நீக்குகின்றன. வைரஸ் நுழைந்துவிடாமல் மொபைல் போன் களைப் பாதுகாக்கின்றன. சிம்பியன் சிஸ்டம் தயாரித்து வழங்கும் நிறுவனம், தன் சிஸ்டத்தில் புளுடூத் மூலம் வரும் வைரஸ் பைல்களைத் தடுக்கும் புரோகிராம் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறது.

மேலே தரப்பட்ட தகவல்களிலிருந்து எப்படி முதலில் வந்த வைரஸ் புரோகிராமிற்குப் பின் வந்த வைரஸ்கள், தங்கள் வடிவமைப் பிலும், மேற் கொள்ளும் சேத வழிகள் மற்றும் சேதங்களிலும் முன்னேறியுள்ளன என்று பார்க்க முடிகிறது. இப்போதைக்கு பெரும் அளவில் மொபைல் போன்களை இந்த வைரஸ் புரோகிராம்கள் போன்களைக் கெடுக்க வில்லை என்றாலும் வரும் நாட்களில் இவற்றின் தீவிரம் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் மூலம் வங்கி பணப் பரிமாற்றம் எல்லாம் மேற்கொள்ளப் போகும் சூழ்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

2 நவ., 2009

நவம்பர் 02, 2009

செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்


செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது.

அப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடந்தது

30 அக்., 2009

அக்டோபர் 30, 2009

கைத்தொலைப்பேசி ஆப்ரேட்டிங் சிஸ்டம்





இதுவரை கைத்தொலைப்பேசியில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய மென்பொருள் பல விதமாக வந்து உள்ளது நாம் கைதொலைப்பேசி வாங்கும் போது என் மாதிரியான ஆப்ரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ளது அதனால் நமக்கு என்ன பயன் என்று பார்த்துதான் வாங்குகின்றோமா?
நீங்கள் வைத்துஉள்ள கைத்தொலைப்பேசியில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Windows Mobile, iPhone, Android, Symbian, BlackBerry, and Palm)என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி என்றால் ஏன் வாங்கி இருக்கின்றீர்கள்? என்று பின்னூடம் இடவும்.
தற்போது Google கூட தன் பங்குக்கு Android என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கைதொலைப்பேசி வெளியிட்டு உள்ளார்கள்
அக்டோபர் 30, 2009

மொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க



இணையத்தில் பதிவுகளை வாசித்து கொண்டிருக்கும் போது பதிவர் டாக்டர். புருனோ அவர்களின் பயணங்கள் பிளாக்கில் மொபைல் போனில் அவர் பிளாக்கை பார்ப்பது பற்றிஎழுதியிருந்த இடுகை கண்ணில் பட்டது.

முன்பு என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் தமிழ் தளங்களை பார்ப்பதில் எழுத்துரு பிரச்சினை இருந்தது. ஆர்வம் இல்லாததால் அத்துடன் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் முயன்ற போது அதே எழுத்துரு பிரச்சினை. தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

புருனோ அவர்களின் இடுகையின் பின்னூட்டத்திலேயே பதிவர் மின்னுது மின்னல் இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு உதவி லிங்க் தந்து இருந்தார். அதன்படி உபயோகித்து பார்த்தேன். தமிழ் எழுத்துரு பிரச்சினை தீர்ந்து விட்டது. மேலும் இது போன்ற பிரச்சினை உள்ள பலரை சென்றடையட்டும் என்று இங்கு பகிர்கிறேன்.

மொபைலில் தமிழ் தளங்களின் எழுத்துரு பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறை 

1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini/இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.

2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

இது எனக்கு எவ்வித தடை இன்றி வேலை செய்தது. வேறேதும் வழிமுறைகள் இருந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள்.

எனது இந்த பிளாக்கை நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து கீழ்க்கண்ட முகவரிகளில் எளிதாக வாசிக்கலாம்.

http://bit.ly/tvs50 ORhttp://www.google.com/reader/m/view/feed/http://feeds2.feedburner.com/tvs50OR http://feeds2.feedburner.com/tvs50 OR http://tamilnutpam.mofuse.mobi/

உபயோகித்து பாருங்கள். குறைகள் ஏதேனும் இருந்தால் சுட்டி காட்டுங்கள். என்னை திருத்திக்கொள்ள உதவியாய் இருக்கும்.

29 அக்., 2009

அக்டோபர் 29, 2009

The future of cellphones

the future of cellphones

0 comments
Today's mobile phones can already send e-mail, browse the Web, and keep you in touch with friends and colleagues via voice or text message. Tomorrow's handsets will add even more to the menu,
In the next few years, cell phone networks will move data at several megabits per second, and will coexist with WiMax, Wi-Fi, and, for TV, 
 Look for sleek designs (such as Frog Design'sUbik), better battery life, e-payment support, and graphics muscle for true TV and console-style video gaming.

Expect not just high resolutions (8 megapixels and beyond), but also the same image-processing capabilities found in current digital still and video cameras.


GSM, CDMA, Wi-Fi, WiMax: Can't we all just get along? With IMS (IP Multimedia Subsystem), we just might. Now in trials, IMS network technology will allow any type of packet data--voice calls, video, music
 this innovative prototype design. Click on the image to see more features.this will bring more features in 2015

28 அக்., 2009

அக்டோபர் 28, 2009

வர இருக்கும் மொபைல்கள்




திருவிழா காலம் தொடங்கிவிட்டது. புதிய ஆடைகளுடன் வீட்டு சாதனங்களையும் புதியதாய் மாற்றும் வழக்கம் நம்மிடையே எப்போதும் உண்டு. மொபைல் போன்களைப் பொறுத்தவரை புதியதாய் என்ன வர இருக்கின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம், மொபைல் போன் நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அண்மையில் அறிமுகமான போன்கள், உலக அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில போன்களை நாம் நிச்சயமாக இங்கு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இவற்றின் சரியான விலை விற்பனைக்கு வருகையில் தெரியவரும்.


1.நோக்கியா என் 900:
வர இருப்பதில் முதல் இடத்தைப் பெறுவது நோக்கியா என் 900 ஆகும். இது என் 800 போனின் தொடர்ச்சி என யாரும் எண்ண வேண்டாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான மேமோ(Maemo) ஆகும். இதன் பிரவுசர் ARMCortexA8 மிக வேகமாக இயங்கும் திறன் கொண்ட புதிய பிரவுசர். இதில் தரப்படும்OpenGL ES 2.0 கிராபிக்ஸ் அக்ஸிலரேஷன், இந்த போனில் கிடைக்கும் காட்சிகளை முற்றிலும் புதிய அனுபவமாக்கிக் காட்டும். இதன் திரை 3.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை. ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு தரப்படுகிறது. 3ஜி போனாகக் கிடைக்கும் இதில் எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்து நெட்வொர்க் இணைப்பை எளிதாக்குகின்றன. Maemo பிரவுசர் மொஸில்லா தொழில் நுட்பத்தினால் இயக்கப்படுவது. அடோப் பிளாஷ் 9.4 தொகுப்பின் சப்போர்ட் தரப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் 32 ஜிபி; இதனை 48 ஜிபி வரை நீட்டிக்கலாம். 3.5 மிமீ இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டெஸ்ஸார் லென்ஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைந்து தரப்படுகிறது. எப்.எம் ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர் தரப்படுகிறது. இதன் விலை மார்க்கட்டிற்கு போன் வந்த பின்னரே தெரியும்.


2. எல்.ஜி. பி.எல். 40 சாக்லேட்:
எல்ஜி நிறுவனத்தின் சாக்லேட் மொபைல் போன் வரிசையில், அண்மையில் வெளியான மாடல் பி.எல். 40ஆகும். தன் வழக்கமான எஸ் கிளாஸ் யூசர் இன்டர்பேஸிலிருந்து சற்று விலகி மல்ட்டி டச் திறனுடன் இந்த போனை எல்ஜி வடிவமைத்துள்ளது. இந்த ஸ்லிம்மான, ஆனால் சற்று உயரமான, போனில் 4.01 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் வைட் ஸ்கிரீன் ரெசல்யூசன் 345 x 800 பிக்ஸெல்களாகும். இது ஒரு 3ஜி போன். நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. வை–பி நெட் இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 1 ஜிபி ஸ்டோரேஜ், இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, இருவகை வீடியோ பார்மட் சப்போர்ட், எப்.எம். ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர், டோல்பி மொபைல் சவுண்ட் இஞ்சின் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


3. சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா எக்ஸ் 2.
இந்த வரிசையில் வந்த முந்தைய போன்களைக் காட்டிலும் இது சற்று மேம்பாடு கொண்ட போன். ஸ்லிம்மாகவும் பார்ப்பதற்கு நளினமாகவும் இதன் தோற்றம் உள்ளது. இதன் கருப்பு நிறம் இதனை மிக அழகாகக் காட்டுகிறது. தரப்படும் குவெர்ட்டி கீ போர்டும் இணைந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மொபைல் 6.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும். வழக்கமான வசதிகளுடன் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வசதிகள் பின்வருமாறு:
போனில் 3.2 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 400 x 800 பிக்ஸெல்களாகும். ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு, ஆப்டிகல் ட்ரேக் பேட், வை–பி நெட் இணைப்பு, 3ஜி திறனுடன் எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., இயர்போன், ஹேண்ட்ஸ்பிரீ சாக்கெட், 8 மெகா பிக்ஸெல் திறன் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.


4. சாம்சங் கார்பி (Samsung Corby):
மிகச் சிறிய அழகான மொபைல் போன். மத்திய நிலையில் ரூ.10,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போன். டச் ஸ்கிரீன் கொண்டது.இதன் வண்ணங்களைப் பார்க்கையில் பெண்கள் விரும்பும் தன்மை இதற்கு உள்ளது எனலாம். அல்லது சாம்சங் மகளிரை மனதில் வைத்து இதனை வடிவமைத்தது எனலாம். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 2 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன.


5. எச்.டி.சி. டாட்டூ ((HTC Tattoo) :
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உள்ள மொபைல் போன்களில் இன்னும் எச்.டி.சி. நிறுவனப் போன்களே முன்னணியில் உள்ளன. மாதம் ஒரு மாடலை இந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் பேனலை நம் விருப்பப்படி மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம் என்பதால் இந்த பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் இதனாலேயே இளைஞர்கள் இதனை விரும்பலாம்.
மேலும் ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட குறைந்த விலை போனாக இது இருப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பயன்படுத்த எண்ணுவார்கள். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,3ஜி சப்போர்ட், எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், வை–பி இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட்,ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 3 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் பல மொபைல் போன்கள் விழாக் காலத்தினை ஒட்டி வெளியிடப்படலாம். மேலே கூறப் பட்டவை உறுதியாகத் தெரிந்த நிறுவனப் போன்களாகும்.
அக்டோபர் 28, 2009

சோனி எரிக்சன் தரும் புதிய வாக்மேன் மொபைல்கள்

W205 மற்றும் W395 என்ற பெயர்களில் இரண்டு புதிய வாக்மேன் போன்களைத் தன் ஸ்லைடர் போன் வரிசையில் சோனி எரிக்சன் அண்மையில் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வாக்மேன் போன்களை வடிவமைத்து தனிச் சிறப்போடு அறிமுகப்படுத்திய பெருமை சோனி எரிக்சன் நிறுவனத்திற்கு உண்டு. அந்த பெருமைக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்த போன்களும் உள்ளன.


W205 மொபைல் போனில் நான்கு அட்ரஸ் புக் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளதால் ஒரே குடும்பத்தில் பலர் இதனைத் தங்கள் தனி விருப்பங்களுடன் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் டிஸ்பிளே திரை 1.8 அங்குல அகலத்தில் 128 x 160 ரெசல்யூசனுடன் காட்சி தருகிறது. GPRSமற்றும் EDGE தொழில் நுட்ப வசதி நெட்வொர்க் இணைப்பை எளிதாக்குகிறது. 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ள கேமரா, ரெகார்டிங் வசதியுடன் உள்ள எப்.எம். ரேடியோ, மொபைல் தொலைந்து போனால் கண்டறிய ட்ரேக் ஐ.டி., புளுடூத் மற்றும் எம்2 கார்ட் சப்போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.


W205 போனைக் காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டதாக W395 மொபைல் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 2 அங்குல அகலத்தில் வண்ணத் திரை 176 x 220 ரெசல்யூசனுடன் உள்ளது. பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், A2DP கொண்ட புளுடூத், எப்.எம். ரேடியோ, மோஷன் கேம் சப்போர்ட், ட்ரேக் ஐ.டி., 2 மெகாபிக் ஸெல் கேமரா, எம்2 கார்ட் சப்போர்ட் ஆகிய பல வசதிகள் இதன் தரத்தை உயர்த்துகின்றன.


W205 மொபைலுடன் HPM64 ஆச்ண்ண் ரெப்ளெக்ஸ் ஹெட்போன், W395 மொபைலுடன் எச்.பி.எம். – 62 ஸ்டீரியோ ஹெட்செட் ஆகியவை வழங்கப்படுகின்றன. W205 மொபைல் விலை ரூ. 5,795;W395 மொபைல் விலை ரூ. 8,395. இவை ஒவ்வொன்றுடனும் 1 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது
அக்டோபர் 28, 2009

ஏர்டெல் வழங்கும் பிளாக்பெரி 8520

பிளாக்பெரி மொபைல் போன் வரிசையில், மிகவும் ஸ்லிம்மான பிளாக் பெரி கர்வ் 8520 மொபைலை அண்மையில் ஏர்டெல் மற்றும் ஆர்.ஐ.எம். இணைந்து இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளன.
ஏர்டெல் மொபைல் சேவையி னைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த போன் ரூ. 15,990 என்ற விலையில் கிடைக்கிறது. மெசேஜ் அனுப்பி வாங்குவதில் புதியதொரு திருப்பத்தை ஆர்.ஐ.எம். நிறுவனம் பிளாக்பெரியில் உண்டாக்கியது.
இப்போது அனைவரும் வாங்கும் விலையில் ஏர்டெல் பயனாளர்களுக்கு இந்த போனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறது என்று ஏர்டெல் அதிகாரி ரகுநாத் இதனை அறிமுகப்படுத்தி குறிப்பிட்டார். இளம் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் தகவல் பரிமாற்றத்தை எப்போதும் செயல்படுத்தும் அனைவருக்கும் இந்த போன் கட்டுப்படியான விலையில் உதவிடும் சாதனமாக இருக்கும் என்றும் கூறினார்.
320 x 240 பிக்ஸெல் ரெசல்யூசனில் 2.46 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன், 13.9 மிமீ தடிமன், 106 கிராம் எடை, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் வை–பி, டச் சென்சிடிவ் ஆப்டிகல் பேட், மீடியாவிற்கென தனி கீகள், 256 எம்பி பிளாஷ் மெமரி (16 மற்றும் 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு) 2 மெகா பிக்ஸெல் கேமரா, புளுடூத், ஸ்டீரியோ ஹெட் செட் ஜாக், DivX மற்றும் XviD வீடியோ பார்மட் சப்போர்ட், வாய்ஸ் டயலிங் ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ‘BB’என டைப் செய்து 543210 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பித் தெரிந்து கொள்ளலாம். ஏர்டெல் நிறுவன விற்பனை மையங் கள் மற்றும் அதிகார பூர்வ கடைகளில் இந்த போனைப் பெறலாம். இதன் விலை ரூ.15,990.

அக்டோபர் 28, 2009

நோக்கியா மொபைல் போன்களில் எம்.எஸ். ஆபீஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனமும் நோக்கியாவும் சென்ற வாரம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. வெகுகாலம் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த துறையைப் பொறுத்தவரை போட்டியாளர்களாக இருந்து வந்தன.

நோக்கியா தன் மொபைல் போன்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தவிர்த்து, சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்றும் தந்து வருகிறது. இவ்வகையில் இரண்டும் எதிரிகளாகவே இருந்து வந்தன.


ஆனால் கூகுள் , ஐபோன், ஆப்பிள் மற்றும் பிளாக் பெரியின் ஆர்.ஐ.எம். ஆகிய நிறுவனங்கள் மொபைல் போனில் தொடர்ந்து தரும் ஆபீஸ் தொகுப்பு வசதிகளினால், நோக்கி யாவால் தனியாகப் போட்டியிட்டு இந்த வசதிகளைத் தர முடியவில்லை.

மேலும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பல நிறுவனங்கள் தங்களின் மொபைல் போன்களில் கொண்டு வர முடிவு செய்து அமல்படுத்தி வருவதால், நோக்கியாவிற்கு சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் இப்போது நோக்கியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கை கோர்த்துக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி யுள்ளது.


இதன் அடிப்படையில் நோக்கியாவின் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள மொபைல் ஸ்மார்ட் போன்களில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மொபைல், மைக் ரோசாப்ட் ஆபீஸ் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் சார்ந்த சாப்ட் வேர் தொகுப்புகள் பதிந்து தரப் படும்.
இதன் மூலம் இந்த போன் களில் வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கி எடிட் செய்திடலாம்; பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் தொகுப்புகளையும் அதே போல பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் மூலம் இன்ஸ்டன்ட் மெசேஜ் மற்றும் கான்பரன்சிங் செயல்பாடுகளை எளிதாக மேற்கொள்ளலாம்.
இந்த ஒப்பந்தத்தில் மைக்ரோ சாப்ட் தரும் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து எந்த தகவலும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது