தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! என்ற நூலில் இருந்து..



01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.
03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.
05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.
06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பபை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.
09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.
10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.
11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.
12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.
13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.
தோல்விக்கான முக்கிய 25 காரணங்கள்.
01. வாழ்வில் இலட்சியமோ குறிக்கோளோ இல்லாமல் இருப்பது.
02. மற்றவர்களின் வேலைகளில் மூக்கை நுழைப்பது.
03. போதுமான படிப்பறிவு இல்லாதது.
04. சுய கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, உறங்குவது, வாய்ப்புக்களை அலட்சியம் செய்வது.
05. சராசரிக்கு மேல் குறி வைக்கும் குறிக்கோள் இல்லாதிருப்பது.
06. ஒருவன் தான் ஆரம்பிப்பதை கடைசிவரை விடா முயற்சியோடு தொடராமல் இருப்பது.
07. எதிர்மறை மனோபாவம் ஒரு பழக்கமாக இருப்பது.
08. எதுவுமே இல்லாமல் ஒன்றைப்பெற ஆசைப்படுவது, சூதாட்டம் போல கஷ்டப்படாமல் எல்லாம் வருமென எண்ணுவது.
09. முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பது, எடுத்த முடிவில் நிலையாக நிற்க முடியாமல் அடிக்கடி மாறுவது.
10. தவறான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது ( உ.ம். – அழகுக்காக )
11. வரவையும், செலவையும் திட்டமிடாமல் இருப்பது.
12. திட்டமிட்டு நேரத்தை பயன்படுத்தாமலிருப்பது.
13. விசுவாசமாக இருக்க வேண்டியவரிடம் விசுவாசம் இல்லாமல் இருப்பது.
14. கட்டுப்படுத்த முடியாத தலைக்கனம் திமிர்.
15. அடுத்தவர்களை பழிவாங்க நினைப்பது.
16. அடுத்தவர் உறவுகள் பற்றி தீய வதந்தி பேசும் பழக்கம்.
17. பிரபஞ்ச அறிவு இருப்பதை நம்ப மறுப்பது.
18. நல்ல பலன்களை பெற எப்படி பிரார்த்திப்பதென தெரியாதிருப்பது.
19. தனக்கு தேவையான அனுபவம் உள்ளவரிடம் ஆலோசனை பெறாமல் இருப்பது.
20. சொந்தக் கடன்களை திருப்பித் தருவதில் அக்கறையற்று இருப்பது.
21. பொய் பேசுவது அல்லது உண்மைகளை திரித்துப் பேசுவது.
22. வேலைகளை தள்ளிப் போடுவது.
23. திருப்பிச் செய்யாமல் அடுத்தவரிடம் மீண்டும் உதவி கேட்பது.
24. வியாபாரத்தில் தொழில்களில் வேண்டுமென்றே நேர்மையற்று நடப்பது.
25. பொய் பேசுவதை தேசியப் பழக்கமாகக் கொள்வது. இவைகள் அனைத்தும் தோல்விக்கான 54 காரணங்களில் முக்கியமான 25 காரணிகளாகும்.

கருத்துரையிடுக