இலங்கையின் கல்வி வரலாறு


 தற்போது இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தில் பட்ட பின் டிப்ளோமா செய்யும் ஆசிரிய மாணவர்களுக்கு இது மிக பொருத்தமான ஒரு ஆய்வுக் கட்டுரையாகும் என்பதில் இதில் எந்த வித ஐயமுமில்லை

01.    இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறேன்.

•    கி.மு. 3ம் நூற்றாண்டில் அர்கத் மகிந்தர் இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியமை அப்போதைய சிங்கள இராச்சியத்தில் நிகழ்நத சிறப்பாகக் குறிப்பிடத்ததொரு சம்பவமாகும். இவ்வகையில் பௌத்தத்தின் வரவையடுத்து விகாரைகள் பௌத்த மதகுருமாருக்குத் தானமாக வழங்கப்பட்டன. இவ்விகாரைகள் பிக்குமார்கள் வதிவிடங்களாகவும், கல்வி பயிலும் இடங்களாகவும் படிப்படியாக வளர்ந்து பௌத்தக் கல்வி அளிக்கும் நிலையங்களாக மாறின.

•    பௌத்த கல்வியின் பிரதான நோக்கம் பௌத்த சமயத்தை வளர்ச்சி அடையச் செய்வதனுடாக நல்லொழுக்க நற்பண்புகளை வளர்த்தலும் சமய வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுமாகும். அதாவது, இலங்கை சமுதாயத்தை படிப்படியாக பௌத்த கலாச்சாரத்திற்கு வழிப்படுத்தி அரசர்கள், தலைவர்கள், விவசாயிகள், கைவினை முற்றியோர், தொழிலாளர் முதலியோரை வழிகாட்டலுமாகக் காணப்பட்டது. இந்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள தேரவாத, மகாயன சிந்தனைகளின் மூலம் கல்வி புகட்டப்பட்டது.

•    பௌத்த கல்விக் கலைத்திட்டத்தில்; சுயமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இங்கு பிக்குகட்கும், பொதுமக்களுக்கும் என்று பாடங்கள் வகுக்கப்பட்டன. நிக்காய சங்கராவில் கூறிய பொது மக்களுக்கான சில பாடங்கள் பிக்குகள் கற்கத் தடை விதிக்கப்பட்டது. பாடவிதானமானது 18 சாஷ்திரங்கள் 64 கலைப் பாடங்களை உள்ளடக்கி இருந்தாக பூஜாவலியின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

•    ஆரம்பக் கல்வியளித்த சிற்றூர் பள்ளிகளில் வாசிப்பு, எழுத்து, என்னும் பாடங்கள் சார்பான அடிப்படைப் போதனை மட்டும் அளிக்கப்பட்டது. உதாரணமாக வடங்கவி பொத்த என்னும் செய்யுள் தொகுதி  கண்டி இராச்சிய சிற்றூர் பள்ளிகளில் பயில்விக்கப்பட்டது. அங்கு போதித்த வாசிப்பு நூல்களாவன நம்பொத்த, மகுல்லக்குன, கணதேவிஹெல்லா, பத்தினிஹெல்ல, புத்த கஜ்ஜாய, சகஸ்கடய எழுத்துப் பயிற்சிக்கு கோயிற் பள்ளியின் கலைத்திட்டத்திலே ஏட்டுக்கல்விக்குரிய பாடங்களும் தொழில் கல்விக்குரிய பாடங்களும் இடம் பெற்றன. இதில் பௌத்த சமயப் போதனை இன்றியமையாத அங்கமாக இடம்பெற்றது. மேலும், சோதிடம், மருத்துவம் போன்ற உயர் பாடங்களும், பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழித்துறைப்பாடங்களும் அங்கு முக்கியத்துவம் பெற்றன.

•    உச்சநிலைக் கல்வி வழங்கிய பிரிவேனாக்களின் விரிந்த, பரந்த கலைத்திட்டதிலே அடங்கிய பாடங்களாவன சமயத்துறை அறிவு, வேதங்கள், சமய ஒப்பீட்டுக் கல்வி, சிங்கள, பாளி, சமஸ்கிரத மொழிகள், வரலாறு, இலக்கணம், தர்க்கம் போன்ற பண்பாட்டுதுறையறிவுப் பாடங்களுடன் உயர் சிறப்புத் தொழிற் பாடங்களான சட்டம், வானவியல், மருத்துவம், கட்டடக் கலை, ஓவியம் போன்றனவும் இடம் பெற்றன.

•    பௌத்த கல்வி அமைப்பின் கற்றல், கற்பித்தல் முறைகளாக வாய்மொழி மரபு முறைகள்; பயன்படுத்தப்பட்டன. இவற்றிக்கு உதாரணங்களாக வாய்மொழிப் பாரம்பரியத்தின் அங்கங்களான கலந்துரையாடல், சொல்லாடல், ஓதல், உச்சாடனம், விவாதம், சொற்போர், வினாவிடை, ஒப்புவித்தல் போன்ற முறைகள் அனுசரிக்கப்பட்டன. இதன் பயனாகப் பொருள் அறியாத மனனம் அல்லது உருப் போடுதல் நேரிட்டது.

•    இக்கல்வி முறைமையின் ஆசிரியர்களின் பெரும்பாலானோர் பௌத்த துறவியர் ஆவர். காலப்போக்கிலே துறவியர்; அல்லாத கல்விமான்களும் பிரிவேனாக்களிள் ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டனர்.

•    இலங்கையின் பண்டைய உள்நாட்டுக் காலக் கல்வியின் முறையின் ஒழுங்கமைப்பு கட்டமைப்பானது தெளிவாய் ஆராயக்கூடிய மூன்று கல்வி நிலைகள் உள்ளன. ஆவையாவன :

i.    ஆரம்ப நிலை கல்வியளித்த சிற்றூர்பள்ளி – கிராமப் பாடசாலை (குருகெதர)
ii.    இடைநிலை கல்விபுகட்டிய கோயிற்பள்ளி
iii. உயர்நிலை கல்வியளித்த பிரிவேனா
  •    குருவின் வீடே சிற்றூர் பள்ளியாக விளங்கியது. சிற்றுர்களில் வசித்த பெரும்பாலன பிள்ளைகள் இவ்வாறான வீட்டுமையச் சிற்றூர் பள்ளிகளில் ஆரம்ப நிலை கல்வி பெற விரும்பின. இப்பள்ளிகள் மேலை நாட்டுப் பாடசாலைக் கல்வி இலங்கையில் அறிமுகமாகும் வரை தொடர்ந்து இயங்கியது.

  •  இடைநிலைக் கல்வி பெற விரும்பியோர் இக்கோவிற் பள்ளிகளில் சேர்ந்து கொண்டனர். இத்தகைய பள்ளிகள் தமது பாராமரிப்புக்காக புரவலர்களான மன்னர்கள் வழங்கிய மானிய நிலம் போன்ற நன்கொடைகளைப் பெரிதும்  சார்ந்திருந்தனர். துறவிகள், துறவியர் அல்லாதோர் ஆகிய இரு சாராரும் கல்வி பயில அனுமதிக்கப்பட்டட பிரிவேனாக்கள் பண்டைய இலங்கைக் கல்வியமைப்பில் உச்சிநிலைக் கல்வி வழங்கப்படும். நிலையங்களாகத் திகழ்நதன. மகாவிகாரை, அபயகிரி, ஜேதவனராமய என்பன அனுராதபுரத்தில் இருந்த முக்கியமான கல்வி நிலையங்களாகும். மேலும், சுநேத்திரதேவி, விகாமாதேவி, பத்மாவதி, சிறிமேவன் போன்ற பிரிவேனாக்கள் கி.பி. 15 நூற்றாண்டில் சர்வதேச இலக்கியப் புகழ் பெற்ற துறவிகள் தலைமை வகித்தவையாகும்.
  • இக்கல்வி முறையில் மதிப்பீடானது மாணவர் மனனமிட்டு ஒப்புவித்தலை ஆசிரியர் சரி பிழை பார்ப்பதாக இருந்தது.
  •  இக்கூற்றின் படி முறைசார் கல்வி முறையும் தன்னிறைவுப் பொருளாதாரமும் காணப்பட்டதாகவே கூறப்பட்ட போதிலும் இங்கு முழுமையான முறைசார் கல்வி முறை காணப்படவில்லை. இக்காலத்தில் பொருளாதார அமைப்புக்கு ஏற்ப முறைசாராக் கல்வி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆரியர்கள் கொண்டுவந்த பொருளாதார முறைகள் பற்றிய அறிவு இந்நாட்டவர்களுக்கும் கற்பிக்கப்பட்டது. அத்துடன் மானியமுறை பரிபாலன அமைப்பினுடாக மானியமுறை பொருளாதார முறையும் நடைபெற்றது. நாட்டின் நிலைப்பாட்டிற்கு அவசியமான அறிவும் பயிற்சியும் மானிய முறைச் சமுதாயத்திற்கு ஏற்ற முறையில் அவ்வவ் வகுப்பினருக்கு ஏற்ற முறையில் முறைசாராக் கல்வியினுடாக வழங்கப்படுகின்றது. உதாரணம்: யுத்த நுட்பம், வாள், ஈட்டி செய்வதற்கான நுட்பங்கள், நெசவு, உலோகத் தொழில், ஆபரண வேலைகள், குயவவேலைகள், தச்சு வேலைகள், உடை தயாரித்தல், வீடு நிர்மாணித்தல், சித்திர வேலைகள் முதலிய சகல துறைகளிலும் அறிவு திறனும் பெற்று வாழந்துள்ளார்கள். சகல துறைகளிலும் அறிவினை ஒரு முகமாக வழங்கப்படும் நிறுவன அமைப்புக் காணப்பட்டமைக்கான சான்றுகள் இல்லை. முறைசாராக் கல்வியினுடாகவே தமது அறிவு, திறன்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
  • பண்டைய கல்விமைப்பில் சமயத்துறைக் கல்விக்கும் அறநெறிக் கல்விக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பௌத்த குருமார்கள் உபதேசங்கள், கிரியைகள், சடங்குகள் எனும் முறைசாராக் கல்வி வழிகள் மூலம் பொதுமக்களின் உள்ளங்களில் ஒழுங்க விழுமியங்களைப் பதித்தார்கள்.
  • பெண்கள் கல்வி பயிலும் வாய்ப்பு தாழ்நிலையில் காணப்பட்டது. எனினும் நடனம், ஓவியம் போன்ற பாடங்களில் அவர்கள் உயர்சிறப்புத் தொழிற் கல்வி பெறும் வாய்ப்பு இருந்தது.
  • கல்வி முகாமை மன்னர்களின் பேராதரவில் செழுமை கண்டது. இந்த ஆதரவு சிங்கள இராச்சியங்களின் சீர்குலைவினால் கிடைக்காமல் போனதும் கல்வித்துறை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.
  • பிறநாட்டுப் படையெடுப்புக்கள் காரணமாகத் தென்மேற்குத் திசை நோக்கிய இடப்பெயர்ச்சியை அடுத்து நீரியலமைப்புச் சார்ந்த நாகரிகத்திற்கு தேவையான திறன்கள் வழக்கில் இல்லாதொழிந்தன. தொழில்துறைத் தொழில் பயிற்சியும் தேய்வுற்றது.
02.    இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறேன்.

    போத்துக்கேயர் 1505ல் இலங்கைக்கு வந்து இந்நாட்டின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர். இவர்களின் ஆதிக்கம் இலங்கையின் வடபகுதி, மேற்குப்பகுதி, தென்பகுதி என்பவற்றில் மட்டும் நிலவியது. அவர்களின் ஆட்சிக்காலம் போரும், பூசலும் நிறைந்ததாக விளங்கியதால் கல்வி வளர்ச்சிக்கு மிகச்சிறிய வாய்ப்பே இருக்கின்றது.

    இக்காலத்தில் கல்வியின் நோக்கம் கத்தோலிக்க மதத்தைப் பரப்புதல், தமது சமயத்தை ஏற்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தமது வியாபாரத்துக்கான ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்து கொள்ளல், தமது சமயத்தை ஏற்றுக் கொண்டோருக்கு வாசிப்பு, எழுத்து, எண்கணிதம் போன்ற பாடங்களைக் கற்பித்தல் என்பனவாகும்.

    போத்துக்கேயரின் கல்வியினது பிரதான குறிக்கோள் சமயத்தைப் பரப்புவதாக அமைந்தமையால் அவர்களின் கலைத்திட்டத்திலே சமயம் சார்பான பாடங்களுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது. சமயத்தை பரப்புவதற்கு உதவக் கூடிய வாசிப்பு, எழுத்து, தர்க்கம், பேச்சுவன்மை போன்ற பாடங்களும் சமயப் பாடங்களும் இந்நிறுவனங்களில் கற்பிக்கப்பட்டன. பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களுக்கு சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்குடன் போத்துக்கீய, அராபிய இத்தாலிய, கிரேக்க, இலத்தின்  மொழிகளும் ஆரம்ப பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டன. உயர் கல்வி நிறுவனங்களான கல்லூரிகளில் அறக்கல்வியும், சமய சித்தாந்தமும் போதிக்கப்பட்டன.

    போத்துக்கேயர் காலக் கற்பித்தல் முறையாக வினாவிடை முறையை பயன்படுத்தினர். இம்முறையினை சகல சமயக் குழுக்களும் கல்விச் செயற்பாட்டில் உபயோகத்தக்க வாசிக்க முடியாதோருக்கு சமயக் கீதங்களையும், சமய ஆராதனைகளையும் மேற்கொண்ட போத்துக்கேயர் குருமார் மனனம் செய்யும் முறையையும் ஒரு கற்பித்தல் முறையாக பயன்படுத்தினர். பாடல்கள் பாடுவது, நாடகங்கள் நடிப்பது மூலம் கற்பித்தல் நிகழ்கின்றது.

    போத்துக்கேயர் கல்வி முறையில் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கமைப்பானது பின்வருமாறு காணப்பட்டது.

ஐ.    பரிஷ் பாடசாலைஃ பங்குப் பாடசாலை :
    1543ல் முதல் முதலில் இலங்கைக்கு வந்த பிரான்சிஸ்கன் குழுவைச் சேரந்த மதகுருமார் கிறிஸ்தவ கோவில்களை மையமாகக் கொண்டு இப்பாடசாலைகளை அமைத்தனர்.
ஐஐ.    ஆரம்பப் பாடசாலை :
    போத்துக்கேய, அராபிய, கிரேக்க, லத்தீன் மொழிகளைக் கற்பிப்பதற்காக இப்பாடசாலைகள் சிலாபத்திலும், மாதம்பையிலும் நிறுவப்பட்டன.
ஐஐஐ.    கல்லூரிகள் :
    இவை பிரான்சிஸ்கன் போன்ற இடங்களில் நிறுவப்பட்டன. இவை ஆரம்ப, பரிஷ் பாடசாலைளை விடத்தரம் கூடியனவாகும்.
ஐஏ.    ஜெஸ_யிட்ஸ் கல்லூரிகள் :
இவை ஜெஸ_யிட்ஸ் தலைவர்களால் நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களாகும். இவற்றின் நோக்கம் சமயக்குருமார்களை பயிற்றுவிப்பதாகும். இவற்றின் தரம் ஆரம்பப் பரிஷ் பாடசாலைகளில் இருந்து கற்று வெளியேறியோரின் தரத்திலும் கூடியதாகும்.
      ஏ.    அநாதைப் பாடசாலை :
    பிரான்சிஸ்கன் பிரிவினர் நிறுவிய இந்த அனாதை இல்லம் போத்துக்கேய ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் சமுதாய பொருளாதார காரணங்களால் அநாதையான குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி வழங்கவும், தொழிலுக்கு வழிகாட்டவும் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

    போத்துக்கேயர் கல்வி வழங்கும் பொறுப்பினை கத்தோலிக்க சமயத்திடம் கையளித்தார். அத்துடன் கல்வியை வளர்ப்பதற்கு அவசியமான உதவிகளையும், ஒத்துழைப்பையும் குறைவின்றி வழங்கினர். இதேவேளை கத்தோலிக்க சமயத்தை தழுவிய மன்னன் தர்மபாலன் இக்குருமார்களுக்கு நிலங்களை வழங்கினான் பக்திமிக்க கத்தோலிக்கர்களும் தனிப்பட்ட உதவிகைளச் வழங்கினார்கள். போத்துக்கேய நிர்வாகிகள் கல்வி வழங்கும் பொறுப்பை
பிரான்சிஸ்கள் - 1543
ஜெஸ_யிட்ஸ்  - 1602
டொமினிக்கன்  - 1606
ஒகஸ்டினியன்  - 1606 ஆகிய சமயக் குழுக்களிடம் கையளித்தனர்.

    முதல் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் போத்துக்கேயர் ஆவார். இருப்பினும் இக்கல்வி முறையில் பின்வரும் குறைபாடுகள் காணப்பட்டன.
ய.    தங்களது சமய அடிப்படையில் மட்டும் கல்வியை ஒழுங்கமைத்தமை
டி.    பாடத்திட்டம் குறுகியது. அதாவது லௌதீகக் கல்விக்கு இடம் கொடுக்காது சமயக்கல்வியை மட்டும் போத்தித்தமை.
உ.    கல்விப் பொறுப்பு அரசிடமல்லாது சமயக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ன.    சமுதாயப் பாகுபாட்டுக்குப் பாடசாலை இடமளித்தது.
ந.    முறையான பாடசாலைப் பரிபாலனம் இல்லை
க.    கட்டாயக் கல்வி இல்லை.

கி.பி. 1658-1796 வரையான காலப்பகுதியில் டச்சுக்காரர் இலங்கையை ஆட்சி செய்தனர். இவர்களின் ஆரம்பக்காலம் போத்துக்கேயர் காலத்தை விட அமைதியானது. கல்வியைப் பொறுத்தவரை அவர்களின் பிரதான குறிக்கோள்களுக்கும் போர்த்துக்கேயரின் குறிக்கோள்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருக்கவில்லை. இவர்களின் பிரதான குறிக்கோள் கல்வி மூலம் சமயத்தைப் பரப்புதல் ஆகும். மேலும், தமது சமயத்தை தழுவியோருக்கு எழுத்து தொடர்பான ஆரம்பக்கல்வியை வழங்குதல், தமது அரசியல் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தல், சமயப்பிரச்சாரத்திற்கு அவசியமான பிரசாரங்களையும் ஆசிரியைரையும் பயிற்றுவித்தல், தமது நிர்வாகத்தில் உதவுவதற்கு ஒரு மத்திய வகுப்பினரை உருவாக்குதல் போன்றனவும் அவர்களின் கல்வி நோக்கங்களாக இருக்கின்றன.

    பாடவிதானமும் போதனை மொழியும் :

    பங்குப்பாடசாலைகளில் சிங்களம். தமிழ், எழுத்து, வாசிப்பு,கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகள் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
    செமினரிப் பாடசாலைகளில் கீழ்ப்பிரிவில் ஒல்லாந்த மொழி, இலக்கணம், கட்டுரை,கிரேக்க, ஹிப்ரு மொழிகள் என்பவற்றுடன் சுதேச மொழிகளில் உள்ளவற்றை ஒல்லாந்த மொழிக்கு மொழி பெயர்ப்பதும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டது.
    மேல் வகுப்புக்களில் இலத்தீன், கிறிஸ்தவ சமயம் என்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
    அநாதைப் பாடசாலைகளில் சமயக் கல்வியுடன் எழுத்து, வாசிப்பு, எண்கணிதம் ஆகியவை கற்பிக்கப்பட்டன.
    இந்நிறுவனங்களில் ஆண் பிள்ளைகளுக்கு தொழிற்பயிற்சியும் பெண் பிள்ளைகளுக்கு தையல், பின்னல், வீட்டு(வேலை) பணி ஆகியன தொடர்பான பயிற்சியும்  வழங்கப்பட்டன.
    பரிஷ் பாடசாலைகளில் சுதேச மொழிகளான தமிழும், சிங்களமும் போதனா மொழிகளாக இருந்தன.
    ஐரோப்பிய நாட்டவருக்காக நிறுவப்பட்டிருந்த தனியார் பாடசாலைகளில் போதனா மொழியாக ஐரோப்பிய மொழிகள் விளங்கின.
    கொழும்பில் இருந்த குருத்துவக் கல்லூரியில் (செமினரி பாடசாலை) தொடக்க நிலைப் பிரிவு, இடைநிலைப்பிரிவு உயர்நிலைப் பிரிவு என்னும் முப்பிரிவுகள் அமைந்திருந்தன. தொடக்க நிலைப்பிரிவில் சுதேச மொழியும், இடைநிலை, உயர்நிலைப் பிரிவுகளில் பயிற்றுவிப்பு மொழியாக டச்சு மொழியும் விளங்கின.

    ஆசிரியர்களும் கற்பித்தல் முறைகளும் :

    புரட்டஸ்தாந்து சபை சமய குருமார்கள், சமய போதகர்கள், படை வீரர்கள், சில பொதுமக்கள் ஆகியோர் ஆசிரியர்களாக சேவை செய்தனர். புரட்டஸ்தாந்து சமயத்தை சாராதோர் ஆசிரியர்களாக தெரிவு செய்யப்படவில்லை.
    தலைமையாசிரியராக கிராமத்தின் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டார். இவர் உபாத்தியாயர்; என அழைக்கப்பட்டார். பரிஷ் பாடசாலையின் தலைமையாசிரியருக்கு தோம்பு வைத்திருக்கும் பதவி வழங்கப்பட்டது. பிறப்பு, இறப்பு, விவாகப்பதிவு செய்தல் உறுதி எழுதும் நொத்தாரிசின் வேலைகள் என்பனவும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தன.
    பரிஷ் பாடசாலைகளில் கற்பிப்பதற்கு மாணவர் ஆசிரியர் முறையும் பின்பற்றப்பட்டது.
    செமினரி பாடசாலைகளின் அதிபர் பதவி ஒல்லாந்தர் சமயகுருமாருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
    கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதுடன் மேலதிக வேலைகளின் பொருட்டு மேலதிக சம்;பளமும் வழங்கப்பட்டது.



    கற்பித்தலில் வினா விடை முறையே அதிகமாக உபயோகிக்கப்பட்டது. பாடல்களும், பழமொழிகளும் மனப்பாடம் செய்விக்கப்பட்டன. 1737 இல் ஒல்லாந்தர் அச்சகம் நிறுவியதும் முதல் அதிகமாக செய்முறை அப்பியாசங்களும், நூல்களை உபயோகித்து கலந்துரையாடலும் விவாதித்தலும் உபயோகிக்கப்பட்டன. மொழி கற்பித்தலில் இலக்கண நூல்களும், அகராதிகளும் பயன்படுத்தப்பட்டன. அச்சகம் நிறுவியது முதல் பாடல்கள் அடங்கிய பிரசுரங்களும், சமய வெளியீடுகளும் கற்பித்தலில் உபயோகிக்கப்பட்டன.

    கல்வி;ப் பொறுப்பும் நிருவாகமும் :
    ஒல்லாந்தர் கல்வி வழங்கும் பொறுப்பை அரசின் பொறுப்பாக ஏற்றுக்கொண்டனர். நிதி வழங்கும் பொறுப்பையும் அரசே ஏற்றுக் கொண்டது. கல்வி நிருவாகத்தில் பாடசாலைகளை முறையாக நடாத்துதல். நன்கொடைகள் வழங்கல், ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்ளல், தகைமைகளைத் தீர்மானித்தல், கற்பிக்கும் நேரத்தையும், நிறைவேற்ற வேண்டிய சேவையையும் தீர்மானித்தல், போதனா மொழி, பாடவிதானம், கட்டாயக்கல்வியைச்; செயற்படுத்தல் ஆகிய சகல கருமங்களினதும் முகாமைத்துவச் சேவைகளை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.

    ஒல்லாந்தர் அரசில் 15 வயதுவரை இலவச கட்டாயக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட் அதே வேளை பாடசாலை செல்வதற்கு முன் நிபந்தனையாக கிறிஸ்தவ சமயத்தைத் தழுவ வேண்டும் என்பதும், தேவாலயங்களுக்கு ஒழுங்காகச் செல்ல வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டன. பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாதோர் தண்டப்பணம் செலுத்த வேண்டியிருந்தது.

    15 வயதான நிலையில் பள்ளித் தேர்வின் பின்னர் லாஜர்டீன் என்னும் மாணவர் விடுகைப்பத்திரம் வழங்கப்பட்டது. 15 வயதின் பின்னர் 17 வயதில் நியூ லாஜர்டீன் என்னும் புது விடுகைப்பத்திரம் பெறும் வரை மாணவர் ஒருவர் இரு வருட காலம் பகுதி நேர அடிப்படையில் பள்ளிக்குச் செல்லும் நிலை நீடித்தது. மேலும் 19 வயதில் ஓட் லாஜர்டீன் என்னும் பூரண விடுகைப்பத்திரம் பெறும் வரை இன்னும் இருவருட காலம் ஒரு மாணவர் பள்ளிக்குத் தொடர்ந்து செல்லும் நிலைமை நிலவியது.

 







    நிருவாகப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் ஆட்சி மேலதிகாரி “திசாவை”யின் தலைமையில் “ஸ்கொலார்கல் கொமிசன்” எனப்படும் கல்வி ஆணைக்குழுவை அரசு அமைத்தது. (கல்விச் செயற்பாடுகளையும், நிருவாகச் செயற்பாடுகளையும் ஒருங்கே மேற்பார்வை செய்வதற்கும் நெறிகை (ஆழnவையசiபெ) செய்வதற்கும் இந்த ஆணைக்குழு பொறுப்பாயிருந்தது)


•    ஒல்லாந்தர் கல்வி நிறுவனங்கள் :

01.    பரிஷ் பாடசாலைகள் - பங்குப் பாடசாலைகள்
    பங்குப்பாடசாலைக்     கலைத்திட்டத்தில் வாசிப்பு, எழுத்து, கிறிஸ்தவக் கோட்பாடுகள் என்னும் பாடங்கள் இடம்பெற்றன.

02.    தனியார் பாடசாலைகள்
        ஐரோப்பிய நாட்டவர் வேறாக கற்பதற்கு நிறுவப்பட்டவை ஆகும்.

03.    செமினரில் பாடசாலைகள் ஃகுருத்துவக்கல்லூரிகள்
        இவை ஒல்லாந்தரின் உயர் கல்வி நிறுவனங்களாகும். இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் கொழும்பிலும் (1696) யாழ்ப்பாணத்திலும் (1690) நிறுவப்பட்டன. இந்நிறுவனங்களின் நோக்கம் சமய குருமார், போதகர்கள,; எழுதுவினைஞர்கள், சமயம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர்களைத் தோற்றுவிப்பதாகும். செமினரிப்பாடசாலைகளில் கற்று தமைமை பெற்றவர்களே சுதேச மொழி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிரந்தர சம்பளத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது

    மேலும் செமினரிப் பாடசாலைகளில் கல்வி கற்றவர்களுக்கே முதலியார் கிராமத் தலைவர் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டன. தவிரவும் ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கத்தில் வேலை செய்ய விரும்புபவர்களும், புலமைப்பரிசில் பெற்று உயர்கல்விக்காக லெய்டன் செல்ல விரும்புபவர்களும் செமினறிப் பாடசாலைகளில் கற்றிருக்க வேண்டும்.


04.    “நோமல்” பாடசாலைகள் (ஆசிரியர் கல்லூரிகள்) ஃநியமனப் பாடசாலை:
    ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க இக்கல்வி நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இது செமினரி பாடசாலையோடு இணைக்கப்பட்டிருந்தது. செமினரிப் பாடசாலைகளால் சமயம் கற்பிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோர்மல் பாடசாலைகளில் கற்பித்தற் பயிற்சி (தொழில்சார் கல்வி) வழங்கப்பட்டது.

05.    விஸ்கமிர். அறமென்ஹஸ் இல்லங்கள் :
    ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அனாதைக் குழந்தைகட்கும், வறிய குழந்தைகட்கும். கல்வி வசதிகள் செய்து கொடுப்பட்டிருந்தன. இவ்வகையில்,அநாதைப் பிள்ளைகளின் மடங்கள் “விஸ்கமிர்” எனவும், றிய குழந்தைகளின் இல்லங்கள் “அறமென்ஹஸ்”; எனவும் அழைக்கப்பட்டன.

06. அடிமைகளுக்கான கல்வி வசதிகள் :
        ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கத்திற் சேவை செய்த ஒல்லாந்தர் கட்டு பணிவிடை செய்த அடிமைகளுக்கு ஒல்லாந்தரின் மொழியையும் சமயத்தையும் கற்பிப்பதற்கான விஷேட கல்வி முறை பின்பற்றப்பட்டது. வீடுகளில் பணியாளர்களாக ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு வீட்டு பணிகளைச் செய்யும் போதே விஷேட ஆசிரியர்களைக் கொண்டு கல்வி பெறும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

•    ஒல்லாந்தர் கல்வி முறையின் குறைபாடுகள் :

    கல்விச் செயல்களில் சமயச்சார்பு வரையறையற்றகாக இருந்தது. கட்டாயக் கல்வியினுடாக கட்டாய மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டமை ஒரு பெரும் குறைபாடாகும். பாடவிதானம் குறுகியதாயிருந்ததுடன் செய்முறை முக்கியத்துவமற்றதாகவும் காணப்பட்டது. அத்துடன் நாட்டு நிலைமையைக் கவனிக்காது கல்வி முறையைத் தயாரித்தல் புரட்டாஸ்தாந்து சமயத்தைத் தழுவியர்வர்களுக்கு மட்டுமே பதவிகளை வழங்குதல். கல்வியினை ஒரு சமுதாய வகுப்பிற்கு மட்டும் உரிமையாக்குதல் அதனுடாக வகுப்புப் பாகுபாட்டினை ஏற்படுத்தல் ஆகிய குறைபாடுகளையும் பலவீனங்களையும் உடையதாகக் காணப்பட்டது.

•    போத்துக்கீசக் கல்வியின் முறையின் பிற்கால விளைவுகள் :

        கி.பி. 1505 இல் இலங்கைக்கு வந்த போத்துக்கீசர் 1658 வரை இலங்கையில் கரையோர மாகாணங்களைப் பரிபாலித்துடன் கத்தோலிக்க சமயத்தை கல்வியினூடாக பரப்ப முயற்சித்ததையும், அதனாற் போத்துக்கீசக் கல்வி முறையில் பல குறைபாடுகள் காணப்பட்டதுடன் பிற்காலத்தில் பல விளைவுகளையும் ஏற்படுத்துயள்ளதையும் தற்போது அறிந்து கொண்டுள்ளீர்கள்.


    ஆங்கிலயர் காலத்தில் கல்வி முறை பற்றி ஆராய்வோம் :

    ஆங்கிலேயர் கி.பி. 1798ல் இருந்து இலங்கை சுதந்திர நாடாக மாறும் வரை இங்கு தம்து ஆட்சியை நிலைநிறுத்தினர்.. போர்த்துக்கேய, ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்;தினை விட இலங்கiயில் கல்வித்துறையிலும் இவர்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது. ஆரம்ப கட்டத்தில் இயங்கி பரீஸ், கொழும்பு அகடமி, அநாதைப் பாடசாலைகளில் கற்பித்தல் மொழி சுNதுச மொழியாகவும் அதனுடன் ஆங்கிலமும் சகல மாணவர்களுக்கும் கற்பிக்கப்பட்டது. இதனால் இருமொழி தெரிந்தவர்கள் உருவாக்கப்பட்டனர். இது ஆங்கில ஆட்சியை நடாத்த உதவியது.

    கொழும்பு அகடமியில் உள்நாட்டவர் இலவசமாக கல்வி கற்றனர். வெளிநாட்டவர் கல்விக்க கட்டணம் அறிவிடும் பிரிவில் படித்தனர்.

    பின்னர் மிஷனரிகள் இலங்கைக்கு வருகை தந்தன. 1805-1818 வரை மிஷனரிகளின் யுகம் என வரணிக்கப்படுமளவிற்கு இவை இலங்கையின் கல்வி வரலாற்றை மாற்றி அமைத்தன. சமயத்தின் ஊடாக மிஷனரிக் குழுக்களை புதிதாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் பழைய பாடசாலைகளை புனரமைத்து மேற்பார்வை செய்வதற்கும் ஒத்தாசை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

    அத்துடன் கட்டிடங்களை நிர்மாணிக்க நிதி உதவி, கிறிஸ்தவ நூல்கள் அச்சிட்டுக் கொடுத்தல், திறமையான கிராமப்புற மாணவர்களுக்கு அகடமியில் கற்பதற்கு வசதியளித்தல் மற்றும் பெல் முறை பின்பற்றப்பட்டது. இங்கு பணியாற்றிய 5 மிஷனரிகளும் பல்வேறு பாடசாலைகளை உருவாக்கினர். இவை சுதேச, ஆங்கில மொழிப் பாடசாலைகளாகவும், கட்டணம் அறவிடும் கட்டணம் அறிவிடாத பாடசாலைகளாகவும் இயங்கின.
    மிஷனரிகளில் சிறந்ததும் பொருளாதார வளமிக்க குழுவாகவும் அமெரிக்க மிஷனரி இருந்தது. இவர்கள் விஞ்ஞான – கணித அறிவுடன் ஏனைய பொது அறிவினையும் கல்வித்திட்டத்தில் இணைத்தனர். நூலக வசதி, தர்மப் பாடசாலை மாணவர்களுக்கு விடுதி வசதி, இலவச உணவு, உடை, நூல்கள் என்பவற்றை வழங்கினர். இதற்கு நூலக வசதி, தர்மப் பாடசாலைக்கு மாணவர் விடுதி வசதி, இலவச உணவு, உடை, நூல்கள் என்பவற்றை வழங்கினர்.

    மிஷனரிகளின் போக்கினால் கல்வித்துறை வீழ்ச்சியடைந்தது. இவ்வேளை கோல்புறுக் ஆணைக்ககுழு தனது கல்வி ஆலோசனைகளை வெளியிட்டது.
i.    பாடசாலை ஆணைக்குழுவினை நியமித்தல்
ii.    கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருத்தல்
iii.    ஆங்கிலக் கல்லூரி ஒன்றை நிறுவுதல்
iஎ.    ஆங்கிலம் படித்த இலங்கையர்களுக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குதல்

இவ்வாலோசனைகள் செயற்படுத்தப்பட்டன. ஆங்கிலம் கற்பித்தல்மொழியாக, சுதேச மொழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டது. இவ்வேளை ஆள்பதி மககென்ஸி சில புனரமைப்பு ஆலோசனைகளை முன்வதை;தனர்.
i.    அரச பாடசாலைகளை முன்னேற்றுதல்
ii.    மிஷனரி பாடசாலை முறைகள் அரச பாடசாலை முறையுடன் தொடர்புபடுத்தல்
iii.    சமயத்தைப் பற்றி கவனியாது சகல மாணவர்கர்கட்கும் அனுமதி வழங்குதல்.
iஎ.    சுதேச  மொழிப் பாடசாலைகளை முன்னேற்றுதல்
எ.    ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கு நிறுவனத்தை ஏற்படுத்தல்
எi.    பாடசாலைப் பரிசோதனைகளை நியமித்தல்
எii.    பாடசாலை ஆணைக்குழுவை விரிவுபடுத்தல்,

இங்குழுவினை 1841ல் கலைத்துவிட்டு ஆளுனர் மத்திய பாடசாலை ஆணைக்குழுவினை நியமித்தார். இதன் செயலாளரே பிரதான பாடசாலைப் பரிசோதகராகவும் கடமையாற்றினார். இது ஒரு பக்கச் சார்புற்ற குழுவாக இயங்கியது. இதனால் 1814-1848 வரையான காலப்பகுதியில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டது. இக்காலத்தில் பாடசாலைகள் பின்வருமாறு விரிவடைந்தன.

  1.   ஆரம்ப பாடசாலை
  2.   இரு மொழிப் பாடசாலை
  3.   சுதேச மொழி பாடசாலை
  4.   உதவி நன்கொடை பெறும் பாடசாலை
  5.   மத்திய கல்லூரிகள்
  6.   பெண்கள் பாடசாலைகள்
  7.   கொழும்பு அகடமி


இதே வேளை உலகப் பொருளாதார மந்தம், கோப்பி விலை வீழ்ச்சியினால் அரச வருமானம் வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் கல்விக்கான செலவினைத்தை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இக்குழுவினால் சுதேச மொழிப் பாடசாலைகள் வீழ்ச்சி கண்டன. ஆனால் மிஷனரிப் பாடசாலைகள் மட்டும் வளர்ச்சி கண்டது மேலும் பாடசாலைகளில் கட்டணம் அறவீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர் தொகை வீழ்ச்சியடைந்தது எனலாம்.

    1861ல் மத்திய பாடசாலை ஆணைக்குழு “மனச்சாட்சி” என்ற சுற்றுநிருபத்தை வெளியிட்டது. இதன்படி சில மிஷனரிப் பாடசாலைகள் அரச நன்கொடை பெறுவதிலிருந்து விலகிக் கொண்டன. இதனால் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்து  சென்றது இதன்படி கல்வி வளரச்சிக்கான சிபார்சுகளை முன்வைக்க மேகர்கன்  தலைமையிலான குழு சிபார்சுகள் செய்தது. 

    இக்குழுவின் சிபார்சின் படி மத்திய பாடசாலைகள் கலைக்கப்பட்டு, பொது கற்பித்தல் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் கீழ் சகல வேதனம், பாடநூல் விநியோகம், பாடவிதானம், வளப்பங்கீடு, பாடசாலை பரிசோதனை என்பன இயங்கின. கட்டாயக் கல்விச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

    மேலும், மத்திய பாடசாலை ஆணைக்குழு அரச பாடசாலை அல்லாதவற்றுக்கும் உதவி நன்கொடைகளை வழங்கியது. இரட்டைப் பரிபாலன முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பௌத்த, இந்து, இஸ்லாமிய எழுச்சியினால் சமயம் சார்ந்த பாடசாலைகள் நாட்டின் பல் பாகங்களிலும் தோற்;றுவிக்கப்பட்டன. எனினும், அரசு பின்பற்றிய கொள்கைகளினால் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகள்  ஏனைய பாடசாலைகளிலும் பார்க்க வளர்ச்சியடைந்தன.
இறுதியாக ஆங்கிலேயக் கல்வி முறையினை இவ்விரண்டு முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஆங்கிலக் கல்வி முறை சிறந்தது என்ற முடிவுக்கு வரக்நுடியதாக உள்ளது. ஆங்கில ஆட்சியாளர்கள் பின்பற்றிய கல்வி முறை சில சில மாற்றங்களுடன் இன்னும் பின்பற்றப்பட்டு வருகின்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பாரிய கல்வி முன்னேற்றத்திற்கு ஒப்பீட்டு ரீதியில் ஐரோப்பிய, ஒல்லாந்தர்களைவிட அதிகளவில் பங்களிப்பு செய்தவரகள் ஆங்கிலயர்கள் என்பதில் ஐயமில்லை.


03.    இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறேன்.

1931ம் ஆண்டைய டொனமூர் சீர்திருத்தத்தின் பின் 21 வயதில் அனைவருக்கும் வாக்களிப்பு வழங்கப்பட்டு தேர்தலில் சட்டசபை உருவாக்கப்பட்டது. இதன் கீழ் கன்னங்கர தலைiயிலான நிர்வாகக் குழு உருவாகியது. இது 1931-1947 வரையான 17 வருடங்ளில் இவர் தலைமை வகித்து கல்வியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியமையால் இது கன்னங்கர யுகம் எனப்படுகின்றது. அரசாங்க சபைக் காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களை இருயுகங்களாக நோக்கலாம்.

01.    சிறு சீர்திருத்தங்கள் நிகழ்நத காலம் 1931 -1938
02.    பிரதான சீர்திருத்தங்கள் நிகழ்ந்த காலம்  1939-1947

    1931-1938 வரை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் :

ய)    உதவி நன்கொடை பெறும் பாடசாலை :
    ஆசரியர்களின் வேதனம் சுரண்டப்படும் நிலைமையை நீக்க 1932லிருந்து ஆசிரியர்களுக்கு அரசாங்களிலிருந்து நேரடி வேதனம்.
டி)    மாவட்டக் குழுக்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் :
    பொருளாதார முகாமைத்துவ வளர்ச்சியடையாத நாடான இலங்கையில் மாவட்டக்குழுக்களுக்கு பணம் விரயமாகும் நிலையைக் குறைக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உ)    தாய்மொழி கற்பித்தலை ஊக்குவித்தல்  - 5ம் தரம் வரை தாய்மொழியில் கற்பித்தல்
ன)    கிராமிய கல்வி முறையைச் செயற்படுத்தல்: இதன் நோக்கம்;;
    தொழில் தொடர்பான மகத்துவத்தை ஏற்படுத்தல்
    கிராமத்திலிருந்து நகரத்துக்கு பிள்ளைகள் இடம்பெயர்வதை ஊக்குவித்தல்
    அறிவு வளர்ச்சிக்கு மேலாக உடல்நல விருத்தி, சுகாதார விருத்தி, சமூக விருத்தி
    சுய தொழில் பயிற்சி  : இதன் கலைத்திட்டம் - சூழல் கல்வி, பகரதேச விவசாயம், உடல் நலம், இலக்கியம், சங்கீதம் என்பனவற்றை உள்ளக்கி 14 பாடசாலைகளில்  ஆரம்பிக்கப்பட்டது.
ந)    பாடசாலைகளில் மதிய போசனம் வழங்குதல்.
க)    தேசிய பரீட்சை முறையை ஆரம்பித்தல் : நடைமுறையிலிருந்த கேம்பிரிஜ் லண்டன் பரீட்சைகள் நீக்கப்பட்டடு தேசிய பரீட்சைகள் உருவாக்கப்பட்டன.
ப)    பறங்கியர் பிள்ளைக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டம்.
h)    இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல்.
i)    பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி வசதியை அதிகரித்தல்.
த)    செலவைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல்.


    மேற்போர்ந்த சீர்திருத்தங்களால் இக்காலத்தில் கல்வித்துறை பண்புசார்;ந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
ஆரம்பக் கல்வி தாய்மொழியில் வழங்கப்பட்டதும் மிக முக்கியமானதாகும். இது இனறும் கூட கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கோட்பாடாகும். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பிப்பதற்கு அதிகாரமளித்தமை கல்விக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. கிராமியக் கல்வியை முன்னேற்றுவதற்கு செய்யப்பட்ட ஹந்தஸ்த கல்வி முறை செய்முறை அறிவும் கோட்பாட்டு அறிவும் இன்றியமையாத முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. மதிய போசனம் வழங்கல் இன்றும் கூட முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும் தேசிய பரீட்சை, நிர்வாகப்பாடசாலை முறைமை என்பன முக்கியமானதாகும்.

    1939ம் ஆண்டு 31ம் இலக்க கல்விச் சட்டப்படி மேற் கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் :
i.    மத்திய நிர்வாகக் குழு – கல்வியின் பொது நிர்வாகம்  தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் முழு உரிமை நிர்வாகக் குழுத் தலைவருக்கு ஒப்படைக்கப்பட்டது.
ii.    தேசிய ஆலோசனைக் குழுவும் பிரதேச ஆலோசனைக் குழுவும்
iii.    கல்வி, பன்முகப்படுத்தும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டது.
iஎ.    பெற்றோரின் அனுமதியில்லாது பிள்ளைகளுக்கு சமயம் கற்;;;;பிக்க முடியாது
எ.    கல்விக்குக்கு, பொருத்தமான சட்டமியியற்றும் அதிகாரம் கல்வி நிர்வாகக் குழுவிற்கு ஒப்படைக்கப்பட்து.
எi.    தோட்டப்பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் பொறுப்பு தோட்ட நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.
எii.    பாடசாலைகளை நிறுவுதல், மூடுதல், கட்டாயக்கல்வி செயற்படுத்தும் திட்டம் கல்வி நிர்வாகக்குழுவுக்கு ஒப்படைக்கப்படுகிறது.



    பாடசாலை அமைப்பு முறை :
i.    5-11 ஆரம்பப்பாடசாலைக் கல்வி தாய்மொழியில் வழங்ப்பட வேண்டும்
ii.    அக்காலத்தில் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த பாடசாலை முறையைப் பின்பற்றி செய்முறைப் பாடசாலை, மூன்று வருடம் சிரேஷ்ட பாடசாலை ஐந்து வருடம் இடைநிலைப் பாடசாலை ஏழு வருடம் என சிபார்சு செய்யப்பட்டது. இதன் பாடசாலைக் கல்வி முடிவடைந்து உயர்கல்வியோ தொழில் கல்வியோ பெற்று வெளியேறும் மாணவர்களுக்கு பொருத்தமான தொழிலுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது நோக்கமாக இருந்தது.
iii.    6-14 வயது பிள்ளைகள் கட்டாயம் பாடசாலை செல்ல வேண்டும்

    ஆசிரியர்கள் 7 வகையாக வகுக்க சிபார்சு செயய்ப்பட்டுள்ளது.
i.    பயிற்றப்பட்ட பட்டதாரி
ii.    தொழில் நுட்ப பட்டதாரி
iii.    பயிற்றப்படாத பட்டதாரி
iஎ.    விசேட ஆசிரியர்
எ.    பயிற்சி பெற்ற ஆசிரியர்
எi.    அனுமதிக்கப்பட்ட விசேட ஆசிரியர்
எii.    மாணவ ஆசிரியர்

    1943 கல்வி விசேட ஆணைக்குழுவின் சிபார்சுகளைச் செயற்படுத்தல் :

இக்குழுவின் சில சிபார்சுகளை  அரசாங்கம் சில திருத்தங்களுடன் செயற்படுத்துவதற்கு அரசாங்க சபை தீர்மானித்தது. கல்வி நிர்வாகம், சமயப் பாடசாலைகள், இலவக் கல்வி, மத்திய மகா வித்தியாலம் ஆகிய சிபார்சுகள் எடுத்துக் கூறப்பட்ட முறைப்படியே செயற்படுத்தப்பட்டது. எனினும் பாடசாலை அமைப்பு முறை, கற்பித்தல் மொழி மூலம் ஆகிய சிபார்சுகள் சில திருத்தங்களுடன் செயற்படுத்தப்பட்டன. பாடசாலை அமைப்பு முறையில் இடைநிலைக்கு ஐந்தாம் வகுப்பில் தெரிவு செய்யாது எட்டம் வகுப்பில் தெரிவு செய்ய வேண்டுமெனவும் மூன்று வகையான பாடசாலைக்குப் பதிலாக சிரேஷ்ட செய்முறைப் பாடசாலை, சிரேஷ்ட இடைநிலைப்பாடசாலை என இரு வகையாக அமுல்படுத்த தீரமானிக்கப்பட்டது. தாய்மொழி இருப்பதுடன் மூன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கட்டாயம் இரண்டாம் மொழியாக கற்பிக்க வேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டது.

1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி தொடக்கம் இலவசக்கல்வி அமுலுக்கு கொண்டுவரப்பட்டது தொடக்க உதவி நன்கொடை பெறும் பாடசாலைகள் கட்டணம் எதுவும் அறவிடாது வசதி, சேவைக்கட்டணம் அறவிடமுடியும். ஆண்டு 1939ம் ஆண்டின் இலக்க 31ம் சட்டத்தில் முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

i.    ஒரு சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் 15 பேருக்கு அதிகமாக இருந்தால் அச்சமயத்தைச் சேர்ந்த  ஓர் ஆசிரியரால் சமயம் கற்பிக்கப்பட வேண்டும்.
ii.    கட்டாயக் கல்வி 4-16 வயதாகும்.
iii.    ஒரு மாணவனுக்கு தாய் மொழி மூலம் கற்பிக்க முடியாவிட்டால் பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடாது
iஎ.    அரசு எதிர்பார்க்கும் நிலையில்லாத பாடசாலையை முடிவிடும் அதிகாரத்தை அரசிடம் ஒப்படைத்தல்

மேற்கூறிய சீர்திருத்தங்களையும் 1943 கல்வி விசேட ஆணைக்குழுவின் சிபார்சுகளையும் மையமாகக் கொண்டு கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிபுபடுத்தக் கல்வித்தினைக்களம் திட்டங்களைத் தயாரித்தது.












4.    இக்கூற்றை ஏற்றுக் கொள்கிறேன்.

•    1972 இன் பின்னரான கல்வி, மறுசீரமைப்பின் நோக்கங்கள் :

i.    நாட்டுக்கு பொருத்தமான கல்வியை உருவாக்குதல்
ii.    மக்கள் முழுமையான வாழ்வை அனுபவிப்பதற்காக அவர்களது கலாச்சார அறிவுசார் மட்டங்களை உயர்த்துதல்
iii.    கல்வியில் அடங்குகின்ற கலைத்திட்டம், பாடத்திட்டம், பல்வகை அறிவுசார் துறைகளின் பயிற்சி பெறுபவர் தொகை ஆகியன பரந்த முறையில் இந்நாட்டு தொழில் உருப்பங்குடன் இசைவுடன் இருத்தல் வேண்டும்.
iஎ.    வளர்ந்து வரும் சந்ததியினருக்குத் தேவையான அறிவு திறன்களை வழங்கல்.
எ.    இந்நாட்டு அபிவிருத்திக்கு எத்தகைய பயனுள்ள செயற்பாடுகள் அவசியம் என்பதை தெரிந்து கொள்ளல்.

•    இநத கல்வி முறையில் கலைத்திட்டம் :
    ஆரம்ப கல்வி – 6 வருடத்தில் பாடசாலையில் அனுமதிக்கப்படும் பிள்ளை – 11 வயதாகும் வரை ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொள்ளும், அச்சந்தர்ப்பத்தில் கீழ்வரும் பாடவிதானம் கற்பிக்கப்படும்.

ஆரம்பக் கல்வி ; சமயம், கல்விப் போதனை மொழி, இரண்டாம் மொழி, கணிதம், உடல்நல அழகியற் செயற்பாடுகள், ஆக்கத் தொழிற்பாடுகள், சுற்றாடல் சார் செயற்பாடுகள் என்பனவாகும். இங்கு தனிப்பாடக் கலைத்திட்டத்திற்கு பதிலாக ஒன்றிணைக்கப்பட்ட பாடக் கலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

    கனிஷ்ட, இடை நிலைக் கல்வி (6-9): 10 கட்டாய பாடங்கள் முதன் மொழி, இரண்டாம் மொழி, சமயம், கணிதம், விஞ்ஞானம், சமூகக்கல்வி, அழகியல், சுகாதரமும் உடற்கல்வியும், தொழில் முன்னிலைக் கற்கை ஐ (இயற்கை வளங்கள், கேத்திர கணித பொறி முறை, வரைதல் என்பவற்றுடன்) தொழில் முன்னிலை கற்கை (சுற்றாடல் தொழில்கள்) இதுவும் ஒன்றிணைந்த பாடத்திட்டம்.

    சிரேஷ்ட இடைநிலை  : இது 4 துறைகள் கொண்டது பௌதீகவியல்,உயிரியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், வணிகத்துறை ஒவ்வொன்றிலும் 4 பாடங்கள் மேலும் அளவையியலும் விஞ்ஞான முறையும், தற்கால உலகம், ஆங்கிலம் என்பன.

•    கற்பித்தல் முறைகள் :
புதிய சீர்த்திருத்தங்கள் - கீழ் ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கப்படும் முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விரிவுரைகளிலும் பார்க்க அனுபவங்களுக்கு முக்கியத்துவம், வாய்மொழி முறையிலும் பார்க்;க தொழிற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் செயல்களினால் விளக்கம் பெறும் முறையை உபயோகித்து கற்பித்தலுக்கு வழிவகைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக ஆசிரியர்கள் விசேடமாகப் பயிற்றப்பட்டார்கள்.

•    ஒழுங்கமைப்பு கட்டமைப்பு :
i.    ஆரம்ப பாடசாலை (1 - 5)
ii.    கனிஷ்ட இடை நிலைப் பாடசாலை (6 - 9)
iii.    சிரேஷ்ட இடை நிலைப் பாடசாலை (10- 11)

•    பரீட்சைகளும் மதிப்பீட்டு முறைகளும் :
கனிஷ்ட இடை நிலைப் பாடசாலை கல்வி 9ம் வகுப்புடன் முடிவடையும் போது இறுதியில் பரீட்சைத் திணைக்களத்தினால் ஒரு பரீட்சை நடாத்தப்படும், அது தேசிய பொதுக் கல்விச் சான்றிதழ்  என அழைக்கப்பட்டது. அது தேசிய பொதுக் கல்விச் சான்றிதழ் (Nஊபுநு) எனப்படும். பரீட்சைத் திணைக்களம் பரீட்சை நடாத்தும் சிரேஷ்ட இடை நிலை முடிவில் தேசிய உயர் கல்வி சான்றிதழ் பரீட்சை நடாத்தப்படும் (ர்Nஊநு)


  • விமர்சனம் :

1972ம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தத்தில் புதிய பாதையில் இடம்பெற்ற சீர் திருத்தங்களில் ஆரம்பக் கல்வியில் நிகழ்ந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாகும். ஆரம்பக்கல்வி செயற்பாடுகளினால் விளக்கம் பெறும் முறையைச் சார்ந்ததாகும். அதே போன்று கனிஷ்;ட, இடைநிலைக் கல்விப் பாட விதானச் சீர்திருத்தங்கள் மிகவும் பொத்தமாக அமைந்திருந்தன. பாடஙகளைக் கட்டாயமாக்கியமை பொதுக் கல்விக்கான வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சம் எனக் குறிப்பிடலாம். முன்பு குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தாக இருந்த விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைச் சகலரும் கற்க வழிய வகுத்தமை புகழக்கூடிய ஒரு சீர்திருத்தமாகம். சமூகக் கல்விப் பாடத்தின் மூலம் வாழ்க்கைக்குப் பயனுள்ளதான அம்சங்களை ஒன்றிணைத்து ஒழுங்மைத்து வழங்குவதற்கு மேற் கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட்டதுடன் தொர்புறுத்தும் ஒரு பாடமாகச் சமூகக்கல்வி அமைந்திருந்தது. அழகிற் பாடங்களும் பயன் மிக்கதாகக் காணப்பட்டன.

தொழில் முன்னிலைப் பாடம் உழைப்பின் மகிமை உணர்வை உருவாக்வதற்குப் பதிலாக பெற்றோர்கள் மத்தியில் சமுதாய வகுப்புக்கு ஏற்ப பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. என்ற மனப்பாங்கு உருவாகியதையும் காணக் கூடியதாக இருக்கிறது. அத்துடன் அவ்வப் பிரதேசங்களில் காணப்படும் மூலப் பொருட்களை வளமாகக் கொண்டு செயற்பாடுகளை செய்ய முற்படும் போது இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலப்பொருட்கள் கிடைக்காத நகரப் பாடசாலைகள் புகழ் பெற்ற கைத்தொழில்களில் ஈடுபடு வேண்டிய நிலை ஏற்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 1972 கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய அங்கமான தேசிய சேவை அணியும், உயர் கல்விக்கான அடிப்படை வகுப்பும் (12ம் வகுப்பு) ஆரம்பிக்கப்படாதிருந்தமையால் சீர்திருத்தங்கள் முற்றாக தோல்வியடைந்தன. சகல எதிர்பார்ப்புக்களும் இறுதிப் பகுதியில் வீணாகி விட்டன. இதனால் பிற்காலத்தில் இச்சீர்திருத்தங்கள் பெரும் விமர்சனத்துக்குள்ளாயின. மேலும் தே. பொ. க. சான்றிதழ் பரீட்சையும் உயர் கல்வி தேசிய சான்றிதழ் பரீட்சையும் (எதிர்பார்த்த அமைப்புக்கள் நிகழாததால்) விமர்சனத்திற்குள்ளாயின. 1978 இன் பின் இப்பரீட்டசைகள் நிறுத்தப்பட்டு இதற்குப் பதிலாக க.பொ.த (சா.த), க.பொ.த (உ.த) பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டதால் சீர்திருத்தங்களால் சிபார்சு செய்ய்பட்ட பரீட்சைகளுக்கு எவ்வித பிரதியீடும் நிகழவில்லை. படிப்படியாக மாணவர்கள் 1978 இன் பின் உள்ள கல்வி முறையுடன் இணைந்து கொள்ள வேண்டியிருந்தது.































05. இக்கூற்றை ஏற்றுக்கொள்கிறேன்.
•    1994ல் மீண்டும் ஆட்சி மாற்றம் பொது சன ஐக்கிய முன்னணி 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்நோக்கக்கூடிய கல்வி முறை ஒன்றின் தேவை உணரப்பட்டது.
    கல்விக்கான ஜனாதிபதி துரித செயற்குழு (வுயளம குழசஉந) லக்ஷன ஜயதிலக்க தலைமையிலான தேசிய கல்வி ஆணைக்குழுவுடன் ஒன்றினைந்து செயற்பட்டது (1996)

•    1996ம் ஆண்டின் ருNநுளுஊழு வின் 21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றிய னுநடழசள தலைமையிலான சர்வதேச ஆணைக்குழு அறிக்கையில் இனங்கண்டவாறு கல்வி நான்கு தூண்களில் கவனம் செலுத்தப்பட்டது. அவை எமது புதிய கல்வி முறையில் செல்வாக்கு செலுத்தியது. அவையாவன.
i.    ஒருமித்து வாழக்கற்றல் (டுநயசniபெ வழ வழபநவாநச )
ii.    தெரிந்து கொள்ளக் கற்றல் (டுநயசniபெ வழ மழெற)
iii.    கருமமாற்றுவதற்குக் கற்றல் (டுநயசinபை வழ னழ)
    iஎ    வாழக்கற்றல் (டுநசniபெ வழ டிந)

•    கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மையான நோக்கங்கள் :
i.    சமாதான வாழ்க்கையை அடைதல்
ii.    தரமான கல்வியை வழங்குதல்
iii.    தரமான முகாமைத்துவம்
iஎ.    வளங்கள் மூலம் உச்ச பயனைப் பெறுதல்.

•    புதிய கல்விக் கொள்கைகளும் குறிக்கோள்களும், தேர்ச்சிகளும் :

    தேசிய கல்வி ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்கள் பின்வருன :
i.    ஆரம்ப மாணவர்களுக்கான கல்வியில் சம சந்தர்ப்பத்தை மேம்படுத்தலும் தரமான கல்வியை முன்னேற்றுதலும்.
ii.    புதிய க.பொ.சா.தர உயர் தர பரீட்சைகளை அமுலாக்கல்.
iii.    அமைச்சின் ஒழுங்கமைப்பும் இயக்கத்தையும் மீள ஒழுங்கமைத்தலும், பாடசாலை கட்டமைப்பை மீள ஒழுங்கமைத்தலும்.
iஎ.    பாடசாலை மட்டக்கணிப்பீட்டடை சகல மட்டங்களிலும் அறிமுகம் செய்தலும், ஆசிரியர் கல்வியை முன்னேற்றுதலும்.
எ.    ஆங்கில மொழி கற்பித்தலைப் பலப்படுத்தல்.

•    சீர்திருத்தங்கள் இரண்டு முதன்மையான இலக்குகளை மனதில் கொண்டிருத்தல் :
i.    மாணவர்களுக்கு இன்றியமையாத அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இலங்கையின் தொழிலாற்றக் கூடிய மற்றும் உற்பத்தி செய்யக் கூடிய பிரஜைகளை உருவாக்குவதாகவும் அமையக்கூடிய ஒரு கல்வி முறையை வழங்குதல்
ii.    சரியான விழுமியங்கள் சகப் பிரஜைகளுடன் அன்பும் கவனிப்பும் கொண்டவராகவும், பிறருடன் சகிப்புத் தன்மையுடன் வாழக் கூடியவராகவும் அமையும் இளைஞர் சந்ததிகளை உருவாக்குவது.

•    சீர்திருத்தங்கள் 1998ல் பரீட்சாத்தமாக கம்பஹா மாவட்டத்திலும் பின் 1999ல் தேசிய மட்டத்திலும் அமுல்படுத்தப்பட்டது. 1990ம் ஆண்டின் உலகக் கல்விப் பிரகடனத்தின் ஒளியில் தேசிய ஆணைக்குழு எதிர்காலத்தில் கற்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் 9 தேசிய கல்வி இலக்குகளையும், குறிக்கோள்களையும் முன்வைத்தது அவை வருமாறு
i.    தேசிய ஒற்றுமை, தேசிய முழுமைப்பாடு, தேசிய நல்லிணக்கத்தை அடைவது
ii.     வியாபகப்பாங்குடைய சமூக நீதியை நிலை நிறுத்தல்.
iii.     ஓம்பக் கூடிய வாழ்க்கைப் பாணியை ஏற்படுத்தல்
iஎ.     கௌரவத்தையும், திருப்தியையும், தன்னிறைவையும் தரக்கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குதல்
எ.     நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்;சிக்கு ஆதாரமான மனித வள அபிவிருத்தியில் சகலரும் பங்கு பற்ற வாய்ப்பு ஏற்படுத்தல்
எi.     ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கின்ற ஆழ்ந்த இடையறாத அக்கறை உணர்வு தொடர்ந்து பேணப்படுதலை உறுதி செய்தல்.
எii.     மாறும் சூழலுக்கு ஏற்ப கருமமாற்றும் கற்றல் அதாவது சவால்களுக்கும், மாற்றங்களுக்கும் முகங் கொடுத்தல்.
எiii.     சிக்கலானதும், எதிர்பாரததுமான சூழ்நிலைக்கு முகங் கொடுக்கும் ஆற்றல்
iஒ.     சர்வதேச சமுகத்தில் கௌரவமான இடத்தைப் பெற்றுக் கொள்ள உதவும் தேர்ச்சிகளை விருத்தி செய்தல்.
இவ்விலக்குகளை அடைவதற்கு அத்தியவசியமான அடிப்படை கற்றல் தேர்ச்சிகளை தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கியது அவையாவன.

i.    தொடர்பால் பற்றிய தேர்ச்சிகள் ( எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு)
ii.    சூழல் சார் தேர்ச்சிகள் (சமூகச் சூழல், பௌதிகச் சூழல், உயிரியல் சூழல்)
iii.    ஒழுங்கமும் சமயமும் சார்ந்த தேர்ச்சிகள்
iஎ.    விளையாடிலும் ஓய்வைப் பயன்படுத்துவதிலும் உள்ள தேர்ச்சிகள்
எ.    கற்றலுக்காக கற்றல் தேர்ச்சிகள
ஆரம்பக்கல்வி சீர் திருத்தங்களி;ல் இவை உள்ளடக்கப்பட்டவை இதன் கீழ் தேர்ச்சி மயக்கலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. சீர்திருத்தம், புத்தகப்படிப்பு, மேசை வேலை என்பவற்றை விடுத்து மாணவர் மைய செயற்பாடுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியது. ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக் கல்வி கலைத்திட்ட சீர்திருத்தங்கள் படிப்படியாக 2003ல் நிறைவடைந்தது.

•    இடைநிலைக்கல்வி சீர் திருத்தங்கள் :

இந்த நிலையை தெளிவாக வகுப்பட்ட கலைத்திட்டத்தையே மாணவர் பயில்வர் இங்கு விரிவான சந்தர்ப்பங்களில் அடையக் கொண்ட கற்றலும், சுயாதினமான சிந்தனை செயல்முறையிலும் மாணவர்கள் வழிப்படுத்தப்பட்டனர்.

•    பாடசாலைக் கட்டமைப்பு – ஒழுங்கமைப்பு

கல்விவாய்ப்பு சகல பிரதேச மாணவர்களுக்கு சமமாக கிடைக்கும் வண்ணம் பாடசாலை ஒழுங்கமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 300 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு தர முன்னேற்ற ஏற்பாடுகள் செய்யப்படும். அதாவது மைதானம், ஆய்வு கூடம், தொழிற்பாட்டுறை தரமான நூலகம் போன்ற பௌதிக வளங்கள், பயிற்றப்பட்ட தரமான ஆசிரியர்கள், சிறந்த அதிபர், பாடசாலை மட்ட முகாமைத்துவம் என்பன :

பாடசாலை ஒழுங்கமைப்பு பின்வருமாறு அமைந்தது.

-    கனிஷ்ட நிலை :
i.    ஆரம்பப் பாடசாலை (தரம் 1- 5 வரை)
ii.    கனிஷ்ட பாடசாலை (தரம் - 9 வரை)

-    சிரேஷ்ட நிலை :
i.    சிரேஷ்ட பாடசாலை ( தரம் - 11 வரை)
ii.    கல்லூரி நிலை ( தரம் - 13 வரை)

ஆரம்பக்கல்வி கற்கும் மாணவர்கள் தம் வீட்டுக்கு 2 கிலோ மீற்றருக்கு அண்மையில் கற்க வாய்ப்பு.

•     கல்வி முகாமைத்துவமும், நிர்வாகமும் :
    தேசிய கல்வி அமைச்சு : பொதுக் கல்வி பிரிவேனாக்கல், ஆசிரியர் கல்வி மற்றும் பல பிரிவுகள் :


சட்டபூர்வ நிறுவனங்கள் :
ழ    பரீட்சைத் திணைக்களம்
ழ    கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
ழ    தேசிய கல்வி நிறுவகம்.
ழ    தேசிய நூலக சேவைகள் சபை
-    தேசிய கொள்கையாக்கம், புத்தாக்கம், சீர் திருத்தம்
-    தேசிய பாடசாலை முகாமைத்துவம்
-    தேசிய ஆணைக்குழுவின் ஆலோசனை பெறல்

•    மாகாணக் கல்வி அமைச்சு : 
ழ    மாகாணப்பாடசாலைகள், முன்பள்ளிகள்
ழ    மாகாண கல்வி அமைச்சு செயலாளர்
ழ    மாகாண கல்வித் திணைக்களம், மாகாண பணிப்பாளர்
ழ    வலயக்கல்வி கல்வி அலுவலகங்கள் - பாடசாலை நேரடி நிர்வாகமும், மேற்பார்வையும்
ழ    கோட்டக்கல்வி அலுவலங்கள்
ழ    பாடசாலை சார் முகாமைத்துவம் (நிதி,பயிற்சி)
•    உயர்கல்வி அமைச்சு
ழ    ருபுஊ, திறந்த பல்கலைக்கழகம்
•    தொழிற் பயிற்சி அமைச்சு :
ழ    மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழு ( வுஏஊ)
ழ    தொழிற்பயிற்சி அதிகார சபை  (ஏவுயு)
ழ    தேசிய தொழில் நுற்ப கல்வி நிறுவனம் (Nஐவுநு)
ழ    தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (Nயுஐவுயு)
•    ஆரம்பக் கலைத்திட்டம் :
    பிளளை மையக்கல்வி : பாடங்கள்
    சமயம்             ஒன்றிணைந்த பாடத்திட்டம்
    கணிதம்
    சூழல் சார் செயற்பாடுகள்
    தரம் 1 லிருந்து ஆங்கிலம் தொர்பு மொமி
    தரம் 3 லிருந்து முறையயன ஆங்கிலக்கல்வி

ஆரம்பக்கல்வி கலைத்திட்ட சட்டகம்
முதன்மை நிலை : 1 (தரம் 1,2)    முதன்மை நிலை 2 (தரம்3, 4)    முதன்மை நிலை 3 (தரம் 5)
முதன்மை மொழி,    முதன்மை மொழி     முதன்மை மொழி
கணிதம்    ஆங்கிலம்    ஆங்கிலம்
சமயம்    2ம் தேசிய மொழி    2ம் தேசிய மொழி
--    கணிதம்    கணிதம்
---    சமயம்    சமயம்
சூழல் சார் செயற்பாடுகள்    சூழல் சார் செயற்பாடுகள்    சூழல் சார் செயற்பாடுகள்

6ம் தர பிள்ளைகளுடன் இடைத்தாக்கம் - இணைக் கலைத்திட்டம்
                                    கற்பித்தல் முறை
தரம் 1 முதல் தரம் 5 வரையாகும்

மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலும் பௌதிகச் சூழலும் ஒவ்வொரு முதன்மை
நிலைக்கும் ஒரே ஆசிரியர்

•    மதிப்பீடும், கணிப்பீடும் :

யு.    முறைசார மதிப்பீடு : 

i.    செவிமடுத்தல்
ii.    தொடர்ச்சியாக அவதானித்தல்
iii.    மாணவர் படிமுறையான முன்னேற்றத்திற்கான கோவைகளைப் பேணுதல்
iஎ.    தொடர் கணிப்பீட்டு செயல்முறைகளுக்கான பதிவுகள் பேணுதல்
எ.    பரிகார கற்பித்தல் மேற் கொள்ளல்
எi.    பெற்றோரிடம் கலந்துரையாடல்
எii.    மாணவர் அடைவு பலம், பலவீனம் பற்றிய அறிக்கைகளை தயாரித்து வழங்கல்.
எiii.    வாய்மொழி உரையாடல்.


டீ.    எழுத்துப்பரீட்சை :
i.    வினாப்பத்திரங்கள் மூலம் பரீட்சை

•    கனிஷ்ட இடை நிலைக் கலைத்திட்டம் (தரம் 6- 9 )

  •   தாய்மொழி
  •   ஆங்கிலம்
  •   கணிதம்
  •   விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்
  •   சமூகக்கல்வி (7 லிருந்து சமூகக்கல்வியும் வரலாறும்)
  •   வாழ்க்கைத் தகைமைகள்
  •   சமயம்
  •   அழகியல் கலை
  •   சுகாதாரமும் உடல் தொழில் கல்வியும்
  •   இரண்டாம் மொழியாக சிங்களம் அல்லது தமிழ்;
  •   குழுத் தொழிற்பாடுகள்
  •   செய்முறை வேலைகள்
  •   சிறிய செயற் திட்டங்கள்
  •   செயற்பாட்டறை

ஒன்பதாம் தரத்தின் இறுதியில் பிரதேச மட்ட வினைத்திறன் பரீட்சை (இப்பரீட்சையில் பாடசாலை மட்டக்கணிப்பீடுகள் கவனத்தில் எடுக்கப்படும்)
    சிரேஷ்ட இடைநிலை கலைத்திட்டம் ( க.பொ.த (ச.த) ) 2001 முதல் :
மையப்பாடங்கள் :
-    சமயம்
-    தாய்மொழி
-    ஆங்கிலம்
-    கணிதம்
-    அழகியற் கல்வி
-    விஞ்ஞானமும் தொழில் நுட்பமும்
-    சமூகக்கல்வியும் வரலாறும்
-    சமயம்

    சில விருப்பப் பாடங்கள்
-    வரலாறு
-    அபிவிருத்திக் கல்வி
-    புவியியல்
-    இரண்டா மொழியாக சிங்களம் அல்லது தமிழ்
-    நவீன மொழிகள்ஃ தொல்லரு மொழிகள்
-    சுகாதாரமும் உடற்கல்வியும்
-    தொழில் நுட்பப் பாடங்கள்

    சிரேஷ்ட இடைநிலைக் கலைத்திட்டம் (க.பொ.த. (உ ஃத) பரீட்சை – 2000 முதல்:

க.பொ.த உஃ த கல்விச் சீர்திருத்தங்களின் செயன்முறைத் தொழிற்பாடுகள் செயற் திட்ட செயற்பாடுகள் ஆகியவற்றில் விசேட கவனம்; செலுத்தப்பட்டது. அதற்கமைய அறிவை அன்றாட வாழ்க்கையில் செயல் ரீதியில் பிரயோகிப்பதற்கான ஆற்றலை பெற்றுக் கொடுத்து அதன் ஊடாக பெறும் போதனை மூலம் எதிர்காலத் தேவைகளுக்கு பொருத்தமானவாறு தமது அறிவை இசைவு படுத்தி பிரயோகிப்பதற்காக தேர்ச்சியை விருத்தி செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

பாடங்களின் எண்ணிக்கை 4 லிருந்து 3 அக குறைக்கப்பட்டது இதனால் சுமை குறைக்கப்பட்டது. மூன்று பாடங்கள் :

-    கலை
-    விஞ்ஞானம்
-    வர்த்தகம்
-    தொழில் நுட்ப பாடங்கள்

பல்கலைக்கழக அனுமதி வேண்டியவர்கள் மட்டும் பரீட்சை இறுதியில் நடாத்தப்படும் பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு கட்டாயம் தோற்ற வேண்டும். தவிர செயல் முறைப்பரீட்சை கட்டாயமாகும்.
i.    விவசாயம்
ii.    உயிரியல்
iii.    இரசாயனம்
iஎ.    பௌதிகம்
எ.    மனைப்பொருளியல்

இதற்காக பரீசோதனை பதிவேடுகள், வெளிக்கள குறிப்பேடு என்பவற்றை மாணவர் பேண வேண்டும்.

செயல் முறை பாடங்களைத் தவிர்நத ஏனைய பாடங்களில் ஒப்படைகள், செயற் திட்ட அறிக்கைகள் பேணப்பட வேண்டும்.










•    2007ல் கல்விச் சீர்திருத்தங்களின் ஏற்பட்ட மாற்றங்கள்

2007ஆம் ஆண்டிலும் பின்னரும் ஏலவே 1998ல் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களில் குறிப்பிட்த்தக்க சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவற்றுள் சில ஆரம்பக்கல்வியிலும்,சில இடைநிலைக்கல்வியிலும் மேற் கொள்ளப்பட்டன. பொதுவாக எட்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றமடைவது காலத்தின் தேவையாகும். 1998ன் சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட போது பெற்ற அனுபவங்களும், ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க சில அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்த காரணமாயின.

1.     சீர் திருத்தப்பட்ட பின் தேசிய கல்வி இலக்கு எட்டு ஆகின அவையாவன :
i.    தேசிய கௌரவத்தை கண்ணியப்படுத்தல் என்னும் எண்ணக்கருக்கள் தேசிய பிணைப்பு தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை இணக்கம், சமாதானம்  என்பவற்றை மேம்படுத்தல் மூலம் இலங்கை பன்மைச் சமூகத்தின் கலாசார வேறுபாட்டினை அங்கரித்தல் மூலமும், தேசத்தை கட்டியெழுப்புதலும் இலங்கையர் என்னும் அடையாளத்தை ஏற்படுத்தலும்.
ii.     மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்கு தக்கவாறு முகம் கொடுத்தலோடு தேசிய பாரம்பரியத்தின் அதிசிறந்த அம்சங்களை அங்கிகரித்தலும், பேணுதலும்.
iii.    மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கட்டுப்பாடுகள் இடையிறாக அக்கரை உணர்வு என்பவற்றை மேம்படுத்தும் சமூக நீதியும், ஜனநாயக வாழ்க்கை முறையும் நியமங்களும் உள்ளடக்கிய சுற்றாடலை உருவாக்கலும், ஆதரித்தலும்.
iஎ.    ஒருவரது உடல்,உள நலனையும் விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தை மேம்படுத்தல்
எ.    நன்கு ஒன்றினைக்கப்பட்ட அளுமைக்குரிய ஆக்க சிந்தனை, தத்துணிவு, ஆய்ந்து சிந்தித்தல் பொறுப்பு வகை கூறல் மற்றும் உடன்பாடான அம்சங்களை விரித்தி செய்தல்.
எi.    தனி நபரதும,; தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தை போசிக்கக் கூடியதும் இலங்கையில் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடியதுமான ஆக்க பணிகளுக்கான கல்வி ஊட்டுவதன் மூலம் மனித வள அபிவிருத்தி.
எii.    தனி நபர்களின் தாக்கத்திற்கு இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும் தயார் படுத்தவும் விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும் எதிர்பாராததுமான நிலைமைகளை சமாளிக்கும் தகைமையை விருத்தி செய்தல்.
எiii.    தனி சமத்துவம், பரஸ்பர மரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமூதாயத்தின் கௌரவமானதோர் இடத்தைப் பெறுவதற்கு பங்களிக்ககூடிய மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்.

2.     பொதுச் தேர்ச்சிகளும் அதிகரிக்கப்பட்டன அவையாவன :
i.    தொடர்பாடல் தேர்ச்சிகள் (எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில் நுட்ப தகைமை என்பன.
ii.    சுழல் தொடர்பான தேர்ச்சிகள் (சமூகச் சூழல், உயிரியல் சூழல்)
iii.    சமயமும், ஒழுக்காறு தொடர்பான தேர்ச்சிகள்
iஎ.    ஓய்வு நேரத்தை பயன்படுத்தலும் விளையாட்டு பற்றிய தேர்ச்சிகள்
எ.    கற்றலுக்கு கற்றல் தொடர்பான தேர்ச்சிகள்
எi.    ஆளுமை, விருத்தி தொடர்பான தேர்ச்சிகள் :
ஆக்கம், விரிந்த சிந்தனை, தற்துணிவு, தீரமாணம் எடுத்தல், பிரச்சினை விடுத்தல், நுணுக்கமான மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக பணி செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும், கண்டறிதலும், முதலான திறமைகள், நேர்மை, சகிப்புத் தன்மை, மனித கௌரவத்தை கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள், மனயெழுச்சிகள் : நுண்ணறிவு என்பன.
எii.    வேலை உலகிற்கு தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள் : 


    அவர்களது சக்தியை உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்கும் அவர்களது ஆற்றலை போசிப்பதற்கும், வேண்டிய தொழில் சார் திறன்கள், பொருளாதார விருத்திக்கு பங்களித்தல், அவர்களது தொழில் விருப்புக்களையும் உளர்ச்சார்புகளையும் கண்டறிதல், அவர்களது ஆற்றலுக்கு பொருத்தமான வேலைகளை தெரிவு செய்தல், பயனளிக்கக்கூடியதும் நிலைபேறுடையதுமான சிவனோபாயத்தில் ஈடுபடுதல்.







3.     சிரேஷ்ட இடை நிலைத் (தரம் 10-11 வரை) :

புதிய பாடவிதானம் :  இருபகுதிகள் 
ய.    கட்டாயப் பாடங்கள் (மையப்பாடங்கள் - ஊழசந ளுரடிதநஉவ) ஆறு அவையாவன :
i.    சமயம்,
ii.    சிங்கள மொழியும் இலக்கியமும், அல்லது தமிழ் மொழியும் இலக்கியமும்
iii.    கணிதம்
iஎ.    ஆங்கிலம்
எ.    வரலாறு 
எi.    விஞ்ஞானம்

டி.. தொகுதிப்பாடங்கள் :
மூன்று பாடத் தொகுதியிலிருந்து தலா ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் எனவே மொத்தம் ஒன்பது பாடங்களாக அமையும் பாடசாலை மட்டக் கணிப்பீட்டில் பெறப்படும் திரட்டிய தரங்கள் க.பொ.சா.தரப் பரீட்சை சான்றிதழில் தனியான நிரலில் பதியப்படும்.

4.        சிரேஷ்ட உயர் தரம் : (தரம் 12- 13 வரை)

மூன்று பாடங்கள் என்ற ஒழுங்கு தொடர்ந்திருக்கும்
பொது ஆங்கிலம் கட்டாயம் அதனால் ஆங்கிலம் கற்பித்தல் மேம்படுத்தப்படும், முன்னைய அனுபவங்களில் இருந்து தொடர்பாடல் திறனை பகுத்தாராயும் சிந்தனை நியாயிக்கும் ஆற்றல், பொது விழிப்புணர்வு என்பவற்றை மேலும் விருத்தி ஆக்கும் நோக்குடன் பொது சாதாரண வினாத்தாள் திருத்தியமைப்படும்.

விஞ்ஞானப்பாடத்துறையில் ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் மேலும் விரிவாக்கப்பட்டு வலுப்படுத்தப்படும் ஏனைய பாடத்துறைக்கும் இது படிப்படியாக ஏனை பாடத்துறைகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். கலைத்துறை, வர்த்தகத் துறைக்கு தொழில் நுட்ப  பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். அவை. விவசாய தொழில் நுற்பம், உயிரியல் தொழில் நுட்பம், உணவு தொழில் நுட்பம், குடியியல் தொழில் நுட்பம், பொறிமுறை தொழில் நுட்பம், மின்சார மின இலத்திரனியல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் என்பன.

உயர்பரீட்சை வினாத்தாள் :

•    முதலாம் வினாத்தாள் இரண்டு மணித்தியாலயம் சுருக்க விடைகள் : 40% புள்ளி
•    இரண்டாம் வினாத்தாள் மூன்று மணித்தியாலயம்               60 % புள்ளி  

பாடசாலை மட்டக் கணிப்பீட்டில் பெற்ற தரங்கள் சான்றிதழில் தனியான நிரலில் குறித்துக் காட்டப்படும்.

செய்முறை வேலைகள் செயற் திட்டம், ஒப்படைகள் என்பன தொடர்பான கணிப்பீடுகள் பாடசாலை மட்டக் கணிப்பீட்டில் உள்ளக்கப்படும்.



உசார்த்துணை :
•    வரலாறு தரம் - 10-11 பாடநூல், கல்வி அமைச்சு வெளியீடு
•    வகுப்பறைக் குறிப்புகள்; - பாடக் கையேடு
•    ஒப்பீட்டுக் கல்வியும் கல்விப் பிரச்சினைகளும் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
•   


1 கருத்துகள்

கருத்துரையிடுக