28 ஜன., 2026
13 டிச., 2025
மன ஒருமைப்பாடும் ஆரோக்கியமும்
🧘♀️ மன ஒருமைப்பாடு மற்றும் நலவாழ்வு MCQ தேர்வு
ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண். மொத்தம்: 11 மதிப்பெண்கள்.
🎉 தேர்வு முடிவுகள்
மொத்த மதிப்பெண்கள்: 0 / 11
சரியான பதில்களும் காரணங்களும்:
மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் - MCQ வினா விடை
மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் - MCQ வினா விடை
10. ஒரு நல்ல பிள்ளையாக இருக்க என்னால் முடியும், எல்லாவற்றிலும் என்னால் வெற்றி பெற முடியும், முழு உலகையும் என்னால் வெற்றி கொள்ள முடியும், எனது உள அமைதியை எனது வீட்டாருக்கும் பகிர்ந்தளிக்க முடியும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?
11. எனது உள்ளத்தின் அமைதியை எனது நண்பர்களும் எனது வீட்டாரும் உணரட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எந் படிமுறைக்குரியதாகும்?
12. நான் பெற்ற உள அமைதி எனது நண்பர்களுக்கும் உனது குடும்பத்திற்கும். எனது பாடசாலையில் உள்ளோருக்கும், முழு நாட்டிற்கும் பகிர்கின்றேன். நான் வீட்டிற்கும் பாடசாலைக்கும் முழு நாட்டிற்கும் என எந்த தியான செயற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது?
13. எனது தலை தளர்ந்து விட்டது எனது முழு உடலும் தளர்ந்து விட்டது என்ற செயற்பாடுகள் மனதை ஒரு நிலைப்படுத்தும் படிமுறைகளில் எத்தனையாவது?
14. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டின் சரியான படிநிலை?
15. உடல், உள சுகத்திற்கான செயற்பாடுகளின் மூன்றாம், நான்காம் படிமுறைகள் யாவை?
16. குறைவாக நீர் அருந்தும் ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று
17. வெள்ளைப் பிரம்புடன் ஒருவரை வீதியில் கண்டவுடன் நீர் செய்ய வேண்டியது?
18. சூரிய நமஸ்காரத்தில் ஈடுபட மிகவும் பொருத்தமான நேரம்
19. நான் சுற்றுப்புற ஒலிகளை செவிமடுக்கின்றேன். எனது வகுப்பைச் சூழவுள்ள ஒலிகளை நன்கு செவிமடுக்கின்றேன். அடுத்துள்ள வகுப்புக்களில் ஒலியையும் நன்றாக செவிமடுக்கின்றேன் என்ற செயற்பாடுகள் தியான செயற்பாட்டில் எந்த படிமுறைக்குரியதாகும்?
20. மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாடுகள் எத்தனை படிநிலைகளைக் கொண்டது?
சுகாதாரமும் உடற்கல்வியும் - மாதிரி வினாக்கள்
சுகாதாரமும் உடற்கல்வியும் - மாதிரி வினாக்கள்
01. கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் சிறிய பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதற்காகவும் எனது மனதில் தோன்றிய ஆர்வம் எனது வீட்டிலுள்ள அனைவரது மனங்களிலும் தோன்றட்டும் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயற்பாட்டில் எது?
- (1) மனவுறுதி
- (2) மலர்வு
- (3) பிரார்த்தனை
விடையைக் காண்க
சரியான விடை: (3) பிரார்த்தனை
02. ஒரு குழுவாகச் செயற்படும் போது மிகவும் பொருத்தமானது எது?
- (1) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களுக்குச் செவிமடுத்து எப்போதும் அதனுடன் ஒத்துப்போதல்
- (2) ஒருவர் எப்போதும் தனது கருத்துக்களை முதன்மைப்படுத்த எத்தனித்தல்
- (3) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல்
விடையைக் காண்க
சரியான விடை: (3) ஒருவர் மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துதல்
03. தினமும் போதியளவு நீர் அருந்தாத ஒருவருக்கு ஏற்படக்கூடிய விளைவாக அமைவது எது?
- (1) சிறுநீரின் நிறம் கடும் நிறமாதல்
- (2) சௌகரியமாகச் சிறுநீர் கழிக்கமுடிதல்
- (3) உடலில் இருந்து கழிவுப் பொருள்கள் சீராக வெளியேறுதல்
விடையைக் காண்க
சரியான விடை: (1) சிறுநீரின் நிறம் கடும் நிறமாதல்
04. இலங்கையில் பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களை ஆண்கள், பெண்கள் என வேறுபடுத்திக் காட்டுவதற்கு எந்தமுறை மிகப் பொருத்தமானது?
- (1) நியமக் குறியீட்டு முறை மூலம் காட்டுதல்
- (2) சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் மூலம் காட்டுதல்
- (3) சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் காட்டுதல்
விடையைக் காண்க
சரியான விடை: (1) நியமக் குறியீட்டு முறை மூலம் காட்டுதல்
05. குழுவாக வேலைகளில் ஈடுபடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது எது?
- (1) சுயமாக வேலைகளில் ஈடுபடல்
- (2) கூட்டுணர்வுடன் செயற்படல்
- (3) தனியாக வேலைகளைச் செய்தல்
விடையைக் காண்க
சரியான விடை: (2) கூட்டுணர்வுடன் செயற்படல்
06. மனதை ஒரு நிலைப்படுத்தும் செயற்பாடுகளில் மூன்றாவது அமைவது எது?
- (1) திடசித்தம்
- (2) உதிப்பு
- (3) உடலைத் தளர்த்தல்
விடையைக் காண்க
சரியான விடை: (1) திடசித்தம்
07. உடலில் இருந்து கழிவுப் பொருள்கள் சீராக வெளியேறுவதற்கு பிரதான காரணமானது எது?
- (1) தினமும் உடற்பயிற்சி செய்தல்
- (2) தினமும் உடன் உணவுகளை உண்ணுதல்
- (3) தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்
விடையைக் காண்க
சரியான விடை: (3) தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல்
பண்டைய சமூக நிர்வாகக் கட்டமைப்பு: ஓர் ஆய்வு
🏛️ பண்டைய சமூக நிர்வாகக் கட்டமைப்பு: ஓர் ஆய்வு
அனுராதபுர மற்றும் பொலன்னறுவை காலப் பகுதிகளில் இலங்கையில் காணப்பட்ட நிர்வாக, சட்ட மற்றும் நீதித்துறை அமைப்புகள் குறித்த விரிவான விளக்கம்.
1. நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் மூன்று தாபனங்கள்
- சட்டம் (சட்டமியற்றும் துறை)
- நிர்வாகம் (நிறைவேற்றுத்துறை)
- நீதி (நீதித்துறை)
2. சட்டமியற்றும் மற்றும் நிறைவேற்று துறைகள்
| விபரம் | ஆரம்பகாலம் | தற்காலம் |
|---|---|---|
| சட்டங்களை இயற்றும் சபை | அரசசபை | பாராளுமன்றம் |
| நாட்டின் ஆட்சி முறை | முடியாட்சி (ஆரம்பகாலம்) | |
| நிர்வாகத் துறையின் கடமை | சட்டத்தை நடைமுறைப்படுத்துவது | |
நீதித்துறையின் பொறுப்புகள்:
- சட்டத்தை மீறுவோரைத் தடுத்தல்.
- சமூகத்திற்கு ஏற்படும் கேடுகளைத் தவிர்த்தல்.
- மக்களுக்கு நியாயங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
3. அரசசபை மற்றும் சட்டத் தொடர்கள்
ஆரம்பகால அரசசபைகள் **சட்டத்தையும் நிர்வாகத்தையும் மேற்கொள்ளும் உயர் சபையாகக்** காணப்பட்டது.
'எக்தென் சமியன்' (கி.பி. 9ம் நூற்றாண்டு): சட்டம் மற்றும் நிர்வாகத்தைக் குறிக்கும் சொல்.
- உருவானது: ஏக அஸ்தான சாம்ய
- விளக்கம்:
- ஏக அஸ்தான: அரசசபை
- சாம்ய: அனுமதி பெற்ற
- 'வத்ஹிமியன் வதால': அரசரின் ஆணை.
4. அதிகாரிகள் மற்றும் பதிவுகள்
'சபா' அதிகாரிகள் (நீதிமன்றம்)
- இடம்பிடித்தோர்: அரச காணிகளை விகாரைக்கு அன்பளிப்புச் செய்த அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள்.
- பொறுப்புக்கள்:
- காணிகளுக்கு எல்லையிடுவது.
- காணிகளை அனுபவிப்பது தொடர்பான நிபந்தனைகளைப் பதிவது.
- இலக்கியப் பெயர்: மஹலே
மஹலேகம் மற்றும் செயலாளர்
- மஹலேகம் பொருள்: பதிவாளர் நாயகம்.
- அரச செயலாளரின் பொறுப்பு: அரச கடமைகளைப் பதிந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.
5. அனுராதபுர கால உள்ளூராட்சி சபைகள்
அனுராதபுர காலத்தில் உள்ளூர் நிர்வாகம் சிறப்பாக இயங்க, பல உள்ளூராட்சி சபைகள் முக்கியப் பங்காற்றின. இந்த நிறுவனங்கள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டது.
உதாரண நிர்வாக அமைப்புகள்:
- கிராம சபை (Gama Sabha): கிராம மட்டத்தில் நீதி மற்றும் நிர்வாகத்தை வழங்கியது.
- நகர சபை (Nagara Sabha): நகரப் பகுதிகளின் சுகாதாரம், வர்த்தக ஒழுங்கு போன்றவற்றை கவனித்தது.
- மத்தியஸ்த சபை: கிராம நிர்வாகத்தை மைய அரசோடு இணைக்கும் பாலமாகச் செயல்பட்டது.
மேலும் பண்டைய நிர்வாகம் பற்றிய கேள்விகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளலாம்!
23 ஜன., 2021
பரீட்சார்த்திக்கு ஆலோசனையும் வழிகாட்டலும் அவசியமானதா?
வழிகாட்டல் ஆலோசனையானது உண்மையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னரும் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படப்போகிறது என்ற அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த பின்னரும் வழங்கப்படுவதன் மூலம் மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வெற்றி தோல்விகளை உணர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும்.
ஏனெனில்
ஒவ்வொரு பரீட்சை முடிவுகளும் வெளியிடப்பட்ட
பின்னர் மனதை நெகிழ வைக்கக்கூடிய
சம்பவங்கள் பல கடந்த காலங்களில்
இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு இந்த வழிகாட்டல் ஆலோசனைகள் 3 கட்டமாக
மேற்கொள்ளப்படுவதானது மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் மன அழுத்தம் போன்ற
உள்ளத்துடன் தொடர்புபட்ட பல கோளாறுகள் ஏற்படுவதை
தவிர்க்கும் என்பது யதார்த்தமாகும்.
ஒவ்வொரு
பிரதேச செயலாளர் பிரிவிலும் பாடசாலைகளிலும் வழிகாட்டல் மற்றும் உள
ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுக்காக சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகையவர்கள் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களா என்பது ஒருபுறமிருக்க இவர்களினால்
சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் வழிகாட்டல்
மற்றும் உளவளத்துணை
செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் நடாத்தப்படுகின்றனவா என்ற கேள்வியும் சமகாலத்தில்
எழுப்பப்படுகின்றன. பாடசாலைகளிலும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்
உளவளத்துணை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் செயற்பாடுகள் வினைத்திறன் மிக்கதாக அமையவில்லை என்ற
குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக
பாடசாலைகளில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை
செயற்பாடானது தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களினால்
முன்னெடுக்கப்படுவதில்லை. ஓரிரு மாதகால உளவளத்
துணைக்கான பயிற்சிகளை நிறைவு செய்தவர்களினால் இத்தகைய
சேவை முன்னெடுக்கப்படுவதானது அச்செயற்பாடுகளில் வினைத்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் எதிர்பார்க்கின்ற
வெற்றியையும் அளிப்பதாக அமையவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
இதன் நிமித்தம் பாடசாலைகளில் உளவளத்துணையாளர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள் தொழில்வாண்மை தகைமை பெற்றவர்களாக இருக்க
வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றமையும்
சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.
அதனால்
கல்வி வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற வெற்றி தோல்விகள் அவர்களது
எதிர்காலத்தை சூனியமாக்காது வளமுள்ளதாக்குவதற்கான சிறந்த வழிகாட்டல்களும்
உளவளத்துணை வழங்கல்களும் அவசியமாகிறது. இவை அவர்களின் கல்வி
வாழ்க்கைக்கு மாத்திரமன்றி முழு வாழ்க்கை பயணத்திலும்
சவால்களை எதிர்கொண்டு வெற்றியாளர்களாக மிளிர்வதற்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனமாகும்.
10 ஜன., 2021
கல்வி அமைச்சின் மிக முக்கியமான லிங்கனை நீங்கள் மிக இலவாக செல்ல வேண்டுமா?
இலங்கையில் அதிக பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரு அமைச்சாக காணப்படுவது கல்வி அமைச்சி என்றால் அது மிகையாகாது. இந்த வகையில் அதன் சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக் கொள்ள உங்களுக்கு அதன் கல்விப் பிரிவு ஏற்பாடுகள் செய்யதுள்ளது. இதற்காமைய மிக முக்கியமான பல லிங்கினை கீழே தருகின்றேன்.
கல்விக் கட்டமைப்பு
*Ministry of education
(MOE)*
http://www.moe.gov.lk/web/index.php?lang=ta
பரீட்சைத் திணைக்களம்
http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/
http://www.nie.lk/seletguide3
பாடசாலை மாணவர்களுகான புத்தகங்களை
பதிவிறக்கம் செய்ய
http://www.edupub.gov.lk/BooksDownload.php
https://www.doenets.lk/pastpapers
https://www.doenets.lk/evaluationreports
பரீட்சைப் பெறுபேறு
https://www.doenets.lk/examresults
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் பட்டமேற் கல்வி டிப்ளோமா (PGDE) கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஆசிரியர்களாக பணிபுரிவோர்கள் தங்களுடைய வாண்மை விருத்தியை மேம்படுத்தும் முகமாக அவர்கள் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதற்கமைய ஆசிரியர்கள் பட்டமேற் கல்வி டிப்போளமா கற்கைநெறியை மேற்கொள்ள இலங்கை திறந்த பலக்கைலக்கழம் வாய்ப்பளித்துள்ளது. இந்த வகையில் கற்பதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இணைத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ள கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்து பெறறுக் கொள்ள முடியும்.
விண்ணப்பங்கள் எல்லாமே ஒன்லைன்ட் மூலமாக மேற்கொள்ளப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதன் 10.01.2021 தொடக்கம் 21.02.2021 ஆந் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் .
மாணவர்களின் உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் திட்டம்
2017, 2018, 2019 ஆகிய வருடங்களில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்காக வட்டியில்லாத அடிப்படையில் கடன் வசதியை வழங்கி உயர்கல்வியைத் தொடர அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இதனை பெற்றுக்
கொள்ளும் முகமாக கல்வி அமைச்சு அதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
நீங்கள் அதற்கான
விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள இந்த லிங்கினை கிளிக் செய்யவும்.
உங்களை பதிவு செய்வதன் ஊடாக விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் அதற்காக கீழே உள்ள லிங்களை கிளிக் செய்யவும்.
Application உங்களுக்கான விண்ணப் படிவத்தனை பெற்று்க் கொள்ள
26 ஆக., 2011
Free call from Facebook
28 மார்., 2011
How unlock PDF file
அடுத்து இங்கே சென்று உங்கள் PDF திறக்கவும்
2nd .................. click here (you can crack 7MB only)
Next down load here
Next another one here ........................
29 டிச., 2010
அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப் கணினி விடயம்
உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்.

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.
இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.
அதன் படி
1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.
பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.
2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்
உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.
3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.
4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்
உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.
5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்
அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.
6) அடோப் பிளாஸ் - 1.5 பில்லியன் பாவனையாளர்கள்
அடோப் பிளாஷ், இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும்.
1 டிச., 2010
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 1 - 2010
எயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.
ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












