தமிழ் எழுத்துருக்களைப் பேச்சு(எம்பி3) வடிவில் மாற்ற..









வலையில் உலவிக்கொண்டிருந்த போது வியப்பான செய்தி ஒன்றைக் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையத்தில் தமிழ் எழுதுவதே கடினமாக இருந்தது. பிறகு யுனிகோடு வரவால் இணையத்தில் தமிழ் எழுதுவது பரவலானது. என்.எச்.எம், அழகி, இகலப்பை உள்ளிட்ட இலவச மென்பொருள்களை யாவரும் எளிய முறையில் பயன்படுத்தியதால் இணையத்தில் தமிழ் இணையில்லா வளர்ச்சி பெற்றது. வெவ்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த பல இணையதளங்களும் யுனிகோடு முறைக்கு மாறும் நிலை வந்தது.

இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……

இணையத்தில் தமிழ் நூல்கள் பிடிஎப் முறையிலும்,
யுனிகோடு முறையிலும் பரவலாகக் கிடைக்கும் நிலையில் 
ஒலி வடிவிலான தமிழ் தரவுகள் சற்று குறைவான நிலையிலேயே கிடைக்கும் நிலைஉள்ளது.

வெற்றிப்படிகள்

சொற்பொழிவுகளின் வானொலி ஒலிக்கோப்புகள்

ஒலிப்புத்தகங்கள்

என எம்பி 3 வடிவில் தமிழ்த் தரவுகள் கிடைக்கின்ற நிலையில்…..
தமிழ் எழுத்துருக்களை பேச்சுருக்களாக மாற்றும் வசதியை நீண்ட நாட்களாகவே எதிர்நோக்கியிருந்தேன்..

ஆம் ஆங்கில எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள

ஸ்போக்கன் டெக்ஸ்ட்
ஓட்காட்ஸ்ட் என பல இணையதளங்கள் அணிவகுத்து நின்றாலும் தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள ஒரு வசதி இல்லையே என எண்ணியதுண்டு.

அச்சூழலிலும் தமிங்கில முறையில் தமிழ் எழுத்துருக்களை அத்தளங்களில் இட்டு ஒலிக்கோப்பாக முயன்றேன்.

இந்நிலையில் இன்றைய தேவையைக் கருத்தில் கொண்டு யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக ஆக்கிக்கொள்ள உதவுவதாக ஒரு இணையதளத்தைக் கண்டேன்.

இணையதள முகவரி

செய்முறை விளக்க முகவரி
 
இந்த தளத்துக்குச் சென்று நீங்கள் மாற்ற வேண்டிய யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை அந்த கட்டத்தில் இட்டு சமர்ப்பிக்கவும்.
பிறகு பதிவிறக்கினால் எம்பி3 வடிவில் கிடைக்கும்.

நீ்ங்கள் இடைவெளி, புள்ளி இட்டதற்கு இணங்க ஓர் ஆணின் குரலில் உங்கள் தமிழ்ப்பதிவு ஒலிக்கும்.

இணையத்தில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இதைக் கருதுகிறேன்.

ஆம் எழுத்துக்களைப் படிக்கும் நிலைக்கு ஒரு மாற்றாக இவ்வொலி முறை அமையும். 

சங்க இலக்கியம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வடிவில் உருவாக்கிக்கொள்ள இம்முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

இதனை இணைய இணைப்பின் போது மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
மாறாக ஒரு மென்பொருளாக உருவாக்கி ஆப்லைன் எனப்படும் இணைய இணைப்பில்லா நிலையிலும் பயன்படு்த்தும் வசதியை ஏற்படுத்தினால் மேலும் நன்றா

கருத்துரையிடுக